Category: TamilNadu

Home TamilNadu
என்னது ! ரயிலில் ராமேஸ்வரம் வந்த உ.பி. பக்தர்கள் 300 பேர் டிக்கெட் எடுக்கலயா..!!
Post

என்னது ! ரயிலில் ராமேஸ்வரம் வந்த உ.பி. பக்தர்கள் 300 பேர் டிக்கெட் எடுக்கலயா..!!

ராமேஸ்வரம் கோவில் (இராமநாதசுவாமி கோயில்) என்பது தமிழ்நாட்டில் உள்ள ஒரு முக்கியமான இந்துத் தலம், இது 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று; இங்கு சிவபெருமான் ராமநாதராக அருள்பாலிக்கிறார், இது ராமர் சிவபெருமானை வழிபட்டதாக நம்பப்படுகிறது, மேலும் இங்குள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடுவது பாவங்களை நீக்கும் என்ற நம்பிக்கை உள்ளது, மேலும் அதன் நீண்ட மண்டபங்களும் கட்டிடக்கலையும் மிகவும் பிரசித்தி பெற்றவை.  இங்கு சாமி தரிசிக்க தமிழகத்தில் மட்டுமில்லாமல் வட மாநிலத்தை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வருகை தருகின்றனர்....

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து: 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை, மின்வாரிய இணையதளம் முடக்கம்
Post

பிஎஸ்என்எல் அலுவலகத்தில் தீ விபத்து: 108 இலவச ஆம்புலன்ஸ் சேவை, மின்வாரிய இணையதளம் முடக்கம்

சென்னை அண்ணா சாலையில் உள்ள தென் மண்டல பிஎஸ்என்எல் அலுவலகத்தில் இன்று(டிச. 20) காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. 8 மாடிகள் கொண்ட இந்த கட்டடத்தில் கீழிருந்து தீ மேலாக ஒவ்வொரு மாடிக்கும் பரவியது. காலை நேரம் என்பதால் அலுவலத்தினுள் ஒரு சில ஊழியர்கள் மட்டுமே இருந்த நிலையில் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 10 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள், தீயைக் கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு இல்லை...

 "என்னது ஏ பெயர் இல்லையா?" வாக்காளர் பெயரை சேர்க்க இதை முதல் செய்யுங்க…
Post

 "என்னது ஏ பெயர் இல்லையா?" வாக்காளர் பெயரை சேர்க்க இதை முதல் செய்யுங்க…

தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி அலுவலரிடமும் அந்தந்த தொகுதி பட்டியல் இருக்கும். எனினும் ஆன்லைன் மூலமாகவும் வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என்பதை அறிய முடியும். https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்தில் உங்களுடைய வாக்காளர் அடையாள எண்ணை உள்ளிட்டு அறியலாம். உங்களுடைய தனிப்பட்ட விவரங்கள், மொபைல் எண் கொண்டும் தெரிந்துகொள்ளலாம். https://elections.tn.gov.in/index.aspx என்ற தமிழக தேர்தல் ஆணைய பக்கத்தில் காணலாம். ‘சிறப்பு தீவிர திருத்தம் 2026′(Special Intensive Revision 2026) என்ற இணைப்பை அழுத்தினால் அதன்பின் வரும்...

"என்னங்க சொல்றீங்க… நீங்க என்ன சொல்றீங்க".. தமிழகத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம் ?: உங்கள் பெயர் இருக்கானு பார்த்துக்கோங்க…
Post

"என்னங்க சொல்றீங்க… நீங்க என்ன சொல்றீங்க".. தமிழகத்தில் 1 கோடி வாக்காளர்கள் நீக்கம் ?: உங்கள் பெயர் இருக்கானு பார்த்துக்கோங்க…

தமிழகத்தில் மொத்தமுள்ள 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 வாக்காளா்களில், 6 கோடியே 41 லட்சம் 13 ஆயிரத்து 772 கணக்கீட்டுப் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டன. அவற்றில் 6 கோடியே 41 லட்சம் 13 ஆயிரத்து 221 கணக்கீட்டுப் படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டன.  இதில், உயிரிழந்தவா்கள், முகவரி மாறியவா்கள், கண்டுபிடிக்க முடியாதவா்கள், இரட்டைப் பதிவு வாக்காளா்கள் ஆகியோரின் உண்மைத்தன்மை மீண்டும் ஆய்வு செய்து நீட்டிக்கப்பட்ட காலத்தில் பட்டியலில் இணைக்கப்பட்டது. இதில் சுமார்...

