Category: TamilNadu

Home TamilNadu
சாம்சங் ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு 
Post

சாம்சங் ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர் – பேச்சுவார்த்தையில் உடன்பாடு 

சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் நாடறிந்தது. சாம்சங்க ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு, தொழிற்சங்கம் தொடங்க அனுமதி, 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி 1,500க்கும் மேற்பட்ட சாம்சங் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கம்யூனிஸ்ட் கட்சிகள் தீவிரமாக இப்போராட்டத்தை முன்னெடுத்தனர். 36 நாள்களுக்கும் மேலாக நடைபெற்று வந்த இந்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.  பல கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பின்னரும் முடிவு...

”டீ வாங்கிக் கொடுக்கும் சேகர்பாபு.. முதிர்ச்சியின்மை கொண்ட உதயநிதி” – எடப்பாடி பழனிசாமி காட்டம்! 
Post

”டீ வாங்கிக் கொடுக்கும் சேகர்பாபு.. முதிர்ச்சியின்மை கொண்ட உதயநிதி” – எடப்பாடி பழனிசாமி காட்டம்! 

அதிமுகவின் 53 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் முன்னாள் முதலமைச்சர்களான எம்ஜிஆர் ,  ஜெயலலிதா சிலைகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மாலையிட்டு மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து கட்சிக் கம்பத்தில் அதிமுக கொடியை ஏற்றிய அவர்,  தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, ”குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தல் சென்னை உட்பட பல மாவட்டங்களில் அதி கன மழை பெய்யும் என வானிலை...

விட்றா ஏர்போட்டுக்கு பஸ்-அ..டாக்சி கிடைக்காமல் தவித்த பயணிகள்.. பிக்-அப் செய்ய விரைந்த அரசு பேருந்து
Post

விட்றா ஏர்போட்டுக்கு பஸ்-அ..டாக்சி கிடைக்காமல் தவித்த பயணிகள்.. பிக்-அப் செய்ய விரைந்த அரசு பேருந்து

கனமழை காரணமாக கால்டாக்சி உள்ளிட்ட வாகனங்கள் கிடைக்காமல் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் மாநகர பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டனர்.  வடகிழக்கு பருவழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் வாடகை வாகனங்கள் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து  விமான நிலையம் வழியாக செல்லும் பேருந்துகள் விமானங்களின் வருகை நேரத்திற்கு ஏற்றவாறு விமான நிலையத்திற்கு உள்ளே...

இன்றும், நாளையும் இலவச உணவு… முதலமைச்சர் கொடுத்த அசத்தல் அறிவிப்பு!
Post

இன்றும், நாளையும் இலவச உணவு… முதலமைச்சர் கொடுத்த அசத்தல் அறிவிப்பு!

அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் . சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பெரும்பாலான இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உணவுக்காக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும்...

கொள்ளளவை எட்டிய குதிரையாறு அணை… அபாய எச்சரிக்கை விடுத்த பொதுப்பணித்துறை!
Post

கொள்ளளவை எட்டிய குதிரையாறு அணை… அபாய எச்சரிக்கை விடுத்த பொதுப்பணித்துறை!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், தொடர் மலை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பழனி அருகே உள்ள வரதமா நதி, பாலாறு பொருந்தலாறு அணை , குதிரையாறு அணைகள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் 66 அடி கொள்ளளவு கொண்ட  வரதமா நதி அணை  நிரம்பியது. இந்நிலையில் பாலாறு அணைக்கும், குதிரையாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.  குதிரையாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால்...

விடுமுறைக் கொடுக்காத கலெக்டர்… அவதிக்குள்ளான மாணவர்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
Post

விடுமுறைக் கொடுக்காத கலெக்டர்… அவதிக்குள்ளான மாணவர்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என பெற்றோர் எதிர்பார்த்தனர். ஆனால் மாவட்ட கலெக்டர் மாவட்ட கல்வித்துறையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை . இதனால் பள்ளி மாணவ மாணவிகள் நனைந்தபடி இன்று பள்ளிகளுக்கு சென்றனர். இந்த நிலையில் இன்று மதியம் 2 மணி 7 நிமிட அளவில்  மாவட்ட கலெக்டர் கூறியதாக மக்கள் தொடர் அலுவலர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் கனமழை பெய்து வருவதால்...

சினிமா ஃபைனான்சியர் வழக்கு – நடிகர் தனுஷின் தந்தைக்கு சம்மன் அனுப்ப உத்தரவு
Post

சினிமா ஃபைனான்சியர் வழக்கு – நடிகர் தனுஷின் தந்தைக்கு சம்மன் அனுப்ப உத்தரவு

ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி சினிமா ஃபைனான்சியர் ககன் போத்ரா தொடர்ந்த வழக்கில், நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்ப சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இயக்குநர் கஸ்தூரி ராஜா தன்னிடம் 65 லட்சம் பெற்று  மோசடி செய்ததாக, சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், கஸ்தூரி ராஜாவை வழக்கில் இருந்து விடுவித்தது.இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...

இதையெல்லாம் கொச்சைப்படுத்துவீங்களா? – இபிஎஸ்க்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்
Post

இதையெல்லாம் கொச்சைப்படுத்துவீங்களா? – இபிஎஸ்க்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்

தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை கொச்சைப்படுத்துவதா? என இபிஎஸ்க்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார் முதலமைச்சர் என வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என உளறி அறிக்கை விட்டிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதெல்லாம் செய்தி ஊடகங்களில் வெளியானது,...

வந்தே பாரத் ரயிலில் உணவு தரம் இல்லை- நடிகர் பார்த்திபன் குற்றச்சாட்டு
Post

வந்தே பாரத் ரயிலில் உணவு தரம் இல்லை- நடிகர் பார்த்திபன் குற்றச்சாட்டு

வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை படுமோசம் என  நடிகர் பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2022ம் ஆண்டு தனது சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலில் சைவம்...

கனமழை எச்சரிக்கை: 3 நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்
Post

கனமழை எச்சரிக்கை: 3 நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்

சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தரைவழிபோக்குவரத்தை சமாளிக்க 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு  அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து நீர் அகற்றும் பம்புகள் மற்றும் மரம் வெட்டும் கருவிகள் உள்ளிட்டவை சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள தீயணைப்புப்படை வீரர்கள், ரப்பர் படகுகள் உள்ளிட்ட பொருட்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்....

× Free India Logo
Welcome! Free India