துணை முதல்வர், அரசு ஊழியர்கள், அதிகாரிகள், அமைச்சர்கள் என பலரும் தலைமை செயலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் வேட்டி, சட்டை அணிந்து முதல்வர் ஸ்டாலின் வந்திருந்தார். பொங்கல் விழாவில் அவர் பேசியதாவது: அனைவருக்கும் வணக்கம், தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி கொண்டு இருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, திமுக அரசு பணியாற்றி கொண்டு இருக்கிறது. நாங்கள்...
Category: TamilNadu
போகியால் புகைமூட்டமான தலைநகர் சென்னை: 9 விமானங்கள் ரத்து: பயணிகள் அவதி
போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்கள் கொளுத்தப்பட்டன. இதனால். கும்மிடிப்பூண்டி – 196, மணலி – 144, கொடுங்கையூர்- 123, அரும்பாக்கம் – 177, காந்தி நகர்(எண்ணூர்) – 144, பெருங்குடி – 103, வேளச்சேரி – 76, ராயபுரத்தில் – 64 காற்றில் மாசு ஏற்பட்டுள்ளது. போகி பண்டிகையால் மீனம்பாக்கம், கவுல் பஜாா், பொழிச்சலூா், பம்மல் அனகாபுத்தூா் உள்பட சென்னை விமான நிலையத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த குடியிருப்புவாசிகள் பழைய பொருள்களை எரித்த போது கடும்புகை...
போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஆசிரியர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி
சம வேலை சம ஊதியம் கோரிக்கையை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பகுதி நேர ஆசிரியர்கள் ஆறாவது நாளாக இன்று சென்னை எழும்பூரில் உள்ள டிபிஐ வளாகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களை தடுத்து போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் சென்னையில் பல்வேறு மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு பகுதியினர் கிருஷ்ணா மண்டபத்தில் அடைக்கப்பட்டு இருந்தனர். அதில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் அண்ணன் என்பவர்...
2025-ம் ஆண்டுக்கான இலக்கிய மாமணி விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு
2025-ஆம் ஆண்டிற்கான இலக்கிய மாமணி விருதுகளில் மரபுத் தமிழ் வகைப்பாட்டில் ”தமிழ்நாட்டில் பல இளைஞர்களுக்கு மேடைப் பேச்சாற்றலுக்கான நல்வழிகாட்டியாகவும் உந்து சக்தியாகவும் திகழ்ந்து வருபவரும் சென்னை, கம்பன் கழகத்தில் செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றியவரும் மாபெரும் தமிழறிஞர்களின் வழிகாட்டுதல்களோடு இலக்கியப் பணியாற்றி வரும் இலக்கியச் சுடர் த. இராமலிங்கம் (வயது 68); ஆய்வுத் தமிழ் வகைப்பாட்டில் இலக்கியப் பேராசான் ஜீவானந்தம், 1959-இல் தொடங்கப்பட்ட தாமரை இலக்கிய இதழின் ஆசிரியராக கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றியவரும், இந்திய கம்யூனிஸ்ட்...
அமைச்சர் துரைமுருகனுக்கு அண்ணாவிருது: முன்னாள் தலைமை செயலாளர் இறையன்புக்கு திருவிக விருது: தமிழக அரசு அறிவிப்பு
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு அரசின் பேரறிஞர் அண்ணா விருது அமைச்சர் துரைமுருகனுக்கு வழங்கப்படும். தந்தை பெரியார் விருது வழக்கறிஞர் அருள்மொழிக்கு வழங்கப்படும். எஸ்.எம்.இதயத்துல்லாவுக்கு காமராஜர் விருது, கவிஞர் நெல்லை ஜெயந்தாவுக்கு பாரதியார் விருது வழங்கப்படும். கவிஞரும் திரைப்பட பாடலாசிரியருமான யுகபாரதிக்கு பாவேந்தர் பாரதிதாசன் விருது வழங்கப்படும். தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புக்கு வழங்கப்படும். கி.ஆ.பெ. விசுவநாதன் விருது சு.செல்லப்பாவுக்கும், விடுதலை விரும்பிக்கு கலைஞர் விருதும் வழங்கப்படும். அய்யன் திருவள்ளுவர்...
10 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகள் உண்ணாவிரதம்
இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கிய டாக்டர் ரவீந்திரநாத் நிருபர்களிடம் பேசியதாவது: மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த பயிற்சி மருத்துவர் இடங்களில் 20 விழுக்காடு அளவிற்கான இடங்களை வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு வழங்கிட வேண்டும். மாவட்ட அரசு மருத்துவமனைகளிலும், வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மருத்துவப் பட்டதாரிகளுக்கு பயிற்சி மருத்துவராக பயிற்சி பெற அனுமதி வழங்கிட தேசிய மருத்துவ ஆணையமே (NMC) 2022 ஆண்டிலேயே மாவட்ட அரசு மருத்துவமனைகளில் FMG பட்டதாரிகளை பயிற்சி மருத்துவராக பயிற்சி பெறலாம்...
'ஜனநாயகன்' சென்சார் சர்டிபிகேட் வழக்கு: உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் படம் கடந்த 9 ஆம் தேதி வெளியாவதாக இருந்தது. தவெக எனும் கட்சியை தொடங்கியுள்ள நடிகர் விஜயின் கடைசி படம் இது என்பதால் அவரது ரசிகர்கள் உள்பட அனைவரும் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த நிலையில் ஜனநாயகன் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ரத்தக்காட்சிகள் அதிக அளவில் இடம் பெற்று இருந்ததால், படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகக் கூறி மறு தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது...
நடிகர் கமல்ஹாசன் பெயர்,படத்தை பயன்படுத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை
சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற பெயருடைய நிறுவனம், தனது புகைப்படம், பெயர், உலகநாயகன் என்ற படத்தையும், தனது பிரபல வசனத்தையும் தனது அனுமதியின்றி பயன்படுத்தி, டி–சர்ட்களையும், சர்ட்களையும் விற்பனை செய்து வருவதாகக் கூறி, நடிகர் கமல்ஹாசன், சென்னை உயர் நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன் விசாரணைக்கு வந்த போது, தனி உரிமையை பாதுகாக்கும் வகையில், நீயே விடை நிறுவனம் மட்டுமல்லாமல், வேறு எந்த நிறுவனங்களும், தனது...
உச்சநீதிமன்றத்தில் ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்காத நிலையில் படம் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. ‘ஜன நாயகன்’ படம் தொடர்பாக வருகிற 21-ந்தேதி கோர்ட்டில் மீண்டும் விசாரணை நடைபெற உள்ளது. இதற்கிடையில் பொங்கல் விடுமுறை வசூலை குறிவைத்தும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையிலும் படத்தை பொங்கலுக்குள் ரிலீஸ் செய்வதற்கான நடவடிக்கைகளை படக்குழுவினர் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ‘நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம், நேற்று (ஜனவரி 09) தியேட்டர்களில்...
16 வது நாளாக இடை நிலை ஆசிரியர்கள் போராட்டம்; வலுக்கட்டாயமாக கைது செய்த போலீசார்
முரண்பாட்டை களைந்து சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி ஆசிரியர்கள் 15 ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர். இதற்கிடையே கடந்த சட்டப்பேரவை தேர்தலின்போது, இந்தக் கோரிக்கையை நிறைவேற்றித் தருவதாக திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நாலரை ஆண்டுகளாகியும் ஊதிய முரண்பாடு களையப்படாததால் இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ), கடந்த டிசம்பர் 26-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, சென்னையில் முக்கிய இடங்களில் ஆசிரியர்கள் போராடுவதும், அவர்களை போலீஸார்...










