சென்னை எழும்பூரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட 500-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் போலீசார் குண்டுகட்டாக கைது செய்யப்பட்டனர். இதை தொடர்ந்து, மெரினா காமராஜர் சாலையிலும் முற்றுகையிட திரண்டு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 6-வது நாளாக நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் திரண்ட ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில் புத்தாண்டு தினமான இன்றும் இடைநிலை ஆசிரியர்கள் 7-வது நாளாக தங்களது போராட்டத்தை நடத்தினார்கள். சென்னை எழும்பூரில்...
Category: TamilNadu
தமிழ்நாட்டில் முதல் முறையாக சோலார் மூலம் இயங்கும் படகு சேவை தொடக்கம்
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் முயற்சியாக, தமிழ்நாட்டில் முதல் முறையாக சோலார் சக்தி மூலம் இயங்கும் படகு சேவை தொடங்கப்பட்டுள்ளது. இந்த புதிய முயற்சி, பசுமை ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முக்கியமான அடியெடுப்பாக கருதப்படுகிறது. இந்த சோலார் படகு சேவை, சுற்றுலா மற்றும் பொதுப் போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எரிபொருள் பயன்பாடு இல்லாமல், சூரிய சக்தியை முழுமையாக பயன்படுத்தி இயங்குவதால், மாசுபாடு குறையும், எரிசக்தி செலவு சேமிக்கப்படும் என்பதே இதன் முக்கிய சிறப்பு. இந்த படகுகள், நவீன...
அரசு ஊழியர்களுக்கு ஹாப்பி நியூஸ் : பொங்கல் போனசுக்கு ரூ 183 கோடி ஓதுக்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்: முதல்வர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவுபடி 2024-2025ஆம் ஆண்டிற்கான ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவு பணியாளர்களுக்கு மிகை ஊதியம்; ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிட 183 கோடியே 86 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசின் திட்டங்களை கடைக்கோடி மக்களுக்கும் கொண்டு சேர்த்திட அயராது பணியாற்றிவரும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும்...
புத்தாண்டு கொண்டாட்டம்: பட்டாசு வெடித்து, கேக் வெட்டி உற்சாகம்
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு 2026 இன்று (ஜன.1) பிறந்துள்ளது. உலகிலேயே முதல் தீவு நாடாக கிரிபாடியில், இந்திய நேரப்படி நேற்று பிற்பகல் 3:30-க்கு புத்தாண்டு உதயமானது. நாடு முழுவதும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நள்ளிரவு 12 மணிக்கு கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் மக்கள் உற்சாகமாக பகிர்ந்து கொண்டாடி மகிழ்ந்தனர். புத்தாண்டு கொண்டாட்டம் ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் வகையில், சென்னை மெரினா கடற்கரையில் மணிக்கூண்டு அருகே ஆயிரகணக்கனோர் திரண்டு புத்தாண்டைவரவேற்றனர். புத்தாண்டையொட்டி, காமராஜர் சாலை, கிழக்கு...
தமிழகத்தில் கடந்தாண்டு டெங்கு காய்ச்சலுக்கு 25,278 பேர் பாதிப்பு
பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பில்: மழைக் காலங்களில், டெங்கு காய்ச்சலைப் பரப்பும், ஏடிஸ் – எஜிப்டை வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால், ஜூலை முதல் அக்டோபர் மாதம் வரை, சென்னை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்கள் தினசரி 500க்கும் அதிகமானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். அது தற்போது 100க்கும் கீழ் குறைந்துள்ளதாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.. அதேபோல, கடந்தாண்டு 46,927 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு பாதியாகக் குறைந்து உள்ளது. தமிழகத்தில் 25,278 ஆக...
ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் போராட்டம் : தலைமை செயலகத்தில் அமைச்சர்கள் அவரச ஆலோசனை
6-வது நாளாக ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் 6-வது நாளாக இன்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தை முற்றுகையிட்டு இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த தேர்லில் திமுக கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்று முழக்கமிட்டு ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தைக் கட்டுப்படுத்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே சென்னை எழும்பூரில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 1,583 ஆசிரியர்கள்...
உஷாரா இருங்க : இனி பொது இடங்களில் கட்டிய கழிவுகளை கொட்டினால் 5 ஆயிரம் ரூபாய் அபராதம் வாகனம் பறிமுதல்
இதுகுறித்து சென்னை மண்டல உதவி ஆணையர்களுக்கு மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னையின் முக்கிய சாலைகள், தெருக்கள், நடைபாதைகள், நீர்நிலைகள், திறந்த வெளிகள் மற்றும் காலி இடங்களில் கட்டுமானக் கழிவுகளை கொட்டும் சம்பவங்கள் அதிகரித்து வருவது மாநகராட்சி கவனத்துக்கு வந்துள்ளது. இத்தகைய செயல்களால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதுடன் காற்று மாசுபாடு, வெள்ள அபாயம் மற்றும் விபத்துகள் போன்ற பொதுச் சுகாதார பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை தடுக்கும் வகையில் ‘சுத்தமான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்துக்கான வழிகாட்டுதல்கள்...
ஜனவரி 6-ல் தமிழக அமைச்சரவை கூட்டம் : முக்கிய அறிவிப்புகள் ஓப்புதல் அளிக்க வாய்ப்பு ?
ஜனவரி 20-ம் தேதி தமிழக சட்டசபை கூட உள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் கூட்டம் நடைபெறுவது வழக்கம். சட்டசபை கூட்டம் நடைபெற உள்ளதால், தமிழகத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்து ஆலோசிப்பதாக சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இக்கூட்டம் நடைபெறவுள்ளது. ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்தும் இடைக்கால பட்ஜெட் தாக்கல் உள்ளிட்டவை தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், செவிலியர்கள் கோரிக்கை தொடர்பாகவும்...
புத்தாண்டு கொண்டாட்டம் சென்னை கடற்கரையில் அனுமதி இல்லை : காவல்துறை கடும் கட்டுப்பாடு
சென்னையில் 19,000 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் மூலம் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது பாதுகாப்பு அளிக்க சென்னை காவல் துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளது. மேலும் காவல் துறையினருக்கு உதவியாக, சுமார் 1,500 ஊர்க்காவல் படையினரும் புத்தாண்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, 31.12.2025 மாலை முதல் 01.01.2026 வரை பொதுமக்கள் கடல் நீரில் இறங்கவோ, குளிக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், மெரினா, சாந்தோம், எலியட்ஸ் மற்றும் நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில்...
ஆர்ப்பாட்டங்களால் தவிக்கும் தலைநகர் சென்னை: அறிவாலயத்தை முற்றுகையால் பரபரப்பு, போலீஸ் குவிப்பு
இடைநிலை ஆசிரியர்கள் 5-வது நாள் போராட்டம் ‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி தமிழகத்தின் இடைநிலை ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம் இன்று ஐந்தாவது நாளாக உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இடைநிலை ஆசிரியர்கள் தங்களின் முக்கிய கோரிக்கையை முன்வைத்து, இன்று ஐந்தாவது நாளாக எழும்பூர், காந்தி இர்வின் சாலையில் அமைந்துள்ள பள்ளி கல்வித்துறை வட்டார கல்வி அலுவலகம் (BEO Office) முன்பாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில்...









