Category: TamilNadu

Home TamilNadu
அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணாவிருது: முன்னாள் தலைமை செயலாளர் இறையன்புக்கு திருவிக விருது: தமிழக அரசு அறிவிப்பு 
Post

அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணாவிருது: முன்னாள் தலைமை செயலாளர் இறையன்புக்கு திருவிக விருது: தமிழக அரசு அறிவிப்பு 

இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படும்.  தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கப்படும். எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு காமராஜர் விருது, கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு பாரதியார் விருது வழங்கப்படும். கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படும். தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு வழங்கப்படும். கி.ஆ.பெ. விசுவநாதன் விருது சு.செல்லப்பாவுக்கும், விடுதலை விரும்பிக்கு கலைஞர் விருதும் வழங்கப்படும். அய்யன் திருவள்ளுவர்...

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகள் உண்ணாவிரதம் 
Post

10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகள் உண்ணாவிரதம் 

இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய டாக்டர் ரவீந்திரநாத் நிருபர்களிடம் பேசியதாவது: மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு அளவிற்கான இடங்களை வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற அனுமதி வழங்கிட தேசிய மருத்துவ ஆணையமே (NMC) 2022 ஆண்டிலேயே மாவட்ட அரசு மருத்துவமனைகளில் FMG பட்டதாரிகளை பயிற்சி மருத்துவராக பயிற்சி பெறலாம்...

'ஜனநாயகன்'  சென்சார் சர்டிபிகேட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை 
Post

'ஜனநாயகன்'  சென்சார் சர்டிபிகேட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை 

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. தவெக எனும் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜயின் கடைசி படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் உள்பட அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.  ரத்தக்காட்சிகள் அதிக அளவில் இடம் பெற்று இருந்ததால்,  படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி மறு தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது...

நடிகர் கமல்ஹாசன் பெயர்,படத்தை பயன்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
Post

நடிகர் கமல்ஹாசன் பெயர்,படத்தை பயன்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை

சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலகநாயகன் என்ற படத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி–சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது,  தனி உரிமையை பாதுகாக்கும் வகையில், நீயே விடை நிறுவனம் மட்டுமல்லாமல், வேறு எந்த நிறுவனங்களும், தனது...

உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு 
Post

உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு 

எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. ‘ஜன நாயகன்’ படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது.  இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம், நேற்று (ஜனவரி 09) தியேட்டர்களில்...

16 வது நாளாக இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம்; வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் 
Post

16 வது நாளாக இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம்; வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார் 

முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி ஆசிரியர்கள் 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நாலரை ஆண்டுகளாகியும் ஊதிய முரண்பாடு களையப்படாததால் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ),  கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் முக்கிய இடங்களில் ஆசிரியர்கள் போராடுவதும், அவர்களை போலீஸார்...

சிலம்பம் சுற்றி, பொங்கல் வைத்து கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் உற்சாகம்
Post

சிலம்பம் சுற்றி, பொங்கல் வைத்து கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் உற்சாகம்

இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகிய இருவரும் பசுவுக்கும், கன்றுக்கும் வாழைப்பழம் ஊட்டினார்கள். பின்னர் அங்கு பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது. அதன் பிறகு அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் பயிற்சி பெறும் மாணவிகளுக்கு பொங்கல் பரிசு பொருட்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.மேலும் விழாவில் பங்கேற்ற பெண்களுக்கும் பரிசுப் பொருட்கள்...

உஷாரா இருங்க மிஸ் பண்ணிடாதீங்க! டாஸ்மாக் கடைகள்  3 நாள் "லீவுங்க" 
Post

உஷாரா இருங்க மிஸ் பண்ணிடாதீங்க! டாஸ்மாக் கடைகள்  3 நாள் "லீவுங்க" 

மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “வருகின்ற 16-01-2026 அன்று திருவள்ளுவர் தினம் வெள்ளிக்கிழமை). 26-01-2026 அன்று குடியரசு தினம் (திங்கட்கிழமை மற்றும் 01-02-2026 அன்று வடலூர் வள்ளலார் நினைவு தினம் ஞாயிற்றுக்கிழமை) மேற்படி மூன்று தினங்களில் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் மதுபான கடைகளுடன் இணைந்த மதுக்கூடங்கள் மூடப்பட்டு விடுமுறை (Dry Day) நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே மேற்படி தினத்தன்று மதுவகைகள் விற்பனை செய்யக்கூடாது என பார்வையில் காணும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது....

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல் : சென்சார் போர்டு மேல்முறையீடு:சட்டப்படி எதிர்கொள்வோம்:தவெக வழக்கறிஞர் 
Post

ஜனநாயகனுக்கு மீண்டும் சிக்கல் : சென்சார் போர்டு மேல்முறையீடு:சட்டப்படி எதிர்கொள்வோம்:தவெக வழக்கறிஞர் 

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படத்திற்கான சென்சார் சான்றிதழ் உடனடியாக வழங்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தவெக வழக்கறிஞர் சக்கரவர்த்தி சென்னை உயர்நீதிமன்ற வாசலில் செய்தியாளர்களை சந்தித்தார். ஜனநாயகன் படத்தை பார்த்து விட்டு சென்சார் சான்றிதழ் வழங்காமல் தணிக்கை குழுவினர் காலம் தாழ்த்தி வந்தனர். விஜய் ரசிகர்களின் கொண்டாட்டத்தை தடுக்கும் வகையில் சென்சார் போர்டு செயல்பட்டு வந்தது.  பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.  அந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்ட்டது. சென்சார்...

போகி பண்டிகை, டயர், ரசாயன பொருட்கள் எரிக்க வேண்டாம் : பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் 
Post

போகி பண்டிகை, டயர், ரசாயன பொருட்கள் எரிக்க வேண்டாம் : பொதுமக்களுக்கு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள் 

இதுகுறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:-நமது முன்னோர்கள் பொங்கல் திருநாளுக்கு முன் பழைய கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் போகிப்பண்டிகையினைக் கொண்டாடி வந்துள்ளனர். இயற்கைப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பழைய பொருட்களை தீயிட்டுக் கொளுத்தி வந்துள்ளனர். இச்செய்கையால் காற்று மாசுபடாமல் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் இருந்து வந்துள்ளது. ஆனால் இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தற்பொழுது போகிப்பண்டிகையின் பொழுது பழைய பொருட்களான பிளாஸ்டிக், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர் மற்றும்...

× Free India Logo
Welcome! Free India