தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில் தற்போது தமிழ்நாட்டின் 2026-2027 ஆம் ஆண்டுக்கான முதல் பட்ஜெட் தாக்கல் இன்று நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் தாக்கலில் ஏராளமான திட்டங்களும் மற்றும் அதற்கான நிதி ஒதுக்கீடும் பற்றி விரிவாக விவரிக்கப்பட்டது. அதில் முக்கிய அறிவிப்பாக அரசு ஊழியர்களுக்கான பல சிறப்பு சலுகைகளை அரசு அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு, தமிழக அரசு செயல்படுத்தி வரும் மருத்துவ காப்பீட்டு...
Category: TamilNadu
தமிழ்நாடு பட்ஜெட் 2026–27: முதலமைச்சரின் தாய்மாமன் சீர்……இவ்வளவு கோடி நிதி ஒதுக்கீடா?
தமிழக சட்டமன்றத்தில் 2026–27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் என். மரிய வில்சன், தவெக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘தாய்மாமன் சீர் திட்டம்’ குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இத்திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது. தமிழக பாரம்பரிய மரபை போற்றும் வகையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என...
பட்ஜெட்டுக்கு புது லுக்கில் வந்த விஜய்.. சில்வர் புளூ சட்டையின் ரகசியம் என்ன?
இதற்கு முன்பு நடைபெற்ற முக்கிய அரசு நிகழ்ச்சிகள் மற்றும் சட்டமன்றக் கூட்டங்களில் கருப்பு நிற பிளேஸர் அல்லது கோட்-சூட் அணிந்து வந்த முதலமைச்சர் விஜய், இந்த முறை எளிமையான சில்வர் புளூ நிற சட்டையில் பேரவைக்கு வந்திருந்தார். அவரது இந்த உடைத் தேர்வு அரசியல் வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளாக மாறியுள்ளது. பட்ஜெட் போன்ற முக்கிய நாளில் முதலமைச்சர் எளிமையான தோற்றத்தைத் தேர்வு செய்திருப்பது திட்டமிட்ட முடிவாக இருக்கலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. நிதி நிலை, அரசின்...
பட்ஜெட் அறிக்கையுடன் ஜெப மாலை… அமைச்சர் மரியவில்சன் மீது எழும் விமர்சனங்கள்!
அப்போது, பட்ஜெட் ஆவணத்துடன் அவரது கையில் ஜெப மாலை இருந்தது கவனத்தை ஈர்த்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் வெளியாகியதைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. பட்ஜெட் உரையைத் தொடங்கிய அமைச்சர், தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணா ஆகியோரை தங்களது கொள்கை வழிகாட்டிகளாகக் குறிப்பிட்டார். அதே நேரத்தில், ஜெப மாலையுடன் அவைக்கு வந்தது அந்த நிலைப்பாட்டுடன் முரண்படுவதாக எதிர்க்கட்சிகள் மற்றும் சில அரசியல் விமர்சகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு முன்பாக, பட்ஜெட்...
தவெகவின் முதல் பட்ஜெட் தாக்கல்……மகளிருக்கான உரிமைத் தொகை இடம்பெறுமா?
முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசின் முதல் முழுமையான பட்ஜெட் இன்று தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்படுகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் சட்டசபை கூட்டத்தில், 2026–27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதி அமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்கிறார். புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால் அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. பட்ஜெட்டை தயாரிக்கும் பணியில் கடந்த சில வாரங்களாக முதலமைச்சர் விஜய் அனைத்து துறை அமைச்சர்கள், செயலாளர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை...
”அவர் தாங்க எதிர்க்கட்சித் தலைவரு…” – உதயநிதிக்கு ஆதரவாக இபிஎஸ்…!
தஞ்சையில் நேற்று(ஆகஸ்ட் 03) திமுக சார்பில் காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தவெக அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து நட்த்தப்பட ஆர்ப்பாட்டத்தில் முதலமைச்சர் விஜயையும், நடிகையையும் இணைத்து ஆபாசமாக பேசியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், இன்று (ஆகஸ்ட் 04) எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளதோடு, சட்டப் போராட்டத்தையும் மேற்கொண்டுள்ளனர். உதயநிதியின் கைதுக்கு ஆதரவாக தவெகவினர் ஸ்வீட்ஸ் கொடுத்து கொண்டாடி வரும் நிலையில், அவரது கைதை...
ரசிகர் மன்ற தலைவருக்கு அரசு பதவி… இதுக்கு இல்லையா சார் ஒரு END?
திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் Fact Check Unit-க்கு, தற்போதைய தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியில் Information Integrity Desk (IID) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக Online Thalapathy Fans Club தலைவரான குரு (@Guru Thalaiva) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR)-யின் கீழ் இயங்கும் சமூக வலைதளப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக (Special Officer), தவெக ஐ.டி. விங்...
இது அரசு ஆப்பா? தவெக ஆப்பா? கன்ஃபூஸான TNSTC பயனாளிகள்..!
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு, பல்வேறு அரசு துறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சில திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதுடன், போக்குவரத்துத் துறையிலும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழைய பேருந்து கொள்முதல் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய பேருந்துகளை வாங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய பேருந்துகள் த.வெ.க. கொடி வண்ணங்களில் வர்ணம் பூசப்பட்ட புகைப்படங்களும் அண்மையில் இணையத்தில் பரவின....
ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல் தான்… ஸ்டாலின் தாக்கு..!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் குடும்பங்கள் புகார் அளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொண்டிருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பகிர்ந்து வரும் புகார்கள் மற்றும் வேதனைகளைப் பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். மின்கட்டணக் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள தவறுகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு, அதற்கு உரிய தீர்வு காணப்படும் வரை பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால...
கர்நாடக அரசுக்கு செக்…..காவிரி மேலாண்மையின் அதிரடி உத்தரவு….!
காவிரி நீர் பங்கீடு தொடர்பான கர்நாடகா தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வரும் நிலையில் தற்போது அதற்கு செக் வைக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேசிய போது காவிரியில் இருந்து 29-ந்தேதி முதல்...










