இதுதொடர்பாக, உதயநிதி தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து புதரில் வீசப்பட்டதில் அக்குழந்தை உயிரிழந்தது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். இச்சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளைக் கண்டுபிடித்துக் கடுமையான தண்டனையைக் காவல்துறை பெற்றுத்தர வேண்டும். வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த #SofaModel ஆட்சியில் தமிழ்நாட்டில் தினசரி தொடர்கதை ஆவது கண்டிக்கத்தக்கது. தேர்தல் பிரச்சாரத்தில் சட்டத்துக்குப்புறம்பாக வாக்குக்கேட்பதற்கான tool...
Category: TamilNadu
மீன்பிடி தடைக்காலம் நாளையுடன் நிறைவு: கடலுக்கு செல்ல தயாராகும் மீனவர்கள்
கடலில் மீன்வளத்தை பெருக்க, அவற்றின் இனப்பெருக்க காலத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் கோடைகாலத்தில், நாட்டின் கிழக்கு கடற்கரையில் அமைந்துள்ள தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் ஏப்.15 முதல் ஜூன் 14-ம் தேதி வரையிலான 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள், மீன் பிடிக்க கடலுக்குச் செல்ல மத்திய அரசு தடை விதித்துள்ளது. அதேபோல், கேரளம் உள்ளிட்ட மேற்கு கடற்கரைப் பகுதிகளில், அரபிக் கடலில் ஜூன் 1-ம் தேதி முதல் 61 நாட்களுக்கு மீன்பிடி தடைக்காலம்...
”உதறல்நிதி.. உளறல்நிதி… கிறுக்குநிதி..” – உதயநிதியை கடுமையாக சாடிய தவெக.!
இதுதொடர்பாக தவெக ஐடி விங் பதிவிட்டுள்ளதாவது: ஸ்ரீவைகுண்டம் விவகாரத்தில் புகார் பெறப்பட்ட உடனே அதிரடியாகக் கைது செய்து, சிறையிலடைத்து, விரைந்து நடவடிக்கை எடுத்ததை நாடே அறியும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்கவே இயலாது. காரணம், இது மக்கள் விரும்பும் முதல்வரான நம் வெற்றித் தலைவரின் அரசு. இன்னும் சொல்லப் போனால் இது மாடர்ன் மனுநீதிச் சோழன் அரசு. தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், எத்தகைய நிலையில் இருந்தாலும் தண்டிக்கப்படுவது உறுதி. அதே சமயத்தில்...
”Fake Narrative Set செஞ்சீங்க… ஆனா இப்போ?” – விஜயை வெளுத்து வாங்கிய உதய்..!
இதுதொடர்பாக உதயநிதி தன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் Fake Narratives set செய்த இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்து இருக்கிறார். இந்தியாவிலேயே 2 ஆவது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது – இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 percent மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் – பெண் கல்வி – ...
கைது செஞ்சா மட்டும் போதுமா? – விஜய் அரசுக்கு பா.ரஞ்சித் கேள்வி!
இதுதொடர்பாக, பா.ரஞ்சித் தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, ”தவெக தலைமையிலான தமிழக அரசே இனியும் காலம் தாழ்த்தாமல் ஆணவப்படுகொலைக்கு எதிரான தனிச் சட்டத்தை உடனடியாக இயற்றிடு! தென்மாவட்டங்களில் குறிப்பாக, நெல்லை,தூத்துக்குடியில் சமீபகாலமாகத் தொடர்ந்து நிகழக்கூடிய சாதி ஆணவப்படுகொலைகள் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இந்நிலை தொடர்ந்து நீடிப்பது ஆரோக்கியமான சமூகத்திற்கு அரண் சேர்க்காது.இந்நிலையில் கடந்த இருதினங்களில் அதாவது, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடியில் நடந்தேறிய சாதி ஆணவக்கொலையை நீலம் பண்பாட்டு மையம் மிக வன்மையாகக் கண்டிக்கிறது! கங்கைகொண்டான் சிப்காட் தனியார்...
தவெகவிற்கு எதிராக களமிறங்கிய கம்யூனிஸ்டுகள்… தாக்குப்பிடிப்பாரா விஜய்?
