தொடர் விடுமுறை முடிவடைந்த நிலையில், சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயுத பூஜை, விஜயதசமி மற்றும் வார விடுமுறையை ஒட்டி பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் சென்னையிலிருந்து தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தனர். விடுமுறை நிறைவடைந்த நிலையில் நேற்று மாலை முதல ஏராளமானோர் கார், பேருந்து மூலம் சென்னை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் இருந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நிலையில் மதுராந்தகம்...
Category: TamilNadu
குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயில் தசரா திருவிழா.. சிறப்பாக நடந்த மகிசாசூரசம்ஹாரம்
திருச்செந்தூர் அருகே குலசேகரன்பட்டினம் முத்தாராம்மன் கோயிலில் தசரா திருவிழாவின் சிகர நிகழ்வான மகிசாசூரசம்ஹாரம் வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்தியாவில் நடைபெறும் தசரா திருவிழாக்களில் மைசூருக்கு அடுத்தபடியாக மிகவும் பிரசித்தி பெற்றது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தரசா திருவிழா ஆகும். அந்தவகையில், இந்த ஆண்டுக்கான தசரா திருவிழா கடந்த 3 ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி சிகர நிகழ்வு நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அம்மன் சிம்ம வாகனத்தில் மகிசா...
கவரைப்பேட்டை ரயில் விபத்து: வெளியானது முதல் தகவல் அறிக்கை.. விவரங்கள் இதோ!
கவரைப்பேட்டை ரயில் விபத்து சம்பவத்தின் முதல் தகவல் அறிக்கை வெளியானது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதிக்கொண்ட விபத்து சம்பவத்தை அடுத்து, விரைவாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், 36 மணி நேரத்திற்கு பிறகு இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரயில் விபத்து தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர் முனி பிரசாத் பாபு கொடுத்த புகாரின் அடிப்படையில், கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். அதில், பலத்த சட்டத்துடன் விபத்து...
கவரைப்பேட்டையில் ரயில் விபத்து: 36மணி நேரத்திற்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா?
ரயில் விபத்து நிகழ்ந்த கவரைப்பேட்டையில் 36 மணி நேரத்திற்கு பிறகு இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம் கவரைப்பேட்டை அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயில் மீது எக்ஸ்பிரஸ் ரயில் மோதி கோர விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி தடம் புரண்ட பெட்டிகளை ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர். தண்டவாள சீரமைப்பு பணிகள் மற்றும் மின்சார ஒயர் சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று இரவு 9 மணிக்கு சென்னை நோக்கி முதல்...
ஓடும் ரயிலில் சாகசம்; மின் கம்பத்தில் மோதி தூக்கியெறியப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதி….
ரயில் படியில் சாகசம் செய்த கல்லூரி மாணவன் மின் கம்பம் மோதி தூக்கி எறியப்படும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாதவரம் பகுதியை சேர்ந்தவர் இந்த 16 வயது சிறுவன். இவர் சென்னை பாரிஸில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த 9ம் தேதி மதியம் கல்லூரி முடித்துவிட்டு தனது நண்பர்களுடன் மின்சார ரயிலில் சென்றுள்ளார். சுமார் 12: 20 மணியளவில் ராயபுரத்திற்கும் வண்ணாரப்பேட்டைக்கும் இடையே...
’அந்தரத்தில் தொங்கிய பெண்கள்..பாதுகாப்பற்ற கலைஞர் பூங்கா..’ இபிஎஸ் கண்டனம்
புதிதாக திறக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் ஜிப் லைனில் இரண்டு பெண்கள் 20 நிமிடத்திற்கு மேலாக அந்தரத்தில் தொங்கியதற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் அண்மையில் 46 கோடி மதிப்பீட்டில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இசை நீரூற்று, விளையாட்டுத்திடல், ஜிப்லைன் பயணம், கண்ணாடி மாளிகை என அனைத்து வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று ஜிப் லைன் எனப்படும் அந்தரத்தில் செல்லும் ரோப்...
கவரைப்பேட்டையில் விபத்துக்கு பிறகு தொடங்கிய ரயில் சேவை..
கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் சென்னை நோக்கி மின்சார ரயில் இயக்கம். மறு மார்க்கத்தில் விபத்தில் சிக்கிய இஞ்சினை மீட்கும் பணி தீவிரம். கவரைப்பேட்டை ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயில் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. விபத்தில் சிக்கி தடம் புரண்ட பெட்டிகளை நேற்று ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் பணியாற்றி தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தினர். தண்டவாள சீரமைப்பு பணிகள் மற்றும் மின்சார வயர் சீரமைப்பு பணிகள் முடிந்து நேற்று இரவு 9 மணிக்கு சென்னை...
கோயம்பேடு சந்தையில் கழிவுகளை அகற்ற கூடுதல் பணியாளர்கள் நியமனம் – அமைச்சர் சேகர்பாபு
சென்னை கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்தில் சி.எம்.டி.ஏ சார்பில் சீரமைக்கப்பட்டு வரும் மினி கிளினிக் மற்றும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் சீரமைப்புப் பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் தலைவருமான சேகர்பாபு நேரில் ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சேகர் பாபு “சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் செயல்பட்டுக் கொண்டிருக்கிற கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பெருமழை...
முரசொலி செல்வம் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய இரங்கல் மடல்
தமிழக முதல்வர் ஸ்டாலினின் தங்கையின் கணவரும், திமுக நாளேடான முரசொலியின் ஆசிரியருமான முரசொலி செல்வம் நேற்று முன் தினம் காலமானதை அடுத்து அவருக்கு இரங்கல் கடிதம் எழுதியிருக்கிறார் முதல்வர் மு.க. ஸ்டாலின். அக்கடிதத்தில்… என்றும் முரசொலிக்கும் செல்வத்தின் கொள்கைப் பேனா! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் இரங்கல் மடல். யாருக்கு யார் ஆறுதல் சொல்வது என்று தெரியாத நிலையில், அண்ணன் முரசொலி செல்வம் எனும் கழகத்தின் கொள்கைச் செல்வத்தை,...
மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை
கடந்த சில நாட்களாகவே நாளுக்கு நாள் தங்கத்தின் விலை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 200 ரூபாய் உயர்ந்து தற்போது ஒரு சவரன் ஆபரத்தத்தங்கம் 56,960 ரூபாக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆக ஒரு கிராம் தங்கம் 7,120 ரூபாய் என்கிற கணக்கில் விற்பனை செய்யப்படுகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவு சமீப காலத்தில் தங்கத்தின் விலை விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர். தங்கம் என்பதுதான் பலரது சேமிப்பாக...










