Category: TamilNadu

Home TamilNadu
18 நாள் பஞ்சாயத்து ஓவர் : வெளிமாநிலங்களுக்கு மீண்டும் துவங்கிய தனியார் ஆம்னி பஸ் சேவை 
Post

18 நாள் பஞ்சாயத்து ஓவர் : வெளிமாநிலங்களுக்கு மீண்டும் துவங்கிய தனியார் ஆம்னி பஸ் சேவை 

நவம்பர்  7ம் தேதி கேரளா சென்ற தமிழக ஆம்னி பஸ்களுக்கு, அம்மாநில போக்குவரத்து துறை அதிகாரிகள், சாலை வரி உட்பட பல்வேறு காரணங்களைக் கூறி, 70 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர், தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு இயக்கப்பட்ட, 230க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ் சேவைகளை நிறுத்தினர். இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என போக்குவரத்து துறை அமைச்சருக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கோரிக்கை...

டிட்வா புயல் : 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் :  அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மீட்புகுழுக்கள் மாவட்டங்களுக்கு விரைவு
Post

டிட்வா புயல் : 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் :  அவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு மீட்புகுழுக்கள் மாவட்டங்களுக்கு விரைவு

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “தமிழகத்தின் தென்மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களின் ஆட்சியர்களிடம் காணொலி மூலம் தொடர்பு கொண்டு பேசிவருகிறோம். நேற்று என்னுடைய தலைமையில் இது தொடர்பாக கூட்டத்தை கூட்டி எச்சரிக்கை விடுத்துள்ளோம். அனைத்து மாவட்டங்களுக்கும் கண்காணிப்பு அதிகாரிகளை அனுப்பி வைத்துள்ளோம்....

ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்
Post

ஜெயலலிதா பெயர் சூட்டப்பட்ட பல்கலைக்கழகத்தை நாங்கள் புறக்கணிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்

சென்னை கலைவாணர் அரங்கில் நடந்த, தமிழ்நாடு ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலைப் பல்கலை பட்டமளிப்பு விழாவில், மாணவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பட்டங்களை வழங்கி கவுரவித்தார். நடிகர் சிவகுமாருக்கு வாழ்நாள் சாதனைக்காக மதிப்புறு முனைவர் பட்டத்தை முதல்வர் ஸ்டாலின் வழங்கி வாழ்த்தினார். நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பட்டமளிப்பு விழாவிற்கு முதல்வராக, பல்கலை வேந்தராக மட்டுமல்ல, கலைஞன் என்ற முறையில் வந்துள்ளேன். நடிகர் சிவகுமார், ஓவியர் சந்துருவுக்கு மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கியதில் பெருமை அடைகிறேன். சிவகுமாருக்கு...

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச 9-ம் தேதி விண்ணப்பிக்கலாம் : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்
Post

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க டிச 9-ம் தேதி விண்ணப்பிக்கலாம் : தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கான கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து, கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க வரும் 4-ந்தேதி வரை காத்திருக்காமல் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடம் அல்லது உதவி மையத்தில் உடனடியாக சமர்ப்பிக்க வேண்டும்.  கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் 9-ந்தேதி அன்று வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும். 2002 மற்றும் 2005 வாக்காளர் பட்டியலில்...

ரயில் படிக்கட்டில் பயணம் செய்தால் கடும் தண்டனை : தெற்கு ரயில்வே எச்சரிக்கை 
Post

ரயில் படிக்கட்டில் பயணம் செய்தால் கடும் தண்டனை : தெற்கு ரயில்வே எச்சரிக்கை 

சென்னை புறநகர் மற்றும் MRTS ரயில்களில் நாள்தோறும் ஆயிரகணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். வேலை நேரம் தவிர்த்து பிற நேரங்களில் இந்த ரயில்கள் பயணிகள் கூட்டம் குறைவாக இருக்கும். கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் சிலர் ரயில்களில் தொங்கியபடி சாகங்களில் ஈடுபடும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.  இதுபோன்ற செயல்களில் ரயிலில் பயணம் மேற்கொள்ளும் மற்ற பயணிகள் கடும் இன்னலுக்கு ஆளாகின்றனர். சில உயிரிழப்பு சம்பவங்கள் அடிக்கடி ஏற்படுகின்றன. இந்த விவகாரத்தில் ரயில்வே...

