Category: TamilNadu

Home TamilNadu
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு…
Post

திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு…

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர்  செய்து  தவெகவில் இணைந்துள்ளனர்.இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக்கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த...

பள்ளிகளில் கீர்த்தனாவுக்கு NO ENTRY-ஆ? அமைச்சர் ராஜ்மோகன் அறிக்கையின் பின்னணி என்ன?
Post

பள்ளிகளில் கீர்த்தனாவுக்கு NO ENTRY-ஆ? அமைச்சர் ராஜ்மோகன் அறிக்கையின் பின்னணி என்ன?

அண்மையில் தவெக அமைச்சர்கள், தொண்டர்கள் செய்வது அனைத்தும் தலைமைக்கு தலைவலியாக மாறியுள்ளதாக்க் கூறப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் கீர்த்தனாவின் ஆய்வு, அவர் பேசிய “லாஸ்ட் பெஞ்ச்” கருத்து, தவெக அரசு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதாகவே விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.  அதுமட்டுமல்லாமல், பள்ளிகளில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட வீடியோவும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்த சர்ச்சைகள் எழுந்து தவெக அரசுக்கு பெரும் குடைச்சலை கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்நிலையில், இனி வரும் காலங்களில்...

கங்கைகொண்டானில் பிரம்மாண்ட தொழில் திட்டம்… ₹15,037 கோடி முதலீட்டை ஈர்த்த தமிழக அரசு!
Post

கங்கைகொண்டானில் பிரம்மாண்ட தொழில் திட்டம்… ₹15,037 கோடி முதலீட்டை ஈர்த்த தமிழக அரசு!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் திருநெல்வேலி மாவட்டம் சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், விக்ரம் சோலார் குழுமம் தமிழ்நாட்டில் ஒரகடம் மற்றும் வல்லம்...

நாளை முதல் உயரும் பால் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
Post

நாளை முதல் உயரும் பால் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் கடந்த ஓராண்டாக பால் உற்பத்தி சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பால் விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ளவும், பால் வணிகத்தை தக்கவைத்துக் கொள்ளவும் தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டு அதிக கொள்முதல் விலையை வழங்கி வருகின்றன. இந்த சூழலில்தான் ஹட்சன் நிறுவனம் ஆரோக்யா பால்...

தமிழகத்தில் அடிக்கடி மின்தடையா? இனி Permanent Solution… EB-யின் புதிய RTEP திட்டம்!
Post

தமிழகத்தில் அடிக்கடி மின்தடையா? இனி Permanent Solution… EB-யின் புதிய RTEP திட்டம்!

தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே மின்தடை என்பது அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் இரவில் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இந்நிலை மாற்றவதற்காக தமிழகம் முழுவதும் நிலையான மற்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் தடை  பிரச்னைகளை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் “Repeat Tripping Elimination Programme (RTEP)” என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துமாறு மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின்...

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… உயர்ந்த சம்பளம்..!
Post

டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… உயர்ந்த சம்பளம்..!

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கள்ளச்சந்தை மதுவிற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.  ஊதிய உயர்வின் மூலம் துணை விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களின்...

”நாடகக் காதலால் பாதிக்கப்படுவோருக்கு ஒரு அமைப்பு தேவை..” – மோகன் ஜி வலியுறுத்தல்.!
Post

”நாடகக் காதலால் பாதிக்கப்படுவோருக்கு ஒரு அமைப்பு தேவை..” – மோகன் ஜி வலியுறுத்தல்.!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி திவ்யதர்ஷினியை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல பெற்றோர் காவல் நிலையத்தில் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்கூரில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் திவ்யதர்ஷினி, ஆட்டோ ஓட்டுநர் பெருமாளை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் ஏலகிரி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில்...

அமைச்சரின் வைரல் வீடியோ: முன்னாள் அமைச்சருக்கு இந்நாள் அமைச்சர் கேள்வி..!
Post

அமைச்சரின் வைரல் வீடியோ: முன்னாள் அமைச்சருக்கு இந்நாள் அமைச்சர் கேள்வி..!

தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சமீபத்தில் அரசு பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவிகளுடன் கலந்துரையாடிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வின்போது மாணவிகளிடம் அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் கேள்விகள் எழுப்பினார். அதற்கு சில மாணவிகள் பதிலளிக்க முடியாமல் இருந்த நிலையில், அங்கிருந்த ஆசிரியையிடம் அவர், “லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்” என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையான நிலையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பதிவு பதிலடி கொடுக்கும் விதமாக இருந்தது. அதில்,...

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; நடந்தது என்ன?…..
Post

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; நடந்தது என்ன?…..

இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சதித்திட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. தகவல்களின் படி, தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நரேஷை முதன்முதலில் அசோக் குமார் தொடர்புகொண்டதாக கூறப்படுகிறது. சில எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து தங்கள் தரப்புக்கு இழுக்க வேண்டும் என நரேஷிடம் அசோக் குமார் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை திருநாவுக்கரசு மூலமாக செய்து முடிக்கலாம் என்ற யோசனையை நரேஷ் முன்வைத்ததாகவும், தவெக...

ஆஜராகாத அமைச்சர்… அடுக்கடுக்கான கேள்வி கேட்ட நீதிபதி..!
Post

ஆஜராகாத அமைச்சர்… அடுக்கடுக்கான கேள்வி கேட்ட நீதிபதி..!

புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை எழில் நகரில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனின் சகோதரர் மரிய குளோத்தி வீடு உள்ளது. இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அமைச்சருக்கும் அவரது தம்பிக்கும் இடையில் சொத்துப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் மரிய வில்சன், 2022 ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி அன்று, மரிய குளோத் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது தம்பி மனைவி கேர்லைன் கிளேட்டையும் தாக்கியதாக லாஸ்பேட் போலீஸார் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. அந்த...

× Free India Logo
Welcome! Free India