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையை பெறாத தவெகவிற்கு, வெளியில் இருந்து ஆதரவு அளித்தது திமுக கூட்டணியில் இருந்த சிபிஐ. அமைச்சரவையில் இடம்பெறுவார்களா? திமுக கூட்டணியில் இருந்து வெளியேறி தவெகவுடன் கூட்டணி சேருவார்களா? போன்ற பல்வேறு கேள்விகள் எழுந்தன. இந்த நிலையில் தான், திமுக கூட்டணியில் இருந்த மற்றொரு கட்சியான விசிக, ஆட்சியில் பங்கு பெற்றதால், கம்யூனிஸ்டுகள் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களோ ஜனநாயகத்தை காப்பாற்ற மட்டுமே தவெகவிற்கு ஆதரவளித்தோம். அதுவும் வெளியில்...
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்துக்களை மீட்க நடவடிக்கை: அறிக்கை கேட்கும் உயர்நீதிமன்ற கிளை
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் உபகோயில்களுக்கு சொந்தமான சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். புனரமைப்பு பணியை விரைந்து முடித்து கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை, கோயில் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும் என சேலம் ராதாகிருஷ்ணன் என்பது பொது நல வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் 2025ல் விசாரணையின்போது கோயில் தரப்பு மீனாட்சி அம்மன் மற்றும் அதன் உப கோயில்களுக்கு சொந்தமாக மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இடங்கள் தொடர்பாக...
கூண்டோடு ராஜினாமா.. காலியான உதகை.. கடும் கொந்தளிப்பில் எடப்பாடி டீம்!
அதிமுக சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி அணி – வேலுமணி & சிவி சண்முகம் அணி என இரண்டாக பிரிந்து நிற்கிறது. அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் இங்கே தாவுவதும் அங்கே இணைவதுமாய் கபடி ஆடிக்கொண்டுள்ளனர். அதிருப்தி எம்.எல்.ஏ. மா.செ. ஆகியோரது பதவிகளை பிடுங்கி தன் ஆதரவாளர்களை நியமித் திருக்கிறார் எடப்பாடி அவரின் ஆசியில் பதவி பெற்றவர்கள், அவரவர் மாவட்டங்களில் நடத்தும் வானவேடிக்கை, சொந்த கட்சிக்குள்ளேயே அந்த மோதலை உருவாக்கிக்கொண்டிருக்கிறது. பட்டியலில் நீலகிரி மாவட்டமும் அடக்கம். அங்கு கப்பச்சி விநோத்தை நீக்கிவிட்டு மாஜி...
பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய், ஸ்டாலின் நேரில் அஞ்சலி
மேலும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரமுத்து, இசையமைப்பாளர் கங்கை அமரன், நடிகர் சூர்யா உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றிய நடிகை ராதிகா மற்றும் சுகன்யா உள்ளிட்டோரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். திரையுலகப் பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், ரசிகர்களும் பாரதிராஜாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்து அவரது வீட்டில் குவிந்து வருகின்றனர். நீலாங்கரையில் பாராதிராஜா இல்லத்திற்கு சென்று முதல்வர் விஜய் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி இருந்தார். இதை தொடர்ந்து...
இனி சொந்த வீடு கட்டவே முடியாதா?
தமிழ்நாட்டில் கட்டுமானத்துறை என்பது மந்த நிலையைச் சந்தித்து வரும் நிலையில், அத்தியாவசிய கட்டுமானப் பொருட்களான ஜல்லி, எம்.சாண்ட் மற்றும் பி.சாண்ட் ஆகியவற்றின் விலையானது யூனிட்டுக்கு தலா ரூ.500 வரை உயர்ந்துள்ளது. அதாவது, ரூ 3300-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் ஜல்லியானது ரூ 500 உயர்ந்து ரூ 3800-க்கும், ரூ 4000 விற்கப்பட்ட ஒரு யூனிட் எம்.சாண்ட் ரூ 500 உயர்ந்து ரூ 4500-க்கும், ரூ.5000-க்கு விற்கப்பட்ட ஒரு யூனிட் பி.சாண்ட் ரூ 500 உயர்ந்து ரூ 5500-க்கு விற்பனை செய்யப்படுகிறது....










