கடந்த பிப்ரவரி மாதம் சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் மேயர் ஆர். பிரியா முன்னிலையில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்திற்காக, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வருவதற்கு சில நாட்களுக்கு முன்பாகவே அவசரமாக டெண்டர்கள் கோரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆட்சி மாற்றத்திற்கு முன்பே இறுதி ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்த போதிலும், பணி ஆணைகள் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு, முந்தைய ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட டெண்டர் நடைமுறைகளை மறுஆய்வு செய்ய முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டிருந்தார். அதன்படி...
Category: TamilNadu
தயாரிப்பாளருக்கு அரசு பதவி… ஐடி கார்டில் சாதி.. விளக்கம் அளித்த அமைச்சர்..!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் நிர்மல்குமார் தலைமையில் நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூடத்தில் எம்பி வெங்கடேசன், ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா, மற்றும் மாநகராட்சி ஆணையாளர், காவல் ஆணையர், சட்டமன்ற உறுப்பினர்கள் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் நிர்மல்குமார், ஜனநாயகன் பட தயாரிப்பாளரை டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளதற்கு எழும் எதிர்ப்புகள் குறித்த பதிலளித்தார். “டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட் நாராயணா கர்நாடகாவை சேர்ந்தவரல்ல. அவர் ஆந்திராவை சேர்ந்தவர். அந்த...
குமுதம் எக்ஸ்குளூசிவ் – ‘நிறைய படிச்சா பெரிய பணக்காரனாகலாம்னு அப்போ நினைச்சேன்!’ பாக்யராஜ் சிறப்பு பேட்டி
திரையுலகில் 50 ஆண்டுகள் நிறைவுசெய்து, “ஒரு படம், ஒரு வெப் சீரிஸ் பண்றேன்…” என அடுத்த 50-&க்கு ரெடியாகி யிருக்கும் கே.பாக்யராஜுக்கு குமுதத்தின் பூங்கொத்து… கடந்த இதழில் ஆரம்பித்த பேட்டியின் தொடர்ச்சி…இப்படி தேடித்தேடி புத்தகம் படிக்கும் பழக்கம் எப்போ ஆரம்பிச்சது? ஸ்கூல் படிக்கும் காலத்திலேயா? என்றதும், பள்ளிக்-கூட காலத்துக்குச் சென்று, நம்மையும் அங்கே கூட்டிச் சென்றார், பாக்யராஜ். “நிறைய படிச்சா பெரிய பணக்-காரனாகலாம்னு ஸ்கூல் படிக்கிறப்ப பலர் சொல்லக் கேள்விப்பட்டேன். படிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் கொஞ்ச நாள்ல...
ஈரக்குலையறுத்த இறால் ஆலை! அப்பாவி உயிர்களை பறித்த அமோனியா வாயு!
தி ருவள்ளூரில் உள்ள தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் திடீரென ஏற்பட்ட அமோனியா வாயுக்கசிவால் ஏராளமான தொழிலாளர்களின் நுரையீரல், இதயம் உள்ளிட்ட உறுப்புகள் கிட்டத்தட்ட வெந்துபோய்விட்டன. அவர்களில் எட்டு பேர் துள்ளத்துடிக்க உயிரிழந்துவிட்டார்கள். தனியார் நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த இந்தக் கொடூர விபத்து சென்னை சுற்றுவட்டாரத்தையே கதிகலங்கச் செய்திருக்கிறது! இதுகுறித்து நம்மிடம் பேசிய அப்பகுதி மக்கள், ‘திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் பகுதியில் செயின்ட் பீட்டர் பவுல் எனும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலை இயங்கிவருகிறது. மோகன், ஜோசப்...
தமிழகம் முழுவதும் நாளை 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் வெளியான அறிக்கையில், ‘தேசிய போலியோ சொட்டு மருந்து முகாம் வரும் நாளை ஜூன் 28 (ஞாயிற்றுக்கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. தமிழ் நாட்டில் உள்ள அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்கள் என மொத்தம் 43,051 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். இம்மையங்களில் 52.91 லட்சம் 0-5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்க...
சென்னை அரக்கோணம் புறநகர் ரயில் சேவை: இன்றும், நாளையும் ரத்து
அரக்கோணம் பணிமனையில் ஜூன் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் கடவுப்பாதை மற்றும் தண்டவாள மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதன் காரணமாக ஜூன் 27-ஆம் தேதி இயக்கப்பட இருந்த 27 இமு மற்றும் மெமு புறநகர் ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக சென்னை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதன்படி, அரக்கோணத்திலிருந்து அதிகாலை 4, 5, 5.50 மற்றும் 6 மணி, காலை 7.20, 9.15, 10 மணி, பிற்பகல் 2.50 மணி, மாலை 6.15 மணி,...
விஜய் அரசுக்கு அண்ணாமலை வைத்த கோரிக்கை..!
கடந்த 5 ஆண்டுகளில் வெளிச்சத்துக்கு வந்த அனைத்து ஊழல் புகார்களையும் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தவெக அரசுக்கு ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2022-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட சாலை ஒப்பந்தங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, முன்னாள் திமுக அமைச்சர் எ.வ.வேலுவுக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தியுள்ளது. திமுக ஆட்சிக் காலத்தில்...
ஜனநாயகன் தயாரிப்பாளருக்கு அரசு பதவி… அதிமுக கண்டனம்..!
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கே. வெங்கட நாராயணா நியமிக்கப்படுகிறார். அவர் இந்த தற்காலிகப் பொறுப்பை ஏற்றுக்கொள்ளும் நாளிலிருந்து ஓராண்டு காலத்திற்கு பதவி வகிப்பார். இப்பணி நியமனத்திற்கான நிபந்தனைகள் தனியாக வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கே. வெங்கட நாராயணா திரைப்பட தயாரிப்பாளராக அறியப்படுகிறார். தற்போதைய தமிழக முதல்வர் விஜய் நடித்துவரும், அவரது கடைசி திரைப்படமாகக் கூறப்படும் ‘ஜனநாயகன்’ படத்தின் தயாரிப்பாளரும் அவரே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நியமனம் அரசியல்...
அம்மோனியா வாயு கசிவு: சிகிச்சை முடிந்த 62 தொழிலாளர்கள் ஒடிசாவுக்கு அனுப்பி வைப்பு
திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு விபத்தால் ஒடிசாவை சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் 62 பேர் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். பூரண குணமடைந்த 62 தொழிலாளர்களை அவர்களுடைய சொந்த ஊருக்கு...
அமோனியா வாயு கசிவு தனியார் ஆலையை நிரந்தரமாக மூட ஆய்வு குழு பரிந்துரை
கடந்த ஜூன் 21, 2026 அன்று திருவள்ளூர் மாவட்டம் கன்னிகைப்பேர் கிராமத்தில் உள்ள ‘M/s St. Peter & Paul Seafoods Exports Private Limited’ என்ற தனியார் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நிகழ்ந்தது. அமோனியா வாயு கசிவு காரணமாக இதுவரை 11 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர் மற்றும் 60-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முதலமைச்சர் விஜய்யின் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட இந்த ஆய்வுக் குழுவில் பின்வரும் முக்கிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ளனர். தொழிற்சாலை பாதுகாப்பு...










