மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் இணைந்து இந்தச் சோதனையை நடத்துகின்றன. பேரிடர் காலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே நேரத்தில் எச்சரிக்கை தகவல்களைக் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். ‘செல் பிராட்காஸ்டிங்’ எனப்படும் இந்தத் தொழில்நுட்பம், செல்போன் கோபுரங்களின் (Tower) எல்லைக்குள் இருக்கும் அனைத்து செல்போன்களுக்கும் ஒரே நேரத்தில் தகவலை அனுப்பும். உங்கள் செல்போன் ‘சைலண்ட்’ (Silent) பயன்முறையில் இருந்தாலும், இந்த...
Category: TamilNadu
5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தெரிந்து கொள்ள பிரத்யேக இணையதளம்
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் மே 4-ம் தேதி காலை 8 மணி முதல் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலிருந்து கீழ்காணும் இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள https://results.eci.gov.in/ என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரத்யேகமான இணையதளத்தில் ஒவ்வொரு தொகுதியின் சுற்று வாரியான நிலவரங்களும், முடிவுகளும் நொடிக்கு நொடி புதுப்பிக்கப்பட்டு, வெளியிடப்படும். இது தவிர...
மதுரை சித்திரை திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்
மதுரை சித்திரை திருவிழா முதலில் மீனாட்சிக்கும், பிறகு அழகருக்கும் என மொத்தம் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெறும். 2026ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம்19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் என மீனாட்சி திருவிழா முடிந்த பிறகு அழகர் திருவிழா தொடங்கும். அப்படி அழகர் கோயிலில் இருந்து புறப்படும் அழகரை பக்தர்கள் தோளிலேயே சுமந்து சென்று மதுரைக்கு வந்து ஆடி பாடி மகிழ்வித்து மீண்டும் அழகர் மலைக்கு அழைத்து செல்வது வழக்கம்....
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை கடும் உயர்வு: உணவு பொருட்கள் விலை உயர வாய்ப்பு
ஈரான் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றியமைத்து வருகின்றன. இந்த நிலையில், மே மாதத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ....
தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் வெளி மாநில ஐஏஎஸ் அதிகாரிகள்: தேர்தல் ஆணையம் முடிவு
வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். தமிழ்நாட்டில் 62 வாக்கு எண்ணிக்கை மையங்களில் மே 4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்துகிறார். வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு QR Code மற்றும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அவசியம் என...
விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி திடீர் இடமாற்றம்
நடிகரும், தவெக தலைவருமான விஜய்யிடம் அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரி, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். இந்த மனுவில் கடந்த 2021ஆம் ஆண்டு முதல் தனது கணவர் விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்திற்கு மீறி உறவில் இருந்ததாக சந்தேகித்து, மன உளைச்சல் ஏற்பட்டது என குறிப்பிட்டிருந்தார். கடந்த நான்கு வருடங்களாக ஒரே வீட்டில் வசித்தும் தனித்தனியாகவே வாழ்ந்து வரும் நிலை உள்ளது...
தனிநபர் 4.5 லிட்டர் மது வைத்து கொள்ள விலக்கு: பாண்டிச்சேரிக்கு பொருந்தது, உயர்நீதிமன்றம் உத்தரவு
மீஞ்சூர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ஆந்திர மாநிலத்திலிருந்து 3.4 லிட்டர் மதுபானத்தை விற்பனைக்காக கொண்டு வந்ததாக, எளாவூர் சோதனைச் சாவடியில் கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் தங்கள்மீது வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், தமிழ்நாடு அரசாணையின் படி 4.5 லிட்டர் வரை மதுபானத்தை தனிப்பயன்பாட்டிற்காக வைத்திருக்கலாம் என்றும், தாங்கள் கொண்டு வந்த மதுபானம் தங்களின் சொந்த பயன்பாட்டிற்காகவே என்றும் எனவே இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்...
மதுப்பிரியர்களே உஷாராயிருங்க : மே 1-ம் தேதி டாஸ்மாக் விடுமுறை
குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, திருவள்ளுவர் தினம், சுதந்திர தினம், வள்ளலார் நினைவு நாள், மஹாவீர் ஜெயந்தி, உழைப்பாளர் தினம், மிலாடி நபி, மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் நாட்கள், கோவில் பண்டிகைகள், உள்ளூர் திருவிழா காலங்களில் அவ்வப்போது உள்ளூர் விடுமுறை விடுவது வழக்கம். அதே போன்று தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி ஏப்ரல் 21,22,23 ஆகய 3 தினங்கள் ஏற்கனவே டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மே 1-ம் தேதி தொழிலாளர் தினத்தை...
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: அம்மா உணவகத்தில் இட்லி,சப்பாத்தி விற்பனை நிறுத்தம்
சென்னை மாநகராட்சியில், 383 ‘அம்மா’ உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.. இந்த உணவகங்களில், காலையில் 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு பொங்கல்; மதியம் 3 ரூபாய்க்கு தயிர் சாதம், 5 ரூபாய்க்கு லெமன் சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம்; இரவில் 3 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்திகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ‘அம்மா’ உணவகங்கள் வாயிலாக ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டாலும், ஏழை, எளிய மக்களின் பசி போக்கும் வகையில், அம்மா உணவகங்கள்...
மே 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை தமிழக அதிகாரிகளுக்கு நாளை பயிற்சி
கூடுதல் தேர்தல் அதிகாரி சிவஞானம் தலைமையில் நடைபெறும் இந்தப் பயிற்சியில், ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களான தேர்தல் அலுவலர்களுக்கு வாக்கு எண்ணும் பணியின் அனைத்து அம்சங்களும் விரிவாக விளக்கப்படும். பயிற்சியின் முக்கிய அம்சங்களில், வாக்கு எண்ணும் மையத்தில் எவ்வாறு ஒழுங்காகவும், வெளிப்படையாகவும், நேர்மையாகவும் செயல்பட வேண்டும். EVM இயந்திரங்கள் மற்றும் VVPAT இயந்திரங்களை கையாளும் முறை, தபால் வாக்குகளை எண்ணும் நடைமுறை, தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகள், பாதுகாப்பு நெறிமுறைகள், சாத்தியமான முறைகேடுகளைத் தடுக்கும் வழிமுறைகள் உள்ளிட்ட பல்வேறு...










