Category: TamilNadu

Home TamilNadu
Confident – அ இருங்க.. 5 வருஷமும் நாம தான்… முதல்வர் விஜய் உறுதி..!
Post

Confident – அ இருங்க.. 5 வருஷமும் நாம தான்… முதல்வர் விஜய் உறுதி..!

தமிழக முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று(ஜூலை 01) மாலை நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த தோழமை...

றெக்க கட்டி பறந்த ரெக்க கார்த்திக் பிரண்ட்ஸ்… கண்டுகொள்ளாத காவல்துறை..!
Post

றெக்க கட்டி பறந்த ரெக்க கார்த்திக் பிரண்ட்ஸ்… கண்டுகொள்ளாத காவல்துறை..!

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரை சேர்ந்த ரெக்க கார்த்தி என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில் அவரின் இறுதி சடங்கு நேற்று நடைபெற்றது. இதற்காக அவரது உடலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை பிணவரையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலமாக  எடுத்துச் சென்றனர். அப்போது அரசு ராஜாஜி மருத்துவமனை தொடங்கி வைகையாற்று கரையோரம் இல்ல வடகரை சாலை வரை  இறந்துபோன ரெக்க கார்த்தியின் நண்பாஸ் அனைவரும் தங்களது பைக்குகளை முறுக்கியபடி, ஒரே பைக்கில் மூன்றுபேர் வீலிங் என சாலையில் நடுவே அட்ராசிட்டியில் ஈடுபட...

முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறு வழக்கு: சாட்டை துரைமுருகன் விடுதலை..!
Post

முன்னாள் முதல்வர்கள் குறித்து அவதூறு வழக்கு: சாட்டை துரைமுருகன் விடுதலை..!

கும்பகோணம் அருகே பந்தநல்லூர் அரசரடித் தெருவைச் சேர்ந்தவர் ரா.முருகேசன். திமுக நிர்வாகியான இவர், கடந்த 9.10.2021 அன்று சமூக வலைதளமான யூடியூப்பில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன், மாநில செயலாளர் மகிழன் என்கிற சந்தோஷ் மற்றும் திருநாவுக்கரசு ஆகியோர், முன்னாள் முதல்வர்கள் மு.கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரை உருவ கேலி செய்து பேசியுள்ளதாகக் கூறி,  பந்தநல்லூர் காவல் நிலையத்தில் மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் அளித்தார்.  இந்த புகாரின்...

இதுக்கு ஒரு End-ஏ இல்லையா சார்? தொடரும் ரீல்ஸ் மோகம்… நீக்கப்பட்ட தவெக ஒ.செ..!
Post

இதுக்கு ஒரு End-ஏ இல்லையா சார்? தொடரும் ரீல்ஸ் மோகம்… நீக்கப்பட்ட தவெக ஒ.செ..!

கடந்த ஜூன் 28 ஆம் தேதி, விருதுநகர் அருகே செங்குன்றாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற்ற நிலையில், தவெக விருதுநகர் மத்திய ஒன்றியச் செயலாளர் முத்துவேல், அதிகாரி போல் ஆய்வு செய்தார்.  தொடர்ந்து, அவர் ஆய்வு செய்தது மட்டுமல்லாமல் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கியதை வீடியோவாக எடுத்து, அதனை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் சினிமா பாடலுடன் சேர்த்து ரீல்ஸாக வெளியிட்டுள்ளார்.  முன்னதாக, தமிழக சுகாதாரத்துறை சார்பில் அரசு மருத்துவமனைகளில்...

TN Weather: வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
Post

TN Weather: வட தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!

கோவை, நீலகிரி மற்றும் வட தமிழகத்தில் இன்று (ஜூன் 30) மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில், சுமார் 0.9 கிமீ உயரம் வரை வடக்கு கடலோர தமிழகத்திலிருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. கனமழைக்கு வாய்ப்பு இதன்காரணமாக, இன்று கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40...

இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி?  வீரபாண்டியன் சொன்னது என்ன?
Post

இடைத்தேர்தலில் ஸ்டாலின் போட்டி?  வீரபாண்டியன் சொன்னது என்ன?

மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்தும், வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) சார்பில் பெரம்பலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் வி. ஜெயராமன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீரபாண்டியன் பங்கேற்று உரையாற்றினார். அப்போது, மத்திய அரசின் கொள்கைகளை விமர்சித்த அவர், மாநில அரசும் விவசாயிகளின் வேளாண் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்...

தமிழக அரசின் ‘SPECTRUM’… பாலியல் குற்றவாளிகளை வகைப்படுத்த புதிய திட்டம்..!
Post

தமிழக அரசின் ‘SPECTRUM’… பாலியல் குற்றவாளிகளை வகைப்படுத்த புதிய திட்டம்..!

தமிழக காவல்துறையில் குற்றங்களை வகைப்படுத்தி குற்றவாளிகளை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ரவுடிகளை பல்வேறு கேட்டகிரிகளாக பிரித்து அவர்களை கண்காணித்து குற்றங்களை குறைக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.  இதன் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களையும் இதே போன்று வகைப்படுத்தி கண்காணிக்க தமிழக காவல்துறை புதிய திட்டத்தை வகுத்துள்ளது ஸ்பெக்ட்ரம் என இந்த புதிய திட்டத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது. பாலியல் குற்றவாளிகளின் விபரக்குறிப்பு தயாரிப்பு, மதிப்பீடு, வகைப்படுத்துதல், கண்காணிப்பு, ஆபத்து...

நான்கு ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் மெத்தனம்…தேனி மாவட்ட மக்கள் ஆவேசம்…
Post

நான்கு ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் மெத்தனம்…தேனி மாவட்ட மக்கள் ஆவேசம்…

மதுரையிலிருந்து தேனி வரும் பயணிகள் ரயில், பகல் முழுவதும் இங்கேயே தூங்குகிறது, மாலையில் கிளம்பிவிடுகிறது. இந்த ரயிலால் எங்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை’ என்று ஆவேசமாக முழங்குகிறார்கள் தேனி மாவட்ட மக்கள். 1928ம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் போடி, தேனி வழியாக மதுரை வரை மீட்டர் கேஜ் ரயில் துவங்கப்பட்டது. ஏலக்காய், மிளகு கிராம்பு போன்ற வாசனைப் பொருட்களை உலகம் முழுவதும் கொண்டுசெல்ல இது பெரிதும் பயன்பட்டது. பிறகு அதை அகல ரயில் பாதையாக மாற்ற 2010ல் மீட்டர்...

நெல் பணம் எப்போது? காத்திருக்கும் விவசாயிகள்
Post

நெல் பணம் எப்போது? காத்திருக்கும் விவசாயிகள்

ஏனிந்த குமுறல்? தமிழக விவசாயிகள் சங்க மாநிலப் பொருளாளர் ஆர்.சுபாஷிடம் கேட்டோம். தமிழக அரசு கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் மக்களுக்கு அரிசி வழங்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் மையங்கள் அமைத்து கொள்முதல் செய்கிறது. இதற்கான தொகையை சம்பந்தப்பட்ட விவசாயிகளின் வங்கிக்கணக்கில் உடனடியாக வரவு வைக்கிறது. மத்திய அரசும் கூட்டுறவு நியாயவிலைக் கடைகளில் இலவச அரிசி (மோடி அரிசி) வழங்க என்.சி.சிபி எனும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் சங்கம் மூலம் நெல்...

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி… திமுக நிர்வாகி கைது..!
Post

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி… திமுக நிர்வாகி கைது..!

இதுகுறித்து, சென்னை தி.நகரில் செயல்பட்டு வரும் Federation of Associations of Private School in Tamil Nadu அமைப்பின் செயலாளர் இளங்கோவன் சென்னை பெருநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரில், கடந்த இரண்டு ஆண்டுகளாக தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகள் அங்கீகாரம், பள்ளித் தர உயர்வு, திட்ட அனுமதிகள் உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகளில் சிரமங்களை எதிர்கொண்ட நிலையில், சென்னை சாலிகிராமத்தில் பதிவு செய்யப்படாத “தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கம்” என்ற பெயரில் செயல்பட்டு...

× Free India Logo
Welcome! Free India