விசிக தலைவர் திருமாவளவன் பிறந்தநாளையொட்டி கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் இன்று தமிழ் தேசிய எழுச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில், உளுந்தூர்பேட்டை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று (ஆகஸ்ட் 17) நடைபெற உள்ள தமிழ் தேசிய எழுச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. மாநாட்டில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 50...
Category: TamilNadu
தவெக அரசின் 100 நாள் ஆட்சி; ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி- வீடியோ வெளியிட்ட முதல்வர் விஜய்!
தமிழகத்தில் த.வெ.க. ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்கள் நிறைவடைகின்றன. இதனையொட்டி, த.வெ.க. அரசின் 100-வது நாள் சாதனைகள் மற்றும் நிறைவேற்றப்பட்ட முக்கிய திட்டங்களைச் சுட்டிக்காட்டி முதலமைச்சர் விஜய் தனது எக்ஸ் தளத்தில் செய்தி மற்றும் வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தனது பதிவில், “100 நாள் ஆட்சி என்பது ஒரு யுகத்திற்கான மக்களின் மனசாட்சி” எனக் குறிப்பிட்டு, அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களைப் பட்டியலிட்டுள்ளார். பெண்கள் மற்றும் சமூக நல திட்டங்கள் * ரூ.560 கோடி ஒதுக்கீட்டில் ‘தாய்மாமன் தங்க...
TN Weather: தமிழகத்தில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை!
தமிழ்நாட்டில் இன்று (ஆகஸ்ட் 17) மூன்று மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இந்த நிலையில், இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், மதுரை, இராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர்...
கோட்டையில் கொடியேற்றிய முதலமைச்சர் விஜய்… அறிவித்த அதிரடி அறிவிப்புகள் என்ன?
இந்தியாவின் 80-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னை புனித ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் முதல்முறையாக தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். தமிழ்நாட்டில் தவெக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சராக விஜய் பங்கேற்கும் முதல் சுதந்திர தின விழா இதுவாகும். தேசியக் கொடியை ஏற்றிய பின்னர் சுதந்திரப் போராட்ட தியாகிகளை நினைவுகூர்ந்து வீர வணக்கம் செலுத்திய அவர், பொதுவாழ்வு, மக்கள் நலன்,...
80-வது சுதந்திர தினம்: புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்முறை தேசியக் கொடியை ஏற்றினார் முதலமைச்சர் விஜய்
இந்தியாவின் 80 வது சுதந்திர தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் முதல்முறை தேசிய கொடியை ஏற்றினார். நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் இன்று (ஆகஸ்ட் 15) முதல்முறையாகத் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தவெக கூட்டணி ஆட்சி அமைந்த பிறகு, முதலமைச்சராக அவர்...
பாட்டிலும் கையுமாக மாட்டிய அரசு பள்ளி மாணவிகள்… வைரலான வீடியோ!
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவிகள் “நீ குடிடி ஃபர்ஸ்ட், இல்ல நீ குடி, ஏண்டி வீடியோ எடுக்குற” என்று சீருடையில் மது அருந்தும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த ஜூலை மாதம் இரண்டு மாணவிகள் மது அருந்தியதாக புகார் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பள்ளி நிர்வாகம் மாணவிகளிடம் விசாரணை நடத்தியபோது, சம்பவம் பள்ளியில் நடைபெறவில்லை என்றும், வீட்டில் வைத்து நடந்ததாகவும் அவர்கள் எழுத்துப்பூர்வமாக தெரிவித்ததாக...
கரூரில் வழங்கிய அரசு பணி ஆணை செல்லுமா?… அதிரடி காட்டிய உச்சநீதிமன்றம்!
கரூரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ஆம் தேதி தவெக பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 31 பேருக்கு தமிழக அரசு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கி நியமன ஆணைகளை பிறப்பித்தது. இந்த அரசு பணி நியமனங்களை எதிர்த்து நாம் தமிழர் கட்சி நிர்வாகி தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல மனுக்களை தாக்கல் செய்தனர்....
‘வந்தே மாதரம்’ vs தமிழ்த்தாய் வாழ்த்து … சுதந்திர தின விழாவில் என்ன நடக்கும்?
கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்து தொடர்பான சர்ச்சைகள் தொடர்ந்து நீடித்து வரும்நிலையில், குறிப்பாக தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைந்த பிறகு, அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும் வரிசை தொடர்பாக பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ளன. தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற்று, முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்ற நிகழ்வின்போது தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பாக ‘வந்தே மாதரம்’ பாடல் முதலிலும் தமிழ்த்தாய் வாழ்த்து இரண்டாவதாக பாடப்பட்ட நிலையில், இது அரசியல்...
இளைஞர்களுக்கு சவால் … 51 வயதில் மருத்துவம் படிக்க களமிறங்கிய சுரேஷ்குமார்!
கல்வி கற்பதற்கு வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபித்துள்ளார் நாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த 51 வயது சுரேஷ்குமார். இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக மாறியுள்ள அவர், தனது நீண்ட நாள் மருத்துவக் கனவை தற்போது நனவாக்கியுள்ளார். பள்ளிப் படிப்பை முடித்த பிறகு மருத்துவம் படிக்க வேண்டும் என்ற ஆசை சுரேஷ்குமாருக்கு இருந்தது. ஆனால், அப்போது அவரால் அந்தக் கனவை தொடர முடியவில்லை. இதற்கிடையில், 2022-ஆம் ஆண்டு மீண்டும் மருத்துவப் படிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டு, தமிழ் வழியில் நீட்...
தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு! கவலையில் பெண்கள்
சென்னையில் இன்று (ஆகஸ்ட் 13) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,13,760-க்கும், கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14,220-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. ஒரு நாள் கணிசமாக உயர்வதும், மறுநாள் குறைவதுமாக இருப்பதால், நகை வாங்க திட்டமிடுபவர்கள் தங்கம் விலை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகின்றனர். கடந்த ஆகஸ்ட்...










