வாசகர்களை மகிழ்விக்கும் விதமாக குமுதம் சுஜாதா நினைவுச் சிறுகதை போட்டி 2025 என்னும் தலைப்பில் மாபெரும் சிறுகதை போட்டியை நடத்த முன்வந்துள்ளது. வாசகர்களும் எழுத்தாளர்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தமிழ் வாசகர்களுக்கு மாபெரும் இலக்கிய விருது படைக்க அழைக்கிறது.
Category: TamilNadu
மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா
மறை நீர் என்றால் என்ன? பதில் சொல்கிறார் கோ.லீலா – மானா பாஸ்கரன் ‘நீரின்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்இன்று அமையாது ஒழுக்கு’ என்ற வள்ளுவன் சொல். கூடவே, ‘மழை பெய்வது பொதுநலம்; குடை பிடிப்பது சுயநலம்’ என்று சொன்ன தந்தை பெரியாரின் வார்த்தைகளும் ஈரம் தெளிக்கின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர், சமூகச் சிந்தனையாளர், எழுத்தாளர், கவிஞர், நீர்ப்பாசனத் துறை பொறியாளர் என்கிற பன்முகத் திறன் படைத்த கோ.லீலா எழுதிய ‘மறைநீர்’ நூலில் இருந்து, இதுவரை நாம் அறிந்திராத...
‘அரசை பெருமைப்படுத்தும் விதமாக பேசும் பக்க வாத்தியங்கள்..’ கரூர் சம்பவத்தை விளாசும் இபிஎஸ்!
“கரூர் சம்பவம் ஒரு விபத்து என்றோ, எதிர்பாராமல் நடந்தது என்றோ, கூற முடியாது. சரியாக திட்டமிட தவறியதாலும், அலுவலர்களின் கவனக்குறையாளும் ஏற்பட்டது” என அப்பகுதி மக்கள் கூறியதாக செய்தி கூறுகிறது.
‘கள்ளக்குறிச்சி போகாமல் கரூருக்கு ஓடோடிச் சென்றது தேர்தல் நாடகம்’ முதல்வரை சாடிய இபிஎஸ்
கச்சத்தீவை மீட்பதற்கு எடப்பாடி பழனிசாமி எதுவும் செய்யவில்லை என்று இன்று முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார். ஸ்டாலின் அவர்களே கச்சத்தீவைப் பற்றி பேச உங்களுக்குத் தகுதியில்லை. கட்சத் தீவு இலங்கை அரசுக்கு தாரைவார்க்கப்பட்டது எப்போது? மத்தியில் காங்கிரஸ் ஆட்சி, மாநிலத்தில் திமுக ஆட்சி. அப்போதுதான் மீனவர்கள் ஓய்வெடுப்பதற்கும் வலைகளை உலரவைப்பதற்கும் பயன்படுத்திய கச்சத்தீவை தாரைவார்த்தது திமுக. இதை மக்களும், மீனவர்களும் மறக்கவில்லை. நாடகம் ஆடாதீர்கள். ஆனால் அம்மா அவர்கள் மீன்வர்களின் நலன் கருதி, அதிமுக சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத்...
அதிமுக பிரசாரத்தில் பறந்த தவெக கொடி.. அரூர் பயணத்தில் எடப்பாடி பழனிசாமி பேச்சுக்கு உற்சாகம்!
அதோடு, விசாரணை ஆணையம் அமைத்த பிறகு அரசு அதிகாரிகள், காவல் துறை அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொடர் பேட்டிகள் கொடுப்பதைக் கண்டித்து சிபிஐக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
‘மக்கள் துடிக்கும் நேரத்திலும் உல்லாச சுற்றுப்