Category: TamilNadu

Home TamilNadu
Post

‘விஜய் மீது நடவடிக்கையா? முன்கூட்டியே ஆம்புலன்ஸ் வந்தது எப்படி?’ கரூரில் இபிஎஸ் கேள்வி!

அரசின் பாதுகாப்பு ஏற்பாடு குறித்த கேள்விக்கு, ‘’இந்த அரசும், காவல்துறையும் இதில் முழு கவனம் செலுத்தியிருக்க வேண்டும். மெரினாவில் ஏர் ஷோ நடந்தது அதில் முழுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் சுமார் 5 பேர் இறந்தார்கள், அங்கே அப்படி ஒரு சம்பவம் நடந்தபோது ஒரு அரசியல் கட்சி தலைவர் கூட்டம் நடத்தும்போது, அவர் ஏற்கெனவே 4 மாவட்டங்களில் கூட்டம் நடத்தியபோது, என்ன பிரச்சினை நடந்தது என்பதை ஆய்வு செய்து பாதுகாப்பு வழங்கி இருந்தால் இந்த உயிரிழப்பை தவிர்த்திருக்கலாம்.

Post

‘5 கட்சி மாறினால் தான் பெரிய பதவி..’ செந்தில் பாலாஜி, செல்வப்பெருந்தகையை கலாய்த்த இபிஎஸ்!

திமுகவின் ஆட்சி 52 மாதம் முடிந்துவிட்டது, இத்தொகுதிக்கு பெரிய திட்டம் ஏதாவது வந்திருக்கிறதா..? திமுக தேர்தல் அறிக்கையில் 525 அறிவிப்புகள் வெளியிட்டது. அதில் 98% நிறைவேற்றப்பட்டதாக ஸ்டாலின் பொய் சொல்கிறார், 10% மட்டுமே நிறைவேற்றிவிட்டு பொய் சொல்லும் திமுகவினருக்கு அடுத்தாண்டு தேர்தலில் பதிலடி கொடுக்க வேண்டும்.

Post

தமிழக கல்வி எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியவில்லை..’ மத்திய அரசு மீது ஸ்டாலின் குற்றச்சாட்டு!

எனக்கு முன்னால் பேசிய எல்லோரும், தமிழ்நாடு எந்தளவுக்கு கல்விக்கு முக்கியத்துவம் வழங்குகின்றது, எப்படியெல்லாம் திட்டங்களைக் கொண்டு வந்து, எத்தனை இடர்கள் வந்தாலும், தன்னுடைய மாணவர்களை முன்னேற்றுகிறது என்று பேசினார்கள். இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு முக்கியக் காரணம், எங்களை பாராட்டிக் கொள்வதற்காக அல்ல, இன்றைக்கு நாங்கள் உங்களை கொண்டாடுவதை பார்த்து, அடுத்தடுத்த Batch மாணவர்களும், இன்னும் படிப்பு மீது ஆர்வம் அதிகமாக வேண்டும்! அதுதான் முக்கியம்.

Post

‘வெள்ளைக் காகிதம் காட்டிய டி.ஆர்.பி.ராஜா..’ எவ்வளவு ஏத்தம் என எடப்பாடி பழனிசாமி காட்டம்!

அதிமுக ஆட்சியில் திண்டுக்கல் மாவட்ட மக்கள் கோரிக்கையை ஏற்று, 350 கோடியில் மதிப்பில் அற்புதமான அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து, ஏழை மக்களுக்கு தரமான சிகிச்சை அளிக்கச் செய்தோம். அதிமுக ஆட்சியில் இருந்தபோது இதேபோல தமிழகத்தின் பல மாவட்டங்களில் 11 அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து சாதனை படைத்தோம். 10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 17 மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டுவந்து வரலாற்று சாதனை படைத்தோம்.

Post

‘இரண்டாம் இடத்திற்குத் தான் போட்டி.. திமுக-தவெக., வை பங்கம் செய்த எடப்பாடி பழனிசாமி!

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று நான்காண்டு முடிந்து ஐந்தாண்டு நடக்கிறது, கூடலூருக்கு ஏதாவது பெரிய திட்டம் வந்திருக்கிறதா..? மக்கள் மீது ஆட்சியாளர்களுக்கு அக்கறையில்லை. இதே அதிமுக ஆட்சி இருந்தபோது மக்கள் கோரிக்கை ஏற்று அம்மா அவர்கள் மலை கிராம மக்கள், தேயிலை தொழிலாளர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள், மாணவர்கள் நலனுக்கு அரசு கலை அறிவியல் கல்லூரி கொண்டுவந்தார்.