உதயநிதி பிறந்தநாள் : குறிஞ்சி இல்லத்தில் பிரியாணி, ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டம்
Post

உதயநிதி பிறந்தநாள் : குறிஞ்சி இல்லத்தில் பிரியாணி, ஆடல் பாடலுடன் உற்சாக கொண்டாட்டம்

தமிழ் நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 49-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். உதயநிதி தனது பிறந்தநாளையொட்டி இன்று காலை பெரியார், அண்ணா, கருணாநிதி சமாதிகளுக்கு நேரில் சென்று மரியாதை செலுத்தினார்.இதை தொடர்ந்து சிஐடி காலணியில் உள்ள கனிமொழி இல்லத்திற்கு சென்ற உதயநிதி, அவரிடம் ஆசி பெற்றதோடு, அங்கிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.  இதன் பின்னர் மதியம் நிர்வாகிகள் அடையாறு...

உருவானது டிட்வா புயல் : அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
Post

உருவானது டிட்வா புயல் : அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

டிட்வா புயல் சென்னைக்கு 700 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் 12 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு அதிகாரியாக நியமித்துள்ளார். இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்காள விரிகுடா மற்றும் அதை ஒட்டிய இலங்கை கடற்கரையில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 15 கிலோ மீட்டர்...

சீமானுக்கு எதிரான ஐபிஎஸ் வருண்குமார் வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு 
Post

சீமானுக்கு எதிரான ஐபிஎஸ் வருண்குமார் வழக்கு ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு உத்தரவு 

தமக்கு எதிராக ஆதாரம் இல்லாமல் அவதூறு கருத்துகளைத் தெரிவிக்கச் சீமானுக்குத் தடை விதிக்கக் கோரியும், ரூ.2.10 கோடி மான நஷ்ட ஈடு கோரியும் ஐ.பி.எஸ். அதிகாரி வருண்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு சீமான் சார்பில் தற்போது பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சீமான் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், வருண்குமார் ஐ.பி.எஸ். அதிகாரியை நோக்கிப் பின்வரும் கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. வரதட்சணைக் கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுச்...

செம்பரபாக்கம், புழல் ஏரிகளில் உபரிநீர் திறப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை 
Post

செம்பரபாக்கம், புழல் ஏரிகளில் உபரிநீர் திறப்பு : கரையோர மக்களுக்கு எச்சரிக்கை 

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல கீழடுக்கு சழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய இலங்கை, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இதுவும் படிப்படியாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்கள், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது....

அரசு பள்ளிகளில் 'காக்கா முட்டை' திரைப்படம் ஒளிபரப்பு செய்ய பள்ளிகல்வித்துறை உத்தரவு 
Post

அரசு பள்ளிகளில் 'காக்கா முட்டை' திரைப்படம் ஒளிபரப்பு செய்ய பள்ளிகல்வித்துறை உத்தரவு 

பள்ளிக்கல்வித் துறை சார்பில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-அரசுப் பள்ளிகளில் மாதந்தோறும் 6 முதல் 9-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படம் திரையிடப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பு மாதம் ‘காக்கா முட்டை’ எனும் தமிழ் திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.  2014-ல் இயக்குனர் மணிகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் சென்னையில் குடிசைவாழ் பகுதியில் வசிக்கும் 2 சிறுவர்கள் பற்றிய கதையாகும். இந்த படத்தை ஒளிபரப்பு செய்வதற்கான இணைப்பு...

× Free India Logo
Welcome! Free India