கோவையில் சூப்பர் பவர் உள்ளதாக கல்லூரி மாணவர் 4 வது மாடியில் இருந்து குதித்து படுகாயம் – தனியார் மருத்துவமனையில் சிகிச்சை – காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர். கோவை, மலுமிச்சம்பட்டி அருகே மைலேரிபாளையத்தில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர்கள் விடுதியின் 4 – வது மாடியில் இருந்து நேற்று மாலை 19 வயது பிடெக் மாணவரான 19 வயது இளைஞர் குதித்து உள்ளார். அவருக்கு கால் மற்றும் கைகளில் எலும்பு முறிவு...
Category: TamilNadu
”இதயங்கள் இடையேயான அன்பின் முன், இன்னல்கள் பெரிதில்லை” – தொண்டர்களுக்கு விஜய் எழுதிய கடிதம்
தவெக முதல் மாநாடு சிறப்பாக நடைபெற்றதையொட்டி தொண்டர்களுக்கு கடிதம் மூலம் நன்றி தெரிவித்துள்ளார் நடிகர் விஜய். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, “மாநாடு குறித்து உங்களுடன் பேச, இது நான்காவது கடிதம். வாஞ்சையில் நனைந்த வார்த்தைகளில் ஒரு நன்றிக் கடிதம். அரசியலில், கடிதமுறை என்பது ஆகப்பெரும் ஆயுதம். பேரறிஞர் அண்ணா தந்த ஆயுதம். தமிழக மக்கள், நம் அனைவருக்கும் சொந்தமானது. அந்த உணர்வின் அடிப்படையில்தான் நாமும் அதைக் கையில் எடுத்தோம். இந்தக் கடிதம் எழுதும்போது, என்னென்னவோ எண்ண...
சரவெடி அறிவிப்பு…தீபாவளிக்கு லீவு மேல் லீவு கொடுக்கும் அரசு…
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வரும் 31ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. இதனையடுத்து சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் இருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 31ம் தேதி வியாழக்கிழமை என்பதால், அதற்கு அடுத்த நாளான நவம்பர் 1ம் தேதியும் (வெள்ளிக்கிழமை) பொது விடுமுறை என தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனால் வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு என 4 நாட்கள் தொடர்...
உதயநிதி டி-சர்ட் வழக்கு – அரசுக்கு உத்தரவு
அரசு நிகழ்ச்சிகளில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், உதயசூரியன் சின்னம் பொறித்த டி-ஷர்ட் அணிந்து வருவதற்கு எதிரான வழக்கில் தமிழ்நாடு அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை சேலையூரைச் சேர்ந்த வழக்கறிஞர் சத்தியகுமார் தாக்கல் செய்துள்ள இந்த மனுவில், அரசு நிகழ்ச்சிகளில் ஊழியர்கள் முறையான ஆடை அணிந்து வருவதை வலியுறுத்தும் வகையில் கடந்த 2019-ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார். ஃபார்மல் பேண்ட் ஷர்ட் அல்லது வேட்டி சட்டை அணிந்து வர வேண்டும் என...
விஜய் ஏன் அதிமுகவை விமர்சிக்கவில்லை? – இபிஎஸ் சொன்ன வித்தியாசமான பதில்
வரும் சட்டமன்றத் தேர்தலில் ஒத்த கொள்கைகளுடன் கூடிய கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி நலிந்த தொழிலாளர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நிதி உதவி வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழக வெற்றிக்கழகத்தின் மாநில மாநாட்டில் நல்ல தலைவர்களின் பெயர்களை குறிப்பிட்டு விஜய் பேசியதற்கு களங்கம் கற்பிக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். த.வெ.க உடன் கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில்...
சென்னை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு..மொத்தம் எத்தனை வாக்காளர்கள் இருக்காங்க தெரியுமா?
சென்னையில் உள்ள 16 சட்டமன்ற தொகுதிகளில் 2025 ஆம் ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியலை மாவட்ட உதவி தேர்தல் அலுவலர் சுரேஷ் வெளியிட்டார். இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி சென்னை மாவட்டத்தில் உள்ளடங்கிய 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. மேற்படி வரைவு வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4,5,6,8,9,10,13 மற்றும் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படும். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டிலின்...
தவெக தொண்டர்கள் உயிரிழப்பு – பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு
நடிகர் விஜய் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தவெக தொண்டர்கள் இருவர் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் மாநாட்டிற்காக சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் சென்ற தவெக தொண்டர்கள் இருவர் பலியான சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. தேனாம்பேட்டை மெட்ரோ அருகே நடைப்பெற்ற சாலைவிபத்தில் சிக்கி வசந்தகுமார் மற்றும் ரியாஸ் ஆகிய இருவர் உயிரிழந்தனர். சிக்னலை கவனிக்காமல் வேகமாக வந்து போது, லாரி குறுக்கே வருவதையும், சிவப்பு சிக்கனல் இருப்பதை...
மாணவியை நடுரோட்டில் தாக்கிய விவகாரம்- வாலிபால் பயிற்சியாளர் கைது
ஆசிரியையின் கைகடிகாரத்தை திருடியதாக மாணவியை தாக்கிய விவகாரத்தில் பயிற்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பாகலூர் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் பள்ளியில் கடந்த 23ஆம் தேதி மாவட்ட அளவிலான வாலிபால் போட்டிகள் நடந்துள்ளது. ஓசூரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவிகள் இதில் பங்கு பெற்றுள்ளனர். அப்போது, ஓசூர் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். அந்த நேரத்தில் அந்த தனியார் பள்ளி ஆசிரியரின் கைக்கடிகாரத்தை பள்ளி மாணவி திருடியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த அந்த ஆசிரியை...
லாட்டரி மார்ட்டினுக்கு எதிரான வழக்கு – விசாரணையை தொடர அமலாக்கத்துறைக்கு உத்தரவு
லாட்டரி அதிபர் மார்ட்டின், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிரான முறைகேடு வழக்கை முடித்து வைத்த விசாரணை நீதிமன்ற உத்தரவை ரத்து செய்த நீதிபதிகள் விசாரணையை தொடர மத்திய குற்றப்பிரிவு போலீசார், அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர். கடந்த 2012ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை நங்கநல்லூரை சேர்ந்த் நாகராஜன் என்பவரது இல்லத்தில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, 7 கோடியே இருபது லட்சத்து ஐயாயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டது. இது, தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், மார்டின் உள்ளிட்டோருடன் இணைந்து...
தனிமையில் இருப்பதை எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்- தட்டிக்கேட்ட பெண்ணுக்கு நேர்ந்த சோகம்
பட்டுக்கோட்டை அருகே வீட்டில் தனிமையில் இருந்ததை எட்டிப்பார்த்த பக்கத்து வீட்டுக்காரரை தட்டிக்கேட்ட பெண் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை அருகே உள்ள நடுவிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மனைவி ரோஜா வயது 32 .இன்று காலை அதே பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் ரோஜாவை அருவாளால் கழுத்தை வெட்டி கொலை செய்தது அந்தப் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டு இறந்த ரோஜா இன்று காலை 100 நாள் வேலைக்கு...