சென்னையில் கடும் பனிமூட்டம் : விமானம், ரயில் தாமதம் பயணிகள் அவதி 
Post

சென்னையில் கடும் பனிமூட்டம் : விமானம், ரயில் தாமதம் பயணிகள் அவதி 

சென்னையில் நிலவிய பனிப் பொழிவு காரணமாக புறநகர் ரயில்கள் இன்று காலை தாமதமாக இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.  டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிமூட்டம், மோசமான வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், சென்னையில் இருந்து டெல்லி, கொல்கத்தா, வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், தொடர்ந்து பல மணி நேரம் காலதாமதம், விமானங்கள் ரத்து போன்றவைகள் ஏற்படுகின்றன.  மேலும், வட...

ஜனநாயகன் படத்தின் பெயரை மாற்ற விஜய் திடீர் முடிவு ?  டிச 27-ம் தேதி  இசைவெளியிட்டு விழா புது டைட்டில் அறிவிப்பு 
Post

ஜனநாயகன் படத்தின் பெயரை மாற்ற விஜய் திடீர் முடிவு ?  டிச 27-ம் தேதி  இசைவெளியிட்டு விழா புது டைட்டில் அறிவிப்பு 

‘ஜனநாயகன்’ படத்துடைய இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய்யின் கடைசிப்படம் என கூறப்படுவதால், இந்நிகழ்வில் விஜய் பேசப்போவதை கேட்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர். இந்நிலையில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்சிற்காக படக்குழு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. தமிழில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் விஜய் தற்போது த.வெ.க என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் தான்...

திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : தேதிகுறிப்பிடாமல் ஒத்தி வைப்பு 
Post

திருப்பரங்குன்றம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு : தேதிகுறிப்பிடாமல் ஒத்தி வைப்பு 

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில், உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுப்படி தீபம் ஏற்றுவதற்கு கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு கூடுதல் காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஆகியோர் ஆஜராக வேண்டும் என நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து மதுரை மாவட்ட ஆட்சியர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு...

அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா ? அரசு  செயலாளர் சுற்றறிக்கையில் திடீர் பரபரப்பு 
Post

அடுத்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறுமா ? அரசு  செயலாளர் சுற்றறிக்கையில் திடீர் பரபரப்பு 

பொங்கல் பண்டிகையையொட்டி ஆண்டுதோறும் ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை தமிழகம் முழுவதும் தமிழரின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு, எருது விடும் நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, மதுரை மாவட்டம் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் மிகவும் பிரபலமானவை. இந்நிலையில், 2025-ம் ஆண்டில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட போட்டிகளை நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத் துறை செயலாளர் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அந்த...

திருப்பரங்குன்றம் வழக்கு: தூண் இருக்கும் இடம் தர்காவிற்கு சொந்தம் :  நீதிமன்றத்தில் காரசார விவாதம் 
Post

திருப்பரங்குன்றம் வழக்கு: தூண் இருக்கும் இடம் தர்காவிற்கு சொந்தம் :  நீதிமன்றத்தில் காரசார விவாதம் 

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இன்று 3-வது நாளாக மதுரை உயர்நீதிமன்றத்தில் வாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இன்று காலை  இடையீட்டு மனு தாக்கல் செய்ய முயன்ற வழக்கறிஞர் வெளியேற்றம் செய்யப்பட்டார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் இடையீடு மனு தாக்கல் செய்ய அனுமதிக்க முடியாது. வழக்கறிஞரை CISF வீரர்களை வைத்து நீதிபதிகள் வெளியேற்றினர். வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து திருப்பரங்குன்றம் வழக்கில்  3-வது வாதம் இன்று தொடங்கியது. அதில் வக்பு வாரியம் சார்பில்...

கடும் பனிமூட்டம் : விமான சேவை பாதிப்பு பயணிகள் கடும் அவதி
Post

கடும் பனிமூட்டம் : விமான சேவை பாதிப்பு பயணிகள் கடும் அவதி

நாடு முழுவதும் தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவி வருகிறது. தலைநகா் தில்லியிலும் கடுமையான பனிமூட்டம் நிலவி வருவதால், தில்லியில் இருந்து சென்னைக்கு திங்கள்கிழமை இயக்கப்பட்ட விமானங்களும், சென்னையில் இருந்து பிற மாநிலங்களுக்கு புறப்பட்டுச் சென்ற விமானங்களும் பல மணி நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த மோச​மான வானிலை​யால், டெல்​லி​யில் இருந்து சென்னை வரும் விமானங்கள் தாமத​மாக...

× Free India Logo
Welcome! Free India