Category: TamilNadu

Home TamilNadu
முரசொலி செல்வம் மறைவு: கண்ணீர் விட்டு அழுத முதல்வர்- நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் 
Post

முரசொலி செல்வம் மறைவு: கண்ணீர் விட்டு அழுத முதல்வர்- நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் 

மறைந்த முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.  முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம்(84)இன்று காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கோபாலபுரத்திற்கு முரசொலி செல்வத்தின் உடல் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வத்தின் உடலைப் பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும்...

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இந்த ஆண்டில் 52 பேர் உயிரிழப்பு
Post

பட்டாசு ஆலை வெடி விபத்தில் இந்த ஆண்டில் 52 பேர் உயிரிழப்பு

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டமன்ற அரங்கத்தில், மாவட்ட நிர்வாகம், சென்னைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவை இணைந்து பட்டாசுத் தொழிற்சாலைகளுக்கான பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் கூட்டத்தினை நடத்தினர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் பட்டாசுத் தொழிற்சாலைகளில் பாதுகாப்பு அம்சம்கள்,தொழிற்சாலை சட்டங்கள், வெடிபொருள் சட்டம், படைக்கல சட்டம் மற்றும் பட்டாசு உற்பத்தி பாதுகாப்பில் நிர்வாகத்தின் பங்கு, தொழிலாளர்களின் பங்கு, சட்ட விரோத பட்டாசு தயாரிப்பை தடுக்கும் வழிகள் ஆகியன குறித்து...

திருமணம் செய்ய மறுத்த மாணவிக்கு நேர்ந்த சோகம்- இளைஞரின் விபரீத முடிவு
Post

திருமணம் செய்ய மறுத்த மாணவிக்கு நேர்ந்த சோகம்- இளைஞரின் விபரீத முடிவு

மதகுபட்டி அருகே திருமணம் செய்ய மறுத்த  கல்லூரி மாணவியைக் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை அருகே மதகுபட்டி மேலத்தெரு பகுதியைச் சேர்ந்தவர் மோனிஷா(24). இவர் சிவகங்கையில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இவரை சிங்கம்புணரி அருகே பிரான்மலையைச் சேர்ந்த ஆகாஷ்(26) என்பவர் ஒருதலையாய் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. தனது காதலியை மோனிஷாவை திருமணம் செய்ய அவரது வீட்டிற்கு சென்றுள்ளார். இதனை...

உதயநிதி குறித்து பேச்சு: பவன் கல்யாண் மீது அடுத்தடுத்து புகார்
Post

உதயநிதி குறித்து பேச்சு: பவன் கல்யாண் மீது அடுத்தடுத்து புகார்

தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை இழிவுப்படுத்திய ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சனாதனத்தை அழிக்க முயன்றால் அழிந்து போவீர்கள் என்று ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் திருப்பதியில் பேசியிருந்தார். மறைமுகமாக தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை விமர்சித்து இருந்தது அரசியல் அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் இரு தரப்பு ஆதரவாளர்களும் கருத்து மோதல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். ...

மீண்டும்..மீண்டுமா?: இவங்க ரகளை தாங்க முடியல- அராஜகம் செய்யும் மாணவர்கள் 
Post

மீண்டும்..மீண்டுமா?: இவங்க ரகளை தாங்க முடியல- அராஜகம் செய்யும் மாணவர்கள் 

சென்னையில் மாநகர பேருந்தின் மேற்கூரை மீது ஏறி கல்லூரி மாணவர்கள் அராஜகம் செய்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை கிண்டி செல்லம்மாள் கல்லூரி அருகே மாநகர பேருந்தில் ஏறி பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் மாநகர பேருந்து மேற்கூரையில் நின்று அராஜகத்தில் ஈடுபட்டனர்.சென்னை தி.நகரிலிருந்து குன்றத்தூர் வரை செல்லக்கூடிய 88கே மாநகர பேருந்தில் இன்று மதியம் திடீரென 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் மேற்கூரை மீது ஏறி அராஜகத்தில் ஈடுபட்டனர்.  போலீசார் சம்பவ இடத்திற்கு...

சென்னையில் கார் ஓட்டுநரிடம் நூதன மோசடி- விபூதி அடித்த போலி டாக்டருக்கு போலீஸ் வலை
Post

சென்னையில் கார் ஓட்டுநரிடம் நூதன மோசடி- விபூதி அடித்த போலி டாக்டருக்கு போலீஸ் வலை

சென்னையில் கார் ஓட்டுநரிடம் கள்ளநோட்டுகளை கொடுத்து நூதன மோசடியில் ஈடுபட்ட போலி டாக்டரை போலீசார் தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம்,  திருக்கழுக்குன்றத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவர் சென்னையில் கால் டாக்ஸி ஓட்டி வருகிறார். இவருக்கு நண்பர் ஒருவரின் மூலம் சவாரி ஒன்று கிடைத்தது. அந்த நபர் தன்னை டாக்டர் என அறிமுகப்படுத்தி கொண்டார். வடபழனி விஜயா மருத்துவமனையில் இருந்து மகாபலிபுரம் செல்ல வேண்டும் என்று புக்கிங் செய்தார். இதையடுத்து கோவிந்தராஜ் அந்த நபரை காரில் ஏற்றினார். கார்...

“கழகத்தின் கொள்கைச் செல்வம் மறைந்தாரே” – முரசொலி செல்வம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்
Post

“கழகத்தின் கொள்கைச் செல்வம் மறைந்தாரே” – முரசொலி செல்வம் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

தமிழகத்தின் முன்னாள் முதல்வரான மு.கருணாநிதியின் மகளான செல்வியின் கணவர் முரசொலி செல்வம் இன்று காலமானார். கோபாலபுரம் இல்லத்தில் அவரது உடல் அஞ்சலிக்காக கொண்டு வரப்படுகிறது. இந்நிலையில் முரசொலி செல்வம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.  அந்த இரங்கலில்…  “முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் அன்பு மருமகனும், அவரது மனசாட்சியான முரசொலி மாறனின் இளவலும், தங்கை செல்வியின் கணவருமான என் அன்புக்குரிய முரசொலி செல்வம் மறைந்தார் என்ற செய்தி இடி போல என் நெஞ்சத்தைத் தாக்கி, வேதனைக்...

மாநிலக் கல்லூரி மாணவர் கொலை – பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் அதிரடி நீக்கம் 
Post

மாநிலக் கல்லூரி மாணவர் கொலை – பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேர் அதிரடி நீக்கம் 

மாநிலக் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் 5 பேரை நீக்கம் செய்து கல்லூரி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னையில் ரூட் தல விவகாரத்தில், மாநிலக் கல்லூரி மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரிகள் அடிக்கடி மோதிக்கொள்வது தொடர்கதையாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த 4ம் தேதி சென்னை சென்ட்ரல் நிலையம் அருகே மாநிலக்கல்லூரி மாணவர்கள் மற்றும் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் மாநிலக்கல்லூரி மாணவர் சுந்தரை பலர் தாக்கியுள்ளனர்....

TNPSC தேர்வு – ஆண்டு அட்டவணை வெளியீடு
Post

TNPSC தேர்வு – ஆண்டு அட்டவணை வெளியீடு

குரூப் -1 தேர்வு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி ஆண்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது.  இதுகுறித்த டிஎன்பிஎஸ்சி தேர்வு ஆண்டு அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில், குரூப் 1 தேர்வு அடுத்த ஆண்டு ஜூன் 15ஆம் தேதி நடைபெறும். தேர்வு குறித்த அறிவிப்பு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும், குரூப் 4 தேர்வு அடுத்தாண்டு ஜூலை 13ஆம் தேதி நடைபெறும் எனவும், ஏப்ரல் 25ஆம் தேதி தேர்வு குறித்த அறிவிப்பு...

போலீஸ் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்த வழக்கு.. இளைஞருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
Post

போலீஸ் வாக்கி டாக்கியை பறித்து தண்ணீரில் எறிந்த வழக்கு.. இளைஞருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு

மது போதையில் போலீசாரின் வாக்கி டாக்கியை பிடிங்கி தண்ணீரில் எறிந்த இளைஞருக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 18ம் தேதி இரவு கடலூர் மாவட்டம் கிளியனூர் அருகே உள்ள மதுக்கடை அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போது அபினேஷ் என்ற நபர் தனது நண்பருடன் அங்கு நின்று கொண்டிருந்தார்.  அப்போது, அபினேஷ் மற்றும் அவரது நண்பரை அங்கிருந்து செல்லுமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். இதனை ஏற்க மறுத்து காவல்துறையுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட...

× Free India Logo
Welcome! Free India