‘ஜனநாயகன்’ படத்துடைய இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்துவதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விஜய்யின் கடைசிப்படம் என கூறப்படுவதால், இந்நிகழ்வில் விஜய் பேசப்போவதை கேட்பதற்கு ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருப்பில் உள்ளனர். இந்நிலையில் ‘ஜனநாயகன்’ ஆடியோ லான்சிற்காக படக்குழு செய்துள்ள ஏற்பாடுகள் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. தமிழில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த நடிகர் விஜய் தற்போது த.வெ.க என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். இவர் தான்...
Category: TamilNadu
சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தாக்கல் செய்த அவதூறு வழக்கு: அமலாக்கத்துறை நிபந்தனையற்ற மன்னிப்பு
டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக, சினிமா தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தொழிலதிபர் விக்ரம் ரவீந்திரன் ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய அமலாக்கத் துறை, ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து ஆவணங்கள் பறிமுதல் செய்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஆகாஷ் பாஸ்கரனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களை திரும்ப ஒப்படைக்க உத்தரவிட்டதுடன், மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கவும் தடை விதித்திருந்தது. உயர் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில், ஆகாஷ் பாஸ்கரனிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள்...
விண்ணை தொடும் முட்டை விலை உயர்வு: இனி ஆம்லெட், ஆஃபாயில் குட்பை
இதனால் பொதுமக்கள் மட்டுமல்லாமல், ஹோட்டல்கள், பேக்கரிகள், சிற்றுண்டி கடைகள் என அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 1,100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் செயல்பட்டு வருவதுடன், சுமார் 7 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சராசரியாக 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகத்தின் பல மாவட்டங்கள் மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு (NECC) மேற்கொண்ட விலை மதிப்பீட்டில், முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்த்தப்பட்டு, தற்போது ரூ.6.15...
மாணவிகள் சரக்கு அடிக்கும் வீடியோ: சமூக வலைதளங்களில் வைரல், பெற்றோர்கள் அதிர்ச்சி
வைரலாகி வரும் வீடியோவில் பள்ளி சீருடையில் இருக்கும் 10-க்கும் மேற்பட்ட மாணவிகள் வகுப்பறைக்குள் வட்டமாக அமர்ந்துள்ளனர். பின்னர் ஒரு மாணவி பிளாஸ்டிக் டம்ளரில் சக மாணவிகளுக்கு சரக்கை ஊற்றி அதில் தண்ணீரை கலந்து கொடுப்பதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் டம்ளரை மாணவிகள் எல்லோரும் எடுத்து சியர்ஸ் செய்துவிட்டு குடிப்பது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. மாணவிகளின் இந்த செயலை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக...
சென்னைவாசிகள் காலிகுடங்களுடன் அலைய வேண்டாம் : அடுத்த ஆண்டு குடிநீர் தட்டுப்பாடு இருக்காது
சென்னைக்கு குடிநீர் வழங்கும் 5 ஏரிகளுக்கும் நீர்வரத்து அதிகரித்து. பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம் மற்றும் புழல் ஏரி ஆகியவை ஏற்கனவே 100 சதவீதம் நிரம்பியது. இந்நிலையில் செம்பரம்பாக்கம் ஏரியும் நேற்று 100 சதவீதம் நிரம்பியது. அதன்படி நேற்று இரவு 8 மணி நிலவரப்படி பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் 35 அடி மொத்த உயரத்தில் 35 அடி உயரத்திற்கும், மொத்த கொள்ளளவான 3231 மில்லியன் கன அடியில் தற்போது தண்ணீர் இருப்பு 3231 மில்லியன் கன...
அரசுபள்ளிக்குள் இரவில் புகுந்து குடிமகன்கள் அலப்பறை: சத்துணவு முட்டையை சைட் டிஷ் ஆக்கி அட்டகாசம்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே ஆலங்குடி மேலமாகாணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் மாலை பள்ளி முடிந்ததும் வழக்கம் போல் வகுப்பறைகளை பூட்டிவிட்டு சென்றனர். இரவில் பள்ளிக்கு வந்த மர்ம நபர்கள், பள்ளியின் பூட்டை உடைத்து, சமையல் கூடத்தின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கு சாகவாசமாக அமர்ந்து மது அருந்தியதோடு, சத்துணவு முட்டைகளை சைட் டிஷ்ஷாக சாப்பிட்டுள்ளனர்.போதை தலைக்கேறியதும் அருகே...
மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க : தமிழக வாக்காளர் பட்டியல் இடம் பெற நாளை கடைசி நாள்
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகள் கடந்த நவம்பர் 4-ந்தேதி தொடங்கின. இம்மாதம் 4-ந்தேதி முடிய இருந்த நிலையில் டிசம்பர் 11-ந்தேதிவரை கால அவகாசத்தை நீட்டித்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதனால் எஸ்.ஐ.ஆர். பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த 1-ந்தேதி நிலவரப்படி, இறந்த வாக்காளர்களின் பெயர்கள் 25 லட்சம் இருப்பதும், 40 லட்சம் பேர் நிரந்தரமாக வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்துவிட்டதும் இந்த பணியின் போது தெரியவந்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர். எஸ்.ஐ.ஆருக்கான...
2026 ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு ரூ. 3 ஆயிரம் வழங்க திமுக அரசு முடிவு ?
திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற பிறகு வந்த முதல் பொங்கலான 2022ம் ஆண்டில் பரிசுத்தொகுப்பு வழங்கப்படவில்லை. அது கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில், 2023 மற்றும் 2024ம் ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூபாய் 1000 வழங்கப்பட்டது. நடப்பாண்டில் பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்கப்பட்ட நிலையில் ரொக்கப்பணம் வழங்கப்படவில்லை. திமுக ஆட்சி அமைந்து 4ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், அடுத்த ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை கருத்தில் கொண்டு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் பொங்கல் பரிசுத் தொகுப்பை...
உத்தரவை அமல்படுத்தாத அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை: நீதிமன்றம் அதிரடி
சென்னை ஜார்ஜ்டவுனில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாலை ஆக்கிரமிப்பை அகற்ற கடந்த ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என தாக்கல் செய்யப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், சி.குமரப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சென்னை பெருநகர மாநாகராட்சி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு பாதுகாப்பு அளிக்கக்கோரி காவல்துறைக்கு ஐந்து முறை கடிதம் எழுதியதாகவும், காவல்துறை பாதுகாப்பு அளிக்காததால் ஆக்கிரமிப்பை அகற்ற முடியவில்லை எனக்கூறினார். காவல்துறை சார்பில் ஆஜரான...
சென்னையில் பன்னாட்டு புத்தகத்திருவிழா: ஜனவரி 16 முதல் 3 நாட்கள் நடக்கிறது
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஸ் பேசுகையில், ”சென்னை கலைவாணர் அரங்கில் பன்னாட்டு புத்தக் காட்சி நடைபெறவுள்ளது. வரும் ஜனவரி, 16,17,18 ஆகிய தேதிகளில் பன்னாட்டு புத்தக் காட்சி நடைபெறும்” என்று தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026 – ஜனவரி 16 முதல் 18 வரை, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ளது என்பதை பெருமகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நான்காவது ஆண்டில் தனித்துவமான B2B தளம்...










