10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ மாணவிகள் பொதுத் தேர்வு எழுதி வருகிறார்கள். பிளஸ் 2 தேர்வு 26-ந் தேதியுடன் முடிகிறது. எஸ்எஸ்எல்சி தேர்வு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி முடிவடைகிறது. சுமார் 17 லட்சம் மாணவ மாணவிகள் பொது தேர்வினை எழுதி முடிக்கிறார்கள். இந்த தேர்வுகள் முடிந்த பின்னால், 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறுகிறது. அரசு, உதவி பெறும் பள்ளிகள், தனியார்...
Category: TamilNadu
சென்னையில் பரபரப்பு: தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கிய ஏ.கே.47 துப்பாக்கிகள்
சென்னை அசோக் நகர் 2-வது அவென்யூ முதல் தெரு சந்திப்பில் தி. நகர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மகேந்திரா வேன் ஒன்றை நிறுத்தி பறக்கும் படையினர் சோதனை மேற்கொண்டனர்.இந்த சோதனையில் பத்து ஏகே 47 துப்பாக்கிகள் இருந்ததை கண்டு தேர்தல் பறக்கும் படையினர் அதிர்ச்சி அடைந்தனர். சோதனையில் அது டம்மி என்பது தெரிந்தது. இது குறித்து வேன் ஓட்டுநர் மகேந்திரன் என்பவரிடம்...
வாகன ஓட்டிகளுக்கு கசப்பு செய்தி : பெட்ரோல் விலையை உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு!
ஈரான் மீதான போர் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவற்றின் பின்னணியில், இந்தியாவில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ப்ரீமியம் பெட்ரோல் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளன. ஏற்கனவே எல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில், இந்த விலை உயர்வு வாகன ஓட்டிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், பிபிசிஎல் நிறுவனத்தின் ‘ஸ்பீட்’, ஹெச்பிசிஎல் நிறுவனத்தின் ‘பவர்’ மற்றும் ஐஓசிஎல் நிறுவனத்தின் ‘எக்ஸ்பி95’ ஆகிய ப்ரீமியம் பெட்ரோல்...
பறவை காய்ச்சல் எதிரொலி, 20-க்கும் மேற்பட்ட பறவைகள் உயிரிழப்பு: கிண்டி சிறுவர் பூங்கா மூடல்
சென்னை அடையாறில் காகங்களுக்கு பறவை காய்ச்சல் (H5N1) உறுதி செய்யப்பட்டதையடுத்து, தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது. பொதுமக்கள் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை நன்கு வேகவைத்து (Half-boil தவிர்க்கவும்) உண்ண வேண்டும், இறந்த பறவைகளை கைகளால் தொடக்கூடாது, மற்றும் காய்ச்சல்/மூச்சுத்திணறல் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தி இருந்தது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்காவில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுவர் பூங்காவில்...
1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 17-க்குள் முழு ஆண்டுத் தேர்வுகள்: பள்ளிகல்வித்துறை முடிவு
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்.23-ம் தேதி நடைபெறவுள்ளது. மே 4 ம் தேதி வாக்குபதிவுகள் எண்ணப்பட உள்ளன. சட்டமன்ற தேர்தல் பணிக்காக பள்ளிகள், கல்லூரிகளை தேர்தல் ஆணையம் பயன்படுத்தி கொள்வது வழக்கம். இதன் காரணமாக 1 முதல் 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கான தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடித்து, பள்ளிகளை தங்கள் வசம் ஒப்படைக்கும்படி தேர்தல் ஆணையம் பள்ளிக்கல்வித் துறையை வலியுறுத்தி உள்ளது. தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 2-ம் தேதியும், 10-ம் வகுப்புக்கான...
வாக்காளர் ஐடி இல்லையா? அப்ப இந்த 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்று இருந்த ஓட்டு போடலாம்!
இது குறித்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,”வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை காண்பிக்க வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் ஆணையிட்டுள்ளது. * ஆதார் அட்டை, * மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அடையாள அட்டை, * புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், * தொழிலாளர் நல...
இனி திரைப்படங்களில் சப்டைட்டில், ஆடியோ விவரிப்பு கட்டாயம்: மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி
இந்த அறி விப்பைத் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் (TARATDAC) உற்சாகமாக வரவேற்றுள்ளது. அரசாணை வெளியீடு இது தொடர்பாகச் சங்கத்தின் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மத்திய தணிக்கை வாரியத்திடம் சங்கம் முன்வைத்த கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. 2026 மார்ச் 15 முதல் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் மாற்றுத் திற னாளிகள் அணுகத்தக்க வகையில் (Accessible) இருக்க வேண்டும் என்ற கட்டாய உத்தரவு, 2016-ஆம் ஆண்டு சட்டத்தின் அடிப்படையில் ஒரு...
வண்டலூர் உயிரியியல் பூங்காவில் சோகம்: சர்க்கரை நோயால் பெண் மனித குரங்கு உயிரிழப்பு
சென்னை புறநகர் பகுதியான செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் அமைந்துள்ள அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, தெற்காசியாவிலேயே மிகப்பெரிய உயிரியல் பூங்காக்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. சுமார் 1,490 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்கா, இயற்கையான காப்புக்காடு சூழலில் 180-க்கும் மேற்பட்ட விலங்கு இனங்களையும், 2,500-க்கும் அதிகமான விலங்குகளையும் பராமரித்து வருகிறது.. குறிப்பாக, இங்குள்ள சிங்கங்கள் உலாவும் லயன் சஃபாரி மற்றும் மான் சஃபாரி ஆகியவை சுற்றுலாப் பயணிகளிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்ற இடங்களாகும். சுமார் 25...
தேர்தலுக்கு முந்தையை நாள் ஊர்களுக்கு டிக்கெட் போட்ட வாக்காளர்கள்: இந்தமுறையும் சென்னை தொகுதிகளில் வாக்குபதிவு சரிய வாய்ப்பு
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் பாண்டியன் விரைவு ரயில், முத்துநகர் விரைவு ரயில், கன்னியாகுமரி விரைவு ரயில், பொதிகை மற்றும் நெல்லை விரைவு ரயில்களில் ரயில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததுடன் காத்திருப்போர் பட்டியலிலும் முன்பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ளுர்வாசிகளை விட வெளியூர் வாசிகள் அதிக...
வரும் 26 ஆம் தேதி வரை புதிய வாக்காளர் அடையாள அட்டை விண்ணப்பிக்கலாம் : தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் செய்தியாளரிடம் கூறியதாவது: மார்ச் 15 ஆம் தேதி அடிப்படையில் 5.69 கோடி வாக்காளர்கள் கணக்கிடப்பட்டுள்ளனர் , அந்த எண்ணிக்கையில் பெண்கள் 2.90 கோடி , ஆண்கள் 2.78 ஆகும் மேலும் மூன்றாம் பாலினத்தை சார்ந்த வாக்காளர்கள் 7656. அனைத்து வாக்காளர்கள் அவர்களுடைய பெயர் மற்றும் பூத் எண் சரியாக உள்ளதா என உறுதி செய்து கொள்ள வேண்டும் , அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் அடிப்படை வசதிகள் குறித்து...