Post

‘அரசு விடுதியில் மாணவர் நிர்வாணம்.. நியாயப்படுத்துவரா முதல்வர்?’ எடப்பாடி பழனிசாமி கண்டனம்!

“சமூகநீதி விடுதிகள்” என்று பெயர் வைப்பதால் வருவது அல்ல. அந்த விடுதிகளின் நிர்வாகத்திலும், செயல்பாட்டிலும் சமூகநீதி என்பது இருக்க வேண்டும். இதனை பொம்மை முதல்வர், அவர் தலைமையிலான விளம்பர மாடல் அரசும் எப்போது தான் உணரப் போகிறது?

Post

‘அறிவாலயத்தைக் காப்பாற்றிக் கொடுத்ததே ஜெ., தான்..’ கனிமொழிக்கு இபிஎஸ் சரமாரி பதிலடி

‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று குன்னூர், உதகமண்டலம் சட்டமன்றத் தொகுதிகளில் மக்களை சந்திக்கிறார். குன்னூர் பயணத்தின்போது ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் இபிஎஸ்க்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்பட்டது. இதையடுத்து குன்னூர் பேருந்து நிலையம் அருகே மவுன்ட் ரோட்டில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடம் இபிஎஸ் எழுச்சியுரை நிகழ்த்தினார்.

Post

காரைக்குடியில் இந்தியாவின் முதல் செட்டிநாடு நகை அருங்காட்சியகம் “பெட்டகம்” தொடக்கம்

இந்த அருங்காட்சியகத்தில் பாரம்பரிய நகைகள் மட்டுமின்றி, வணிக சமூகமான நகரத்தார்கள் வரலாறு குறித்த விவரங்களும் இடம்பெற்று உள்ளன. வியாபார வாய்ப்புகளைத் தேடி கடல்களைக் கடந்த துணிச்சலான வர்த்தகர்கள் என்று வரலாறு கூறுகிறது. அவர்கள் ஐரோப்பிய சுவைகளை சமையலிலும், ஆர்ட் டெகோ (Art Deco) நுணுக்கத்தை நகைகளிலும் இணைத்து, உலகளாவிய தாக்கங்களை தங்கள் செழுமையான பாரம்பரியத்துடன் கலந்தனர். இந்த அருங்காட்சியகம், நகரத்தார்களின் உலகளாவிய பயணத்தை கொண்டாடும் ஒரு இடமாக விரிகிறது.

Post

‘பச்சைப் பொய் சொல்லும் ஸ்டாலினுக்குத் தக்க தண்டனை வழங்குங்கள்’ இபிஎஸ் ஆவேசம்!

திமுக ஆட்சியின் 52 மாதத்தில் சேந்தமங்கலம் தொகுதிக்கு ஏதாவது நன்மை கிடைத்ததா? அதிமுக ஆட்சியில் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன்களை, ஒரே அதிமுக ஆட்சியில் இரண்டுமுறை தள்ளுபடி செய்தோம். விவசாயிகள் எந்நேரமும் மோட்டாரை பயன்படுத்த ஏதுவாக மும்முனை மின்சாரம் 24 மணிநேரம் கொடுத்தோம். விவசாயிகளுக்காக அதிமுக ஆட்சியில் குடிமராமத்துத் திட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்மூலம் ஏரி, குளங்கள், கண்மாய்கள் தூர்வாரப்பட்டு நீர் தேக்கப்பட்டன, அதிலிருந்து கிடைத்த வண்டல் மண் விவசாயத்துக்குப் பயன்பட்டது. ஒரு பக்கம்...

Post

‘ஆட்சியில் பங்கு.. அதிகப்படியான சீட்..’ திமுக கூட்டணியில் கொடி தூக்கும் காங்.,!

திமுக கூட்டணியின் பிரதான கட்சியான காங்கிரஸ், தன்னுடைய தொகுதி பங்கீடு குறித்து பகிரங்கமாக கருத்து தெரிவித்திருக்கிறது. ஆட்சியில் பங்கு என்பதை நோக்கி, தங்களின் எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை தெளிவுபடுத்தியிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி. சிதம்பரத்தில் செய்தியாளர்களை சந்தித்த, தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், “50 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் ஏதாவது ஒரு இயக்கத்தோடு கூட்டு சேர்ந்து பயணிக்கிறது. சாறை அவர்கள் குடிப்பதும், சக்கையை நாங்கள் பார்ப்பதுமான சூழல் நிலவுகிறது. வரும்...

× Free India Logo
Welcome! Free India