அறிக்கையில் கூறியிருப்பதாவது, ”காவிரியில் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடகம் திறந்து விடுவதற்கான எந்த அறிகுறியும் இல்லாததாலும், வடகிழக்கு பருவமழையும் பொய்த்துப் போகும் என்று கணிக்கப்பட்டிருப்பதாலும் நடப்பு ஆண்டில் சம்பா சாகுபடியும் நடைபெற வாய்ப்பில்லை என்று உழவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். மிக மோசமான இந்த சூழலை சமாளிக்க அரசுத் தரப்பில் எதுவும் செய்யப்படாதது ஏமாற்றமளிக்கிறது. காவிரி பாசன மாவட்டங்களில் குறுவை, சம்பா, தாளடி ஆகிய 3 பருவங்களில் நெல் சாகுபடி செய்யப் படுவது வழக்கம். குறுவை சாகுபடி...
Category: TamilNadu
தமிழ் இலக்கியத்தின் கரிசல் குரல் மௌனம்… பூமணி மறைவுக்கு அரசு மரியாதை
தமிழ் இலக்கிய உலகின் முன்னணி எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான பூமணி (79) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று (12.07.2026) இரவு 11 மணி அளவில் சென்னையில் காலமானார். இவர் இன்றைய தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகருக்கு மேற்கே உள்ள ஆண்டிபட்டி எனும் ஊரில் பிறந்தவர் பூமணி. சிறுவயதிலிருந்து தமிழ் இலக்கிய உலகில் பல்வேறு படைப்புகளை கொடுத்தவர். 1971ல் பூமணியின் முதல் சிறுகதை தொகுப்பு “அறுப்பு” என்னும் சிறுகதை தாமரை இதழில் வெளிவந்தது. அதனைத் தொடர்ந்து நொறுங்கல்கள்,...
TRB உதவிப் பேராசிரியர் தேர்வு சர்ச்சை… புதிய குற்றச்சாட்டுகள் பரபரப்பு!
தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசுக் கல்லூரிகளில், ஏராளமான உதவிப் பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன. அவற்றில் 2,708 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை டி.ஆர்.பி. எனும் ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்தாண்டு டிசம்பரில் நடத்தியது. சுமார் 42,064 பேர் பங்கேற்ற இந்தத் தேர்வின் முடிவுகள், கடந்த மார்ச் மற்றும் ஜூன் இறுதியில் வெளியாகின. இதில்தான் தற்போது பலநூறு கோடி ரூபாய் முறைகேடு சர்ச்சை வெடித்துள்ளது! இதுகுறித்து பாதிக்கப்பட்ட தேர்வர் ஒருவரிடம் பேசினோம். “முதல் தாள் 150 மதிப்பெண் கொண்டது. இது...
திருச்சி கிழக்கு உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தடை… உயர்நீதிமன்றம் உத்தரவு…
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், இரு தொகுதிகளில் போட்டியிட்ட முதலமைச்சர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல, கரூர் தொகுதி எம்எல்ஏ எம்.ஆர். விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி எம்எல்ஏ சி.விஜயபாஸ்கர், பெருந்துறை எம்எல்ஏ ஜெயக்குமார் ஆகியோர் செய்து தவெகவில் இணைந்துள்ளனர்.இவர்களின் வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இந்தத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக்கோரி திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த...
பள்ளிகளில் கீர்த்தனாவுக்கு NO ENTRY-ஆ? அமைச்சர் ராஜ்மோகன் அறிக்கையின் பின்னணி என்ன?
அண்மையில் தவெக அமைச்சர்கள், தொண்டர்கள் செய்வது அனைத்தும் தலைமைக்கு தலைவலியாக மாறியுள்ளதாக்க் கூறப்படுகிறது. குறிப்பாக அமைச்சர் கீர்த்தனாவின் ஆய்வு, அவர் பேசிய “லாஸ்ட் பெஞ்ச்” கருத்து, தவெக அரசு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியதாகவே விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர். அதுமட்டுமல்லாமல், பள்ளிகளில் முதலமைச்சர் விஜய்யின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட வீடியோவும் மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்த சர்ச்சைகள் எழுந்து தவெக அரசுக்கு பெரும் குடைச்சலை கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இனி வரும் காலங்களில்...
கங்கைகொண்டானில் பிரம்மாண்ட தொழில் திட்டம்… ₹15,037 கோடி முதலீட்டை ஈர்த்த தமிழக அரசு!
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்வில் திருநெல்வேலி மாவட்டம் சிப்காட் கங்கைகொண்டான் தொழிற்பூங்காவில் 15,037 கோடி ரூபாய் முதலீட்டில் 2,670 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் விக்ரம் சோலார் நிறுவனத்தின் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் உற்பத்தி ஆலைக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக வெளியிட்ட செய்திக் குறிப்பில், விக்ரம் சோலார் குழுமம் தமிழ்நாட்டில் ஒரகடம் மற்றும் வல்லம்...
நாளை முதல் உயரும் பால் விலை.. அதிர்ச்சியில் பொதுமக்கள்..!
இந்தியாவில் வரலாறு காணாத அளவில் பால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலும் கடந்த ஓராண்டாக பால் உற்பத்தி சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, பால் விநியோகத்தை தடையின்றி மேற்கொள்ளவும், பால் வணிகத்தை தக்கவைத்துக் கொள்ளவும் தனியார் பால் நிறுவனங்கள் பால் உற்பத்தியாளர்களுக்கு போட்டி போட்டு அதிக கொள்முதல் விலையை வழங்கி வருகின்றன. இந்த சூழலில்தான் ஹட்சன் நிறுவனம் ஆரோக்யா பால்...
தமிழகத்தில் அடிக்கடி மின்தடையா? இனி Permanent Solution… EB-யின் புதிய RTEP திட்டம்!
தமிழகம் முழுவதும் கடந்த சில மாதங்களாகவே மின்தடை என்பது அதிகமாக ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் அனைவரும் இரவில் பெரும் அவதிக்குள்ளாகிறார்கள். இந்நிலை மாற்றவதற்காக தமிழகம் முழுவதும் நிலையான மற்றும் தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்ய மீண்டும் மீண்டும் ஏற்படும் மின் தடை பிரச்னைகளை நிரந்தரமாக தீர்க்கும் வகையில் “Repeat Tripping Elimination Programme (RTEP)” என்ற புதிய திட்டத்தை அமல்படுத்துமாறு மேலாண்மை இயக்குநர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மின்...
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்… உயர்ந்த சம்பளம்..!
அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விக்னேஷ், டாஸ்மாக் துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், கள்ளச்சந்தை மதுவிற்பனையை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், மதுபாட்டில்களுக்கு கூடுதலாக ரூ.10 வசூலிக்கும் ஊழியர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என எச்சரித்தார். இதனைத் தொடர்ந்து, டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25 சதவீத ஊதிய உயர்வு வழங்க முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். ஊதிய உயர்வின் மூலம் துணை விற்பனையாளர்களின் சம்பளம் ரூ.17,925 ஆகவும், விற்பனையாளர்களின்...
”நாடகக் காதலால் பாதிக்கப்படுவோருக்கு ஒரு அமைப்பு தேவை..” – மோகன் ஜி வலியுறுத்தல்.!
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காதல் திருமணம் செய்த கல்லூரி மாணவி திவ்யதர்ஷினியை மீண்டும் வீட்டிற்கு அழைத்துச் செல்ல பெற்றோர் காவல் நிலையத்தில் கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பர்கூரில் உள்ள கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வரும் திவ்யதர்ஷினி, ஆட்டோ ஓட்டுநர் பெருமாளை கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், இருவரும் ஏலகிரி முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு கேட்டு மகளிர் காவல் நிலையத்தில்...










