திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைச் சேகரிக்குமாறு வட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த சுற்றறிக்கை உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். சர்ச்சையைக் கிளப்பிய சுற்றறிக்கை குஜிலியம்பாறை வட்டாட்சியர் அய்யாசாமி வெளியிட்டதாக நேற்று (ஆகஸ்ட் 18) தேதியிட்ட சுற்றறிக்கை ஒன்று வெளியானது. அதில், தங்கள் வட்டத்திற்கு உட்பட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் உள்ள இந்திய...
Category: TamilNadu
“எங்கள் மாநிலத்தை காப்பாற்ற எங்களுக்கு தெரியும்”… விஜயை எச்சரித்த டி.கே.சிவக்குமார்!
ஆகஸ்ட் 15ஆம் தேதி சாம்ராஜ்நகரில் உள்ள காவிரி வனவிலங்கு சரணாலயத்தில் கர்நாடக வனத்துறை அதிகாரிகளுக்கும் 3 தமிழர்களுக்கும் இடையே நடந்த மோதலில் அந்தோணி சாமி, ஜான் ரோஸ் பீட்டர், மற்றும் குமார் ஆகிய மூவரும் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தை தமிழ்நாட்டின் முதலமைச்சர் விஜய் “படுகொலை” என்று கூறிய நிலையில், வேட்டையாடுவதைத் தடுக்கும் நடவடிக்கையின்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பேரும் கொல்லப்பட்டதாக கர்நாடக அரசு தெரிவித்த விளக்கத்தையும் அவர் நிராகரித்தும் இது குறித்தான கர்நாடக அரசு விளக்கம்...
விஜய் அலுவலகம் மாற்றம் ஏன்? தனிப்பட்ட காரணமா? ஆதவ் தந்த விளக்கம்!
மானியக் கோரிக்கை மீதான விவாதத்தின்போது பேசிய முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு, முதலமைச்சர் அலுவலகம் மாற்றப்படுவதற்கான காரணம் மற்றும் அதற்கான பணிகள் தொடர்பாக கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, அலுவலக மாற்றம் முதல்வரின் தனிப்பட்ட வசதிக்காக மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தார். தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை சந்திக்க வரும் அரசு அதிகாரிகள், வெளிநாட்டு பிரதிநிதிகள் மற்றும் பிற பார்வையாளர்கள் காத்திருப்பதற்கு போதுமான வசதிகள் இல்லை என்றும் அவர் கூறினார். முதலமைச்சரைச் சுற்றி பணியாற்றும் அதிகாரிகள் மற்றும்...
3 தமிழர்கள் சுட்டுக்கொலை விவகாரம்: அமைச்சரை கண்டித்த சபாநாயகர்..!
கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் அருகே வனப்பகுதிக்குள் கால்நடைகளை தேடிச் சென்ற 3 தமிழர்கள் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தனர். அவர்கள் மான் வேட்டையில் ஈடுபட்டதாக கர்நாடக வனத்துறை தரப்பில் கூறப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. திமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட உறுப்பினர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றும், சம்பவம் தொடர்பாக...
தொடர் விலை ஏற்றத்தில் தங்கம் விலை … நகை ப்ரியர்கள் அதிர்ச்சி!
தங்கம் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று மீண்டும் விலை உயர்ந்துள்ளது. நேற்று சவரனுக்கு ரூ.400 அதிகரித்த நிலையில், இன்று சவரனுக்கு மேலும் ரூ.160 உயர்ந்துள்ளது. இதனால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னையில் இன்று (ஆகஸ்ட் 18) “ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,14,320-க்கு” விற்பனை செய்யப்படுகிறது. நேற்று “ஒரு சவரன் ரூ.1,14,160-க்கு” விற்பனையான நிலையில், இன்று ரூ.160 அதிகரித்துள்ளது. அதேபோல், “ஒரு கிராம் தங்கத்தின்...
