தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, சமீபத்தில் அரசு பள்ளி ஒன்றில் ஆய்வு மேற்கொண்டபோது மாணவிகளுடன் கலந்துரையாடிய சம்பவம் அரசியல் வட்டாரங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வின்போது மாணவிகளிடம் அமைச்சர் கீர்த்தனா ஆங்கிலத்தில் கேள்விகள் எழுப்பினார். அதற்கு சில மாணவிகள் பதிலளிக்க முடியாமல் இருந்த நிலையில், அங்கிருந்த ஆசிரியையிடம் அவர், “லாஸ்ட் பெஞ்ச் மாணவிகளை நினைத்துப் பாருங்கள்” என்று தெரிவித்தார். அமைச்சரின் இந்த கருத்து சர்ச்சையான நிலையில், முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் பதிவு பதிலடி கொடுக்கும் விதமாக இருந்தது. அதில்,...
Category: TamilNadu
தவெக ஆட்சியை கவிழ்க்க சதி; நடந்தது என்ன?…..
இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், சதித்திட்டம் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் வெளிவந்துள்ளன. தகவல்களின் படி, தவெக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக நரேஷை முதன்முதலில் அசோக் குமார் தொடர்புகொண்டதாக கூறப்படுகிறது. சில எம்.எல்.ஏ.க்களை பணம் கொடுத்து தங்கள் தரப்புக்கு இழுக்க வேண்டும் என நரேஷிடம் அசோக் குமார் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை திருநாவுக்கரசு மூலமாக செய்து முடிக்கலாம் என்ற யோசனையை நரேஷ் முன்வைத்ததாகவும், தவெக...
ஆஜராகாத அமைச்சர்… அடுக்கடுக்கான கேள்வி கேட்ட நீதிபதி..!
புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை எழில் நகரில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனின் சகோதரர் மரிய குளோத்தி வீடு உள்ளது. இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அமைச்சருக்கும் அவரது தம்பிக்கும் இடையில் சொத்துப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் மரிய வில்சன், 2022 ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி அன்று, மரிய குளோத் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது தம்பி மனைவி கேர்லைன் கிளேட்டையும் தாக்கியதாக லாஸ்பேட் போலீஸார் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. அந்த...
”அவர் போன்ற ரவுடியை தவெகவில் சேர்க்க மாட்டோம்..” – அமைச்சர் நிர்மல்குமார்!
தமிழக எரிசக்தி மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் மதுரை திருநகரில் உள்ள திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ”அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார் அவர் பேசியதை பார்த்திருப்பீர்கள். முதல்வரை தனிப்பட்ட முறையில் எவ்வளவு கேவலமாக பேசினார். அவர் வாய்க்கொழுப்பில் தேவையில்லாமல் அவதூறாக மோசமாக பேசியிருக்கிறார். கருணாநிதி காரணத்திலிருந்து இப்படித்தான் பேசுவார்கள், குடும்பத்தை பற்றி பேசுவது தான் கருணாநிதி காலத்திலிருந்து திமுகவின் வழக்கம். அவருடைய முன் ஜாமின் ரத்து செய்யப்பட்டு...
தம்பியை தாக்கிய வழக்கு … அமைச்சர் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு..!
புதுச்சேரியில் உள்ள லாஸ்பேட்டை எழில் நகரில் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சனின் சகோதரர் மரிய குளோத்தி வீடு உள்ளது. இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு அமைச்சருக்கும் அவரது தம்பிக்கும் இடையில் சொத்துப் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் மரிய வில்சன், 2022 ஆகஸ்டு மாதம் 8-ம் தேதி அன்று, மரிய குளோத் வீட்டுக்குள் புகுந்து அவரையும் அவரது தம்பி மனைவி கேர்லைன் கிளேட்டையும் தாக்கியதாக லாஸ்பேட் போலீஸார் நிலையத்தில் புகார் பதிவாகியுள்ளது. அந்த...
”கொளத்தூர் ஜெயிக்க முடில.. ஆனா பர்சேஸ் மட்டும் நடக்குது..” – அமைச்சர் சரமாரி கேள்வி..!
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் பங்கேற்ற பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “திமுகவும் திமுக சார்ந்த முன்னாள் அமைச்சர்களும் ஸ்டாலின் அவர்களும் மகன் உதயநிதி தூண்டுதலின் பேரில் தான் அனைத்து குதிரை பேரமும் நடைபெறுகிறது. அதற்கு ஆதாரத்துடன் இன்று பலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். குதிரை பேரத்தின் மூலம் எங்களுடைய எம்எல்ஏக்களை பர்சேஸ் பண்ண முயன்றது ஸ்டாலினும் அவருடைய உத்தரவின் பேரில்...
ஆளுநருக்கு எதிரான ஆட்ட்த்தை தொடங்கிய தவெக… !
மதுரையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், வைகை ஆற்றைக் கடந்து சென்றபோது அதில் தண்ணீர் இல்லாத நிலையை கண்டு வேதனை அடைந்ததாக தெரிவித்தார். மேலும், வைகை ஆற்றை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், ஆளுநர் மாளிகையே நேரடியாக களமிறங்கும் என்றும் கூறினார். ஆளுநரின் இந்த கருத்துக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. இந்நிலையில், ஆளுநரின் கருத்துக்கு பதிலடி தந்துள்ளார் அமைச்சர் நிர்மல் குமார். மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...
நாளுக்கு நாள் ஏறும் தங்கத்தின் விலை… நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி!
இந்த வாரத் தொடக்கத்தில் தங்கத்தின் விலை சற்று குறைந்திருந்தாலும், கடந்த சில நாட்களாக அதன் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வருகிறது. நேற்று (ஜூலை 2) ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை இருமுறை அதிரடி மாற்றம் கண்டது. நேற்று காலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்த நிலையில், மாலை நேரத்தில் மேலும் ரூ.1,200 அதிகரித்து நகைப் பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. இதன் மூலம், நேற்று மாலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு சவரன்...
தவெக எம்.எல்.ஏவிடம் பேரம்… சுபாஷ் பண்ணையாரின் நெருங்கிய கூட்டாளிக்கு தொடர்பா?
தவெக ஆட்சியை கவிழ்க்கும் நோக்கில் சதி நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன. இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அஸ்தினாபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர், “தினமுகம்” என்ற மாத இதழை நடத்தி வருவதாகவும், முதல் தகவல் அறிக்கையில் (FIR) குறிப்பிடப்பட்டுள்ள பத்திரிகையாளர் இவரே எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், எம்எல்ஏ இளையராஜாவை இருமுறை நேரடியாக தொடர்புகொண்டு, IPDS அமைப்பைச் சேர்ந்த திருநாவுக்கரசு சார்பில் பேசியது ராஜேஷ்தான் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், இந்த...
Confident – அ இருங்க.. 5 வருஷமும் நாம தான்… முதல்வர் விஜய் உறுதி..!
தமிழக முதல்வர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தோழமை கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம், சென்னையை அடுத்த கோவளத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் இன்று(ஜூலை 01) மாலை நடைபெற்றது. 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெருங்கட்சியாக உருவெடுத்த தவெக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. இந்நிலையில், ஆட்சி அமைக்க ஆதரவு அளித்த தோழமை...










