திமுக ஆட்சிக் காலத்தில் தொடங்கப்பட்ட தமிழ்நாடு அரசின் Fact Check Unit-க்கு, தற்போதைய தமிழக வெற்றிக் கழக (தவெக) ஆட்சியில் Information Integrity Desk (IID) என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக Online Thalapathy Fans Club தலைவரான குரு (@Guru Thalaiva) நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத் துறை (DIPR)-யின் கீழ் இயங்கும் சமூக வலைதளப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக (Special Officer), தவெக ஐ.டி. விங்...
Category: TamilNadu
இது அரசு ஆப்பா? தவெக ஆப்பா? கன்ஃபூஸான TNSTC பயனாளிகள்..!
சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தமிழ்நாட்டில் த.வெ.க. ஆட்சி அமைந்த பிறகு, பல்வேறு அரசு துறைகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, முந்தைய மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட சில திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டதுடன், போக்குவரத்துத் துறையிலும் புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பழைய பேருந்து கொள்முதல் ஒப்பந்தங்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய பேருந்துகளை வாங்கும் நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. மேலும், புதிய பேருந்துகள் த.வெ.க. கொடி வண்ணங்களில் வர்ணம் பூசப்பட்ட புகைப்படங்களும் அண்மையில் இணையத்தில் பரவின....
ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல் தான்… ஸ்டாலின் தாக்கு..!
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கூடுதல் மின்கட்டணம் தொடர்பாக 3.70 லட்சம் குடும்பங்கள் புகார் அளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொண்டிருப்பதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். சமூக வலைதளங்களில் பொதுமக்கள் பகிர்ந்து வரும் புகார்கள் மற்றும் வேதனைகளைப் பார்க்கும்போது, பாதிக்கப்பட்டவர்களின் உண்மையான எண்ணிக்கை இதைவிட பல மடங்கு அதிகமாக இருக்கக்கூடும் என்றும் அவர் கூறியுள்ளார். மின்கட்டணக் கணக்கீட்டில் ஏற்பட்டுள்ள தவறுகள் குறித்து முழுமையான ஆய்வு மேற்கொண்டு, அதற்கு உரிய தீர்வு காணப்படும் வரை பொதுமக்கள் மின்கட்டணம் செலுத்துவதற்கான கால...
கர்நாடக அரசுக்கு செக்…..காவிரி மேலாண்மையின் அதிரடி உத்தரவு….!
காவிரி நீர் பங்கீடு தொடர்பான கர்நாடகா தமிழ்நாடு இடையே பல ஆண்டுகளாக சிக்கல் நீடித்து வரும் நிலையில் தற்போது அதற்கு செக் வைக்கும் விதமாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி தமிழகத்திற்கு உரிய நீர் கிடைப்பதை உறுதி செய்வதற்காக காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் டெல்லியில் காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டத்தில் தமிழகம் மற்றும் கர்நாடக நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பேசிய போது காவிரியில் இருந்து 29-ந்தேதி முதல்...
Gen Z இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்களா? – ஆளுநர் சொன்னது என்ன?
திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகப்பட்டியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 33-வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழக வேந்தருமான ஆர்.வி. அர்லேக்கர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், பட்டம் மற்றும் முதுகலைப் பட்டம் பெற வந்த அனைத்து மாணவர்களையும் அரங்கிற்குள் அமர வைக்க முடியாததற்கு முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். சில மாணவர்கள் அரங்கிற்கு வெளியே இருந்ததாகத் தனக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அனைவருக்கும் போதுமான வசதிகளை ஏற்படுத்த வேண்டியது பல்கலைக்கழக...
சிக்கன் பிரியர்களுக்கு ஷாக்… ஜூலை 31ல் இருந்து சிக்கனே கிடைக்காது..!
தமிழ்நாடு கோழி வணிகர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான கோழி வணிகர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கறி கோழிக்கு தீவனக் கட்டுப்பாடு தொடர்பாக வழிகாட்டி, நெறிமுறைகளை அனைத்து மண்டல, மாவட்ட கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு அரசு எடுத்துரைக்க வேண்டும். கறி கோழி விற்பனைக்கு வரும் முன்னர் 15 மணி நேரத்துக்கு முன்பே தீவனம் வழங்குவதை நிறுத்தும் நடைமுறையை, கோழி உற்பத்தியாளர்கள் கடை பிடிக்க வேண்டும். இதனால் கோழிகளுக்கு தீவனம் கொடுப்பதால், அந்த...
தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் தாக்கல்: இடம்பெறவுள்ள முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?
தமிழ்நாடு சட்டமன்ற கூட்டம் வருகின்ற ஆகஸ்ட் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இதில் தவெக ஆட்சி அமைந்து முதல் பட்ஜெட் தாக்கல் என்பதால் இது குறித்து எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் 2026-2027 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ள நிலையில் இது குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் வேளாண்துறை அமைச்சர் வினோத் தலைமையில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன்,...
கவின் முதலாம் ஆண்டு நினைவு நாள்: குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல்…!
திருநெல்வேலி மாவட்டத்தில் சாதி ஆணவக் கொலை செய்யப்பட்டதாகக் கூறப்படும் மென்பொருள் பொறியாளர் கவின் செல்வகணேஷின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த 27 வயதான கவின், சென்னையில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வந்தார். இவர் பள்ளிப் பருவம் முதல் பழகி வந்த பெண்ணுடன் காதல் உறவில் இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஆண்டு ஜூலை 27ஆம் தேதி, திருநெல்வேலி கே.டி.சி. நகரில் உள்ள மருத்துவ மையத்திற்கு சென்றிருந்த...
கமிஷனில் கல்லாக்கட்ட நினைக்கும் சீனியர் அமைச்சர்..? கோட்டை லீக்ஸ்..!
தவெக தலைவராக இருந்த விஜயை, இட்னு வந்து இட்னு போய் முதலமைச்சர் அரியணையில் ஏற்றிய அந்த சீனியர் அமைச்சர், ஒப்பந்தப் பணிகளை மேற்கொள்ளும் நபர்களிடம் இருந்து அதிகாரிகள் 10 சதவீத கமிஷன் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதில் தனக்கான தொகை சரியாக வந்து சேர வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. மேலும், பழைய நிலுவை பில்களைத் தீர்வு செய்வதற்காக 3 சதவீத கமிஷன் பெற்றுக்கொள்ளலாம் என்றும், அதிலும் தனக்கான பங்கு முறையாக வழங்கப்பட வேண்டும் என அந்த...
Silent Mode-ல் இருந்து வெளியே வந்த விஜய்… ஜனநாயகத்துக்கா? ஜனநாயகனுக்கா?
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, தேசிய தேர்வு முகமை மீதான தொடர் நம்பிக்கையிழப்பு, கல்வித்துறையில் வெளிச்சத்திற்கு வந்துள்ள பல்வேறு முறைகேடுகள் ஆகியவற்றிற்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி முன்னெடுத்த ஏராளமான மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் கலந்து கொண்ட ஜனநாயகப் போராட்டத்தின் மீது காவல்துறையை ஏவி தடியடி நடத்தியிருப்பது கண்ணீர்புகை குண்டு வீச்சு உள்ளிட்ட மிகக் கடுமையாக நடந்து கொண்டது என தலைநகர்...