மைக்கை பிடுங்குங்க… அடுத்தடுத்து வார்த்தைவிட்ட அமைச்சர்கள்… டென்ஷனான சபாநாயகர்..!
சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, திமுகவை விமர்சிக்கும் வகையில் கருத்துகளை முன்வைத்தார். இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அமைச்சர் பேசிய குறிப்பிட்ட பகுதியை ஏற்க முடியாது என தெரிவித்த சபாநாயகர், அந்த கருத்தை அவைக்குறிப்பில் இருந்து நீக்கினார். இதனைத் தொடர்ந்து மேகமலை விவகாரம் தொடர்பான விவாதத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். தொடர்பாக குறிப்பிட்ட கருத்துக்கும் திமுக தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து அந்த குறிப்பிட்ட...
லாலா கடை பர்பி சாப்பிட்டவருக்கு உடல்நலக்குறைவு… ஆக்ஷன் எடுத்த அதிகாரிகள்..!
எடப்பாடி நகராட்சிக்குட்பட்ட வெள்ளாண்டிவலசு பகுதியைச் சேர்ந்த சிவானந்தம் என்பவர், எடப்பாடி பேருந்து நிலையத்தில் செயல்பட்டு வரும் லாலா ஸ்வீட்ஸ் கடையில் தேங்காய் பர்பி வாங்கியுள்ளார். அதனை வீட்டில் சாப்பிட்ட சில மணி நேரங்களில் வாந்தி மற்றும் தலைசுற்றல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கடை நிர்வாகத்திடம் புகார் அளித்தபோதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து சிவானந்தத்தின் உறவினர்கள் உணவு பாதுகாப்புத் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட கடைக்குச் சென்ற அதிகாரிகள், அங்கு ஆய்வு...
உதயநிதியிடம் மன்னிப்பு கேட்ட முதலமைச்சர் விஜய்.. நடந்தது என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று (ஆகஸ்ட் 17) மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் பேசிய தவெக அமைச்சர் ரஞ்சித்குமார், முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞர் கருணாநிதியின் பெயரை குறிப்பிட்டு பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அமைச்சரின் பேச்சுக்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததுடன், கண்டனமும் தெரிவித்தனர். இதனால் அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து, முதலமைச்சர் விஜய் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிப்புகளை வெளியிடும்போது இந்த விவகாரம் குறித்து பேசினார். அப்போது, முன்னாள் முதலமைச்சர்...
எல்லை மீறிய அமைச்சர்… மீண்டும் மீண்டும் நீக்கப்பட்ட பேச்சு.. இதுக்கு இல்லையா சார் ஒரு END?
அமுதன் கொலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கொண்டு வந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது விவாதம் நடைபெற்றது. அப்போது, மாணவர் கொலைக்கு பின்னணியில் போதைப்பொருள் விவகாரம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டியதுடன், சட்டம்-ஒழுங்கு தொடர்பாகவும் அரசை விமர்சித்தார். இதற்கு பதிலளித்த தவெக அமைச்சர் நிர்மல் குமார், திமுக ஆட்சிக் காலத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்ததாகக் குற்றம்சாட்டினார். மேலும், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்குடன் முதலமைச்சர் குடும்பத்தினருக்கு தொடர்பு இருந்ததாகவும் அவர்...
கோவை மாணவர் கொலை விவகாரம்: சரவெடியாய் வெடித்த உதயநிதி..!
தமிழ்நாடு சட்டப்பேரவை நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று மீண்டும் கூடியது. அப்போது, கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை தொடர்பாக திமுக சார்பில் கொண்டு வரப்பட்ட கவன ஈர்ப்பு தீர்மானம் ஏற்கப்பட்டு விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமுதன் கொலை சம்பவத்தை கோஷ்டி மோதல் எனக் குறிப்பிடுவதை ஏற்க முடியாது என்று அவர் தெரிவித்தார். இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இந்த சம்பவம் நடைபெறவில்லை என்றும், 20 பேர் சேர்ந்து...










