நாமக்கல் மண்டலத்தில் 1,200-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு தினசரி 6 கோடிக்கும் மேல் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிமாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. அதே போன்று சுமார் 1 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் ரம்ஜான் நோன்பு, கிறிஸ்தவர்களின் தவக்காலம் போன்ற காரணங்களால் முட்டை நுகர்வு குறையும். அதன்படி தற்போது 20 சதவீதம் வரை பொதுமக்கள்...
Category: TamilNadu
1 முதல் 9-ம் வகுப்பு ஆண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு ?: பள்ளி கல்வித்துறை சொன்ன அப்டேட்
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு ஏப்.6-ஆம் தேதியும் முடிய உள்ளது. வழக்கமாக பொதுத்தேர்வுகள் முடிந்த உடன் 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வுகள் தொடங்கும். இந்த வகுப்புகளுக்கு ஆண்டுதோறும் ஏப்.22 முதல் 24-ஆம் தேதிக்குள் இறுதித் தோ்வு நடத்தி முடிக்கப்படும். ஆனால் தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது.தமிழகத்தில் சட்டமன்றத் தோ்தல் ஏப்ரல்...
இறைச்சி கடைகளில் ஆடு,மாடு வெட்டுவதற்கு தடைக்கோரிய மனு உயர்நீதி மன்றம் தள்ளுபடி
மிருக வதை சட்டத்தில், ஆடு, மாடு, கோழிகளை வெட்ட தனி இடங்களை ஒதுக்க வேண்டும் எனவும், அங்கீகரிக்கப்பட்ட, உரிமம் பெற்ற இடங்களை தவிர வேறு இடங்களில் விலங்குகளை வெட்டக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், மற்ற விலங்குகளின் கண் முன் வெட்டக் கூடாது, ரத்தத்தை முறையாக சேகரிக்க வேண்டும், விலங்குகள் வெட்ட உருவாக்கப்பட்டுள்ள ஆடு தொட்டிகளில் கால்நடை மருத்துவர் சான்றளிக்கும் விலங்குகளை மட்டும் வெட்ட வேண்டும், நோய்வாய்ப்பட்ட விலங்குகளை வெட்டக் கூடாது எனவும் சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. இந்த...
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: ஹார்முஸ் ஜலசந்தி மூடல், பெட்ரோல்,டீசல் விலை ரூ.200 உயர வாய்ப்பு
அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் ஈரான் மீது நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில், அந்த நாட்டின் உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் முக்கிய ராணுவத் தளபதிகள் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவம் உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதற்குப் பதிலடியாக உலக நாடுகளின் கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கு மிக முக்கியமான ‘ஹார்முஸ் ஜலசந்தி’ (Strait of Hormuz) ஈரான் மூடுவதாக அறிவித்துள்ளது. இந்தியா தனக்குத் தேவையான கச்சா...
“ஜனநாயகம் காப்பது, தேர்தல் நடத்துவதில் தமிழ்நாடு தான் பெஸ்ட்” தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் புகழாரம்
தமிழக சட்டமன்ற தேர்தல் தொடர்பாக 2 நாட்களாக இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கிண்டியில் உள்ள தனியார் ஹோட்டலில் நிருபர்களிடம் அவர் கூறுகையில்:, “தமிழகத்தில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தப் பணிகள் ஒட்டுமொத்த நாட்டுக்கே முன்னுதாரணமாக உள்ளன. ஜனநாயகத்தைக் காப்பதில் தமிழ்நாடு முன்னோடியாகத் திகழ்கிறது. அண்மையில் 72 நாடுகள் பங்கேற்ற பன்னாட்டுத் தேர்தல் மாநாட்டில் தமிழ்நாடு குறித்துப் பெருமையாகப் பேசினோம். தமிழ்நாட்டில் மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள்...
தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறை: மீனாட்சி உயர் கல்வி நிறுவனம் நடத்திய சர்வதேச கருத்தரங்கம்!
சென்னையின் முதன்மையான பல்கலைக்கழகமாக திகழும் மீனாட்சி உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், கடந்த 16 ஆம் தேதி அன்று, தொற்று நோய் மற்றும் வைரஸ் பயில் துறையை களமாக கொண்டு ஒரு சிறப்பு சர்வதேச கருத்தரங்கம் நடத்தியது. இந்த கருத்தரங்கில் இந்திய அளவிலும் உலக அளவிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட மருத்துவ அறிஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இந்த கருத்தரங்கில் சிறப்பு விருந்தினர்களாக அமெரிக்காவின் புகழ்பெற்ற பல்கலைக்கழகமான எமோரி யூனிவர்ஸிடியின் அடிப்படை...
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு வீரப்பன் கூட்டாளிகள் 9 பேர் விடுதலை
பிரபல கன்னட நடிகர் ராஜ்குமார், கடந்த 2000ம் ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி தமிழக – கர்நாடக எல்லையில் உள்ள தொட்டகஜனூரில் உள்ள பண்ணை வீட்டில் இருந்து, சந்தன மரக்கடத்தல் வீரப்பன் தலைமையிலான குழுவினரால் கடத்தப்பட்டார். அவருடன் மேலும் மூன்று பேரும் கடத்திச் செல்லப்பட்டனர். 108 நாட்களுக்குப் பின், கர்நாடக – தமிழக அரசுகளின் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து நவம்பர் 15ம் தேதி ராஜ்குமார் விடுவிக்கப்பட்டார். இந்த கடத்தல் தொடர்பாக வீரப்பன், சந்தன கவுடா, மல்லு,...
விடுதலைப்புலிகள் மீதான தடை நீக்க கோரிய வைகோ வழக்கு: உயர்நீதிமன்றம் தள்ளுபடி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு மத்திய அரசு தடை விதித்தது. இந்தத் தடையை 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நீட்டிக்க உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின்கீழ் தீர்ப்பாயத்தை மத்திய அரசு அமைக்கும். கடந்த 2014- ம் ஆண்டு நீதிபதி ஜி.பி.மிட்டல் தலைமையிலான தீர்ப்பாயம், விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க உத்தரவிட்டது....
கோவில் சொத்துக்களை பாதுகாப்பதற்காக சம்பளம் வாங்குகிறீர்கள்: இந்து அறநிலையத்துறைக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
சேலம் மாவட்டம் ஓமலூர் கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டதாகவும், கோவிலுக்கு சொந்தமான கனிம வளங்கள் கொள்ளை அடிக்கபட்டதாகவும் சேலத்தைச் சேர்ந்த ஆ இராதாகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சேலம் இந்து அறநிலையத்துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டிருந்ததது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எஸ் எம் சுப்பிரமணியம், சி.குமரப்பன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது, அப்போது சேலம்...
எழும்பூர் புறநகர் ரயில் சேவை மேலும் குறைப்பு: 5-வது நாளாக பயணிகள் கடும் அவதி
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் 10 மற்றும் 11-வது நடைமேடைகளை விரிவாக்கம் செய்யும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளுக்காக பிப்ரவரி 20-ஆம் தேதி முதல் ஏப்ரல் 5-ஆம் தேதி வரை ரயில் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெற்கு ரயில்வே ஏற்கனவே அறிவித்திருந்தது. இந்த வழித்தடத்தில் வழக்கமாக இரு மார்க்கங்களிலும் 204 மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. பராமரிப்புப் பணிகள் தொடங்கியபோது இது 164 சேவைகளாகக் குறைக்கப்பட்டது. இந்நிலையில், தெற்கு ரயில்வே நேற்று...










