தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தால் சட்டம் ஒழுங்கு வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதைப்பொருள் விற்பனையால் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்விக்கு போதைப்பொருள் நடமாட்டமே முக்கிய காரணியாக பார்க்கப்படுகிறது. முதல்வராக விஜய் பொறுப்பேற்ற உடன் 717 டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவிட்டார். அதுமட்டுமின்றி கள்ளசந்தையில் மதுவிற்பனை முற்றிலுமாக தடுக்க கடும் நடவடிக்கையை தவெக அரசு மேற்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்கும் வண்ணம்...
Category: TamilNadu
21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு இனி டாஸ்மாக்கில் சரக்கு இல்லை
தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசு, பொறுப்பேற்றவுடனேயே மாநிலம் முழுவதும் 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டது. இந்த நிலையில், 21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனை செய்யக் கூடாது என பணியாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது துறைரீதியான நடவடுக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளது. சிறார்களிடையே மதுப்பழக்கம் அதிகரிப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கையை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. வாடிக்கையாளர்களின் வயதில் சந்தேகமிருந்தால், அவர்களின் ஆதார் அட்டை, ஓட்டுநர்...
பெரும்பான்மை நிரூபிப்பு: நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெக அரசு வெற்றி!
தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு வெற்றி பெற்றுத் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளது. தமிழக முதல்வராகப் பதவியேற்ற விஜய், ஆளுநரின் உத்தரவுப்படி இன்று சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். 107 இடங்களை வைத்திருந்த தவெக-விற்கு, காங்கிரஸ், விசிக, இடதுசாரி கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவை ஆதரவு தெரிவித்தன. மேலும், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான அதிமுகவினர் 25 பேர்...
முதல்வரின் தனிசெயலாளர்களாக அண்ணாதுரை, விஷ்ணு நியமனம்: உதயசந்திரன், அமுதா காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
தமிழக அரசின் நிர்வாகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று (மே 12) மாலை வெளியிட்டது. அதில், முன்னாள் தலைமை செயலரான முருகானந்தம் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டார். உதயசந்திரன், அமுதா, மணிவாசன், கிறிஸ்துராஜ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். நிதித்துறை செயலராக சித்திக், டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக நந்தகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். சுவர்ணா சுற்றுலா கழக முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார். விஷ்ணு முதல்வரின் கூடுதலாக செயலராக நியமிக்கப்பட்டார். அண்ணாதுரை முதல்வர்...
12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு: 95.2 சதவீதம் தேர்ச்சி, ஈரோடு முதலிடம்
தமிழகத்தில் மாநில பாடத் திட்டத்தின்கீழ் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் வெளியிட்டனர்.தமிழக பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ஆம் தேதி முதல் மார்ச் 26-ஆம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 3,412 தேர்வு மையங்களில் 8 லட்சத்து 27,475 மாணவ, மாணவிகள் எழுதினர். பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் வெளியிடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு இதுவரை புதிய...
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பில் சேர இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், 2026-27 கல்வி ஆண்டு உயர்கல்வி சேர்க்கைக்கான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழி விண்ணப்பம் தொடங்கப்பட்டது. அதனையடுத்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கு மே 7-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்குனநகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள...
செல்போனில் சைரன் சத்தம் வந்தால் பயப்பட வேண்டாம் : பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தல்
மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை, தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையங்கள் இணைந்து இந்தச் சோதனையை நடத்துகின்றன. பேரிடர் காலங்களில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் ஒரே நேரத்தில் எச்சரிக்கை தகவல்களைக் கொண்டு சேர்ப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். ‘செல் பிராட்காஸ்டிங்’ எனப்படும் இந்தத் தொழில்நுட்பம், செல்போன் கோபுரங்களின் (Tower) எல்லைக்குள் இருக்கும் அனைத்து செல்போன்களுக்கும் ஒரே நேரத்தில் தகவலை அனுப்பும். உங்கள் செல்போன் ‘சைலண்ட்’ (Silent) பயன்முறையில் இருந்தாலும், இந்த...
5 மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தெரிந்து கொள்ள பிரத்யேக இணையதளம்
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம் மற்றும் அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களின் முடிவுகள் மே 4-ம் தேதி காலை 8 மணி முதல் அனைத்து வாக்கு எண்ணிக்கை மையங்களிலிருந்து கீழ்காணும் இணையதளங்களில் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது. தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள https://results.eci.gov.in/ என்ற இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரத்யேகமான இணையதளத்தில் ஒவ்வொரு தொகுதியின் சுற்று வாரியான நிலவரங்களும், முடிவுகளும் நொடிக்கு நொடி புதுப்பிக்கப்பட்டு, வெளியிடப்படும். இது தவிர...
மதுரை சித்திரை திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்
மதுரை சித்திரை திருவிழா முதலில் மீனாட்சிக்கும், பிறகு அழகருக்கும் என மொத்தம் 20 நாட்களுக்கும் மேலாக நடைபெறும். 2026ஆம் ஆண்டு சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம்19ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம் என மீனாட்சி திருவிழா முடிந்த பிறகு அழகர் திருவிழா தொடங்கும். அப்படி அழகர் கோயிலில் இருந்து புறப்படும் அழகரை பக்தர்கள் தோளிலேயே சுமந்து சென்று மதுரைக்கு வந்து ஆடி பாடி மகிழ்வித்து மீண்டும் அழகர் மலைக்கு அழைத்து செல்வது வழக்கம்....
வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை கடும் உயர்வு: உணவு பொருட்கள் விலை உயர வாய்ப்பு
ஈரான் அமெரிக்கா இடையே நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் அந்நியச் செலாவணி மதிப்பைக் கணக்கில்கொண்டு, பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம் மற்றும் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகியவை சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் விமான எரிபொருள் விலையை ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி மாற்றியமைத்து வருகின்றன. இந்த நிலையில், மே மாதத்தில் வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று ரூ....










