தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே மின்வெட்டு பிரச்சனை அதிகமாக இருந்து வருகின்றது,இதனால் இரவு நேரங்களில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகுந்த அவதி நிலைக்கு தள்ளப்படுகின்றனர். இதைப் பற்றி மின்சார துறையிடம் விளக்கம் கேட்டால் இதற்கு முன்னால் திமுக அரசு மின்சார துறையை பல மடங்கு கடன் சுமையில் வைத்துள்ளதாகவும். இது குறித்து முழு தகவலும் விரைவில் வெள்ளை அறிக்கை வெளியிட்டு ஆதாரப்பூர்வமாக நிரூபிப்போம் என்றும் அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் அறிவித்திருந்தார். இந்நிலையில் மின்சாரத்தின் அளவு,...
Category: TamilNadu
த்ரிஷா போட்ட பதிவு: AI விஜய்யா? “00:00” என்றால் என்ன?
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் 52 ஆவது பிறந்தநாள் நேற்று முன் தினம் (ஜுன் 22) கொண்டாடப்பட்டது. நடிகர் டூ அரசியல்வாதி டூ முதலமைச்சராக மாறியுள்ள அவருக்கு திரையுலக பிரபலங்கள், தவெக தலைவர்கள், பிற அரசியல் கட்சி தலைவர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர். இதன் தொடர்ச்சியாக, சட்டமன்ற கூட்டத்தொடரின் போது கூட முதலமைச்சர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன. இந்நிலையில், சட்டமன்றக் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று எதிர்கட்சியான திமுகவை கடுமையாக சாடி, அவருக்கே உரித்தான...
அம்மோனியா வாயு கசிவு: பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு!
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே உள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் ஒரு கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 21 ஆம் தேதி அன்று அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டது. இதில் அங்கு பணியில் இருந்த 65-க்கும் மேற்பட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டுப் பாதிக்கப்பட்டனர். உடனடியாக அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அருகே உள்ள அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே இரண்டு பெண்கள் பரிதாபமாக...
குறைந்த மின்னழுத்தம் அறிவிக்கப்படாத மின்வெட்டு முடங்கிப்போன மும்முனை மின்சாரம்! காயும் பயிர்கள் கதறும் விவசாயிகள் எப்போது கிடைக்கும் தீர்வு?
இதுகுறித்து டெல்டா விவசாயிகள் சிலரிடம் பேசினோம். அனைத்து சிரமங்களையும் தாண்டி குறுவை விவசாயத்தை தொடங்கியுள்ளோம். ளாம்.ஆனால், மின்மோட்டார்களுக்கான மும்முனை மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்று தெரியவில்லை. போதாததற்கு அடிக்கடி நிலவும் குறைந்த மின்னழுத்தத்தால் மோட்டார்கள் பருத்திச்செடிகளும் காய்ந்துவிட்டன. இயங்குவதே இல்லை. தொடர்ந்து இயக்கினால் மோட்டார் புகைந்து பழுதாகிவிடுகிறது. இதனால் வயல்கள் நீரின்றி வெடித்துப்போயிருக்கின்றன. கத்தரி, வெண்டை, தக்காளி, முள்ளங்கி என காய்கறி சாகுபடி செய்யவும் போதிய தண்ணீர் இல்லை. விலை கொடுத்து வாங்கி வைத்திருக்கும்...
தொடர் விடுமுறை சென்னையில் இருந்து 1,432 சிறப்பு பேருந்து இயக்கம்
இதுகுறித்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஜூன் 26 (வெள்ளிக்கிழமை மொஹரம் பண்டிகை), ஜூன் 27 (சனிக்கிழமை), ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) எனத் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. இதனை முன்னிட்டு ஜூன் 25, 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் மோகன் தெரிவித்துள்ளார். பயணிகளின் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகச் சென்னையின் பல்வேறு பேருந்து முனையங்களில் இருந்து குறிப்பிட்ட வழித்தடங்களின்...
விஜய் Vs உதய்.. காரசாரமாக நடந்த விவாதம்.. !
முதலமைச்சர் முன்வைத்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவையில் பரபரப்பான சூழல் நிலவிய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுநர் உரை மீதான விவாதத்துக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர் விஜய், தமிழகத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, மின்வெட்டு பிரச்சினைகள், போதைப்பொருள் புழக்கம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டினார். இந்தப் பிரச்சினைகளுக்கு முந்தைய திமுக அரசின் நிர்வாகத் தவறுகளே காரணம் என அவர் குற்றம்சாட்டினார். மேலும்,...
14 காவல்துறை அதிகாரிகளை இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு!
குறிப்பாக சென்னை காவல்துறையின் கூடுதல் ஆணையர்கள் மற்றும் பல்வேறு பிரிவுகளின் ஐஜி, ஏடிஜிபி நிலை அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி, மின்வாரிய விஜிலென்ஸ் பிரிவின் ஏடிஜிபியாக பணியாற்றி வந்த ஆயுஷ் மணி திவாரி, தமிழக காவல்துறை தலைமையகப் பிரிவின் ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். திருப்பூர் காவல் ஆணையராக இருந்த ராஜேந்திரன், மதுரை காவல் ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். மதுரை காவல் ஆணையராக இருந்த கபில் குமார் சரத்கர், சென்னை காவல்துறையின் வடக்கு மண்டல கூடுதல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை காவல்துறையின் வடக்கு...
திருப்பரங்குன்றம் தீப விவகாரம் : பழைய நடைமுறையே பின்பற்றப்படும், உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த எழுமலை ராம ரவிக்குமார் உள்ளிட்ட சிலர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், கடந்த 2025 டிசம்பர் 1-ஆம் தேதி, வழக்கமான இடங்களைத் தவிர்த்து திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தற்போது மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாகத் தமிழக அரசு தனது...
”எங்களுக்கு மாடி வீடு வேண்டாம்..” – குமுறும் இலங்கைத் தமிழர்கள்..!
தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வாணியாறு அணை அருகே இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தில் ஏராளமான இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 36 வருடங்களாக வசித்து வரும் இவர்களுக்கு, முறையாக வாழ்வதற்கான வாழ்விடம் இல்லை என தெரிவித்து வருகின்றனர். மேலும் அடுக்குமாடி குடியிருப்பில் இவர்களுக்கு வீடுகள் வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தும், அந்த அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் வசித்து வந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் எனவும், தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தற்போது வசிக்கும் பகுதியிலேயே குடியிருப்புகளை...
அம்மோனியா வாயு கசிவு உயிரிழப்பு 7 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 74 பேர் கவலைக்கிடம்…
திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கன்னிகைப்பேர் கிராமத்தில் செயல்படும் தனியாருக்குச் சொந்தமான கடல் உணவு ஏற்றுமதி நிறுவனம் இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தில் அசாம் ஒடிசா,மற்றும் ஜார்கண்ட் போன்ற வட மாநில புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் இரவு பகல் என இரண்டு ஷிப்ட்களில் 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஜுன் 21 தொழிலாளர்கள் ஆழமான உறக்கத்தில் இருந்தபோது ஆலையின் குளிரூட்டும் பிரிவில் பயன்படுத்தப்படும் அம்மோனியா நச்சு வாயு திடீரென கசியத் தொடங்கியது. இந்த வாயுவை...










