Category: TamilNadu

Home TamilNadu
சட்டமன்ற Live Cut சர்ச்சை.. சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்; விளக்கம் அளித்த அமைச்சர் ராஜ்மோகன்.!
Post

சட்டமன்ற Live Cut சர்ச்சை.. சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்; விளக்கம் அளித்த அமைச்சர் ராஜ்மோகன்.!

இதுதொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி, சபாநாயகர் ஜேசிடி பிரபாகருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், “சட்டமன்ற நேரலை துண்டிக்கப்பட்டது குறித்து மக்கள் மத்தியில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் மற்றும் கருத்துகளை மக்கள் அறிய விடாமல் தடுப்பது ஜனநாயகத்தை இருட்டில் தள்ளுவதற்கு சமமானது. எனவே, சட்டமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து நேரலையாக ஒளிபரப்பப்படுவதை உறுதி செய்ய சபாநாயகர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். இதற்கிடையில், கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி,...

சென்னையில் முகாமிட்ட கரூர் போலீஸ்; செந்தில் பாலாஜி தம்பி அசோக்கை தீவிரமாக தேடும் தனிப்படை!
Post

சென்னையில் முகாமிட்ட கரூர் போலீஸ்; செந்தில் பாலாஜி தம்பி அசோக்கை தீவிரமாக தேடும் தனிப்படை!

அசோக் கரூரில் இல்லாதது உறுதியானதைத் தொடர்ந்து, அவரை கண்டுபிடிக்கும் முயற்சியாக கரூர் தனிப்படை போலீஸார் சென்னை வந்துள்ளனர். ஏடிஎஸ்பி தலைமையிலான தனிப்படை போலீஸார், சென்னையின் முக்கிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். குறிப்பாக, எம்.ஆர்.சி நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் இல்லத்திற்கே நேரடியாக சென்ற போலீஸார், அங்கு விசாரணை மற்றும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த திடீர் நடவடிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அசோக்கை எந்த வழக்கு...

நாளை நீட் மறுதேர்வு: சென்னை தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு 
Post

நாளை நீட் மறுதேர்வு: சென்னை தேர்வு மையங்களில் பலத்த பாதுகாப்பு 

கடந்த மே மூன்றாம் தேதி மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வானது நடத்தப்பட்ட நிலையில் அதில் வினாத்தாள் கசிவு மற்றும் சில முறைகேடுகள் நடந்ததாக கூறி ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் நீட் மறு தேர்வானது நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக தேர்வு மையங்களில் நடந்து வருகிறது. சுமார் 22 லட்சத்து 79 ஆயிரம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதக்கூடிய நிலையில் 2.5 லட்சம் பணியாளர்கள் மற்றும் 15 ஆயிரம் துணை ராணுவத்தினர்...

சுனாமியாக மாறும் பினாமிகள்.. வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்..?
Post

சுனாமியாக மாறும் பினாமிகள்.. வில்லங்கத்தில் விஜயபாஸ்கர்..?

கரூரைப் பொறுத்தவரை ஒரு அரசு திட்டம் வடிவமைக்க தொடங்கும்போதே, அதுகுறித்த முழு விவரங்கள் அரசியல்வாதிகள் மூலம் தொழிலதிபர்களுக்கு சென்றுவிடும். அரசியல்வாதிகளின் துணையோடு தொழிலதிபர்கள் பல நூறு ஏக்கர் நிலங்களை வாங்குவார்கள். வடிவமைக்கப்பட்ட திட்டம் நிதி ஒதுக்கீடு செய்து முழுமையாகும்போது, அந்தத் திட்டத்திற்காக இடம் தேர்வு செய்யப்போகிறோம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு வெளியாகும். அதற்காகவே காத்திருந்ததைப்போல ஏற்கெனவே குறைந்த விலையில் வாங்கிப் போட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களுக்கு நடுவே உள்ள இரண்டு ஏக்கர், 5 ஏக்கர்...

ஆஸ்தான ஒளிப்பதிவாளருக்கு பதவி? விளக்கம் அளித்த விஜய்!
Post

ஆஸ்தான ஒளிப்பதிவாளருக்கு பதவி? விளக்கம் அளித்த விஜய்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. திமுக மற்றும் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியைப் பிடித்த நிலையில், முதலமைச்சர் விஜயின் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்ந்து அரசியல் விவாதங்களை கிளப்பி வருகின்றன. அவரது ஆட்சிக்கு ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கருத்துகள் நிலவி வரும் சூழலில், சமீபத்திய நியமனம் ஒன்று புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது. முன்னதாக, தனது ஜோதிடருக்கு அரசு பொறுப்பு வழங்கியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருந்த நிலையில், தற்போது...

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை : ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம் 
Post

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்குள் செல்போனுக்கு தடை : ஜூலை 1 முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த திட்டம் 

இதுகுறித்து கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின்படி, கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படும் பொது தரிசன வரிசை, ரூ.100/ விரைவு தரிசன கட்டண வரிசை, மூத்தக் குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வரிசை போன்ற அனைத்துப் பகுதிகளிலும், பக்தர்கள் முழுமையாகப் பரிசோதனை செய்யப்பட்டு அதன் பின்னரே கோயிலுக்குள் அனுமதிக்கப்படவுள்ளனர். எனவே, பக்தர்கள் கோயிலுக்கு வருகை தரும்போது தங்களது கைப்பேசிகளை, தாங்கள் தங்கியிருக்கும் இடங்களிலோ தங்களது வாகனங்களிலோ, பாதுகாப்பாக வைத்துவிட்டு சுவாமி தரிசனம் செய்ய திருக்கோயிலுக்கு வருகை தருமாறு...

காவேரி கூக்குரல் உணவுக்காடு வளர்ப்பு கருத்தரங்கு: 6 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பு 
Post

காவேரி கூக்குரல் உணவுக்காடு வளர்ப்பு கருத்தரங்கு: 6 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்பு 

“விவசாயிகளின் வருமானமும் மக்களின் ஆரோக்கியமும் மேம்பட உணவுக்காடு வளர்ப்பும் மரம் சார்ந்த விவசாயமுமே நிலையானத் தீர்வு” என சத்குருவின் காவேரி கூக்குரல் இயக்க கருத்தரங்கில் விஞ்ஞானிகள் மற்றும் முன்னோடி விவசாயிகள் வலியுறுத்திப் பேசினர். இக்கருத்தரங்கில் 6000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.  சத்குருவின் ‘மண் காப்போம் – காவேரி கூக்குரல்’ இயக்கம் சார்பில் “உணவுக்காடு வளர்ப்பு மற்றும் தென்னிந்திய பழங்கள் திருவிழா” என்ற தலைப்பிலான மாபெரும் கருத்தரங்கம் மற்றும் கண்காட்சி, திருச்சி எஸ்.ஆர்.எம்...

கோவில் வளாக கடைகளில்  பூஜை பொருட்கள் விலைப்பட்டியல் கட்டாயம்: இந்து சமய அறநிலையத்துறை 
Post

கோவில் வளாக கடைகளில்  பூஜை பொருட்கள் விலைப்பட்டியல் கட்டாயம்: இந்து சமய அறநிலையத்துறை 

இந்து சமய அறநிலைத்துறைக்குள் இயங்கக்கூடிய கோவில் வளாகத்தில் விற்கப்படும் பூஜைப்பொருட்கள் விலை அதிகமாக விற்கப்படுவதாக தொடர்ந்து பக்தர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் கோயில்களில் ஆய்வுகளை மேற்கொள்ளும் அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவுக்களை பிறப்பித்து வருகிறார்.  இதுதொடர்பாக அனைத்து கோவில் நிர்வாகத்துக்கும் அனுப்பப்பட்ட சுற்றிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- அனைத்து கோவில்களின் வளாகங்களில் இயங்கும் கடைகளிலும் விற்பனைக்கு அனுமதிக்கப்பட்ட பூஜை பொருள்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். சுத்தமான தரமான பொருள்கள் விற்பனை செய்வதை கடைக்காரர்கள் உறுதி செய்ய வேண்டும்....

”பாஜகவினருக்கு அழைப்பு கொடுக்கல…” – அண்ணாமலை விளக்கம்!
Post

”பாஜகவினருக்கு அழைப்பு கொடுக்கல…” – அண்ணாமலை விளக்கம்!

பாஜகவிலிருந்து விலகிய முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, புதிய அரசியல் இயக்கம் தொடங்குவதாகவும், வரவிருக்கும் பொதுத் தேர்தலில் தங்களது புதிய இயக்கம் கண்டிப்பாகப் போட்டியிடும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். வி தி லீடர்ஸ் என்ற இயக்கத்தை தொடங்கிய அண்ணாமலைக்கு ஆதரவாக, அவரது ஆதரவாளர்கள், ரசிகர்கள், பாஜகவில் அதிருப்தியில் இருப்பவர்கள், என லட்சக்கணக்கானோர் இணைந்து வருகின்றனர். வீ த லீடர்ஸ் அமைப்பில் தற்போது வரை 18 லட்சம் பேர் இணைந்துள்ளனர் இதனால், பாஜகவினரை அண்ணாமலை திட்டமிட்டே தன் பக்கம்...

நடப்பாண்டில் அரசு பள்ளிகளுக்கு 155 நாட்கள் லீவு,  210 வேலை நாட்கள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 
Post

நடப்பாண்டில் அரசு பள்ளிகளுக்கு 155 நாட்கள் லீவு,  210 வேலை நாட்கள்: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு 

தமிழகத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்குமான அதிகாரப்பூர்வ கால அட்டவணையை ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு 2026-27-ம் கல்வி ஆண்டிற்கான நாட்காட்டியை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு உள்ளது.அதன்படி இந்த ஆண்டு மொத்தம் வேலை நாட்கள் 210 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. 22 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக உள்ளன. மேலும் இந்த ஆண்டில் பெரும்பாலான சனிக்கிழமைகளில் மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு அனைத்து வகுப்புகளுக்கும் காலாண்டுத் தேர்வு செப்டம்பர்...

× Free India Logo
Welcome! Free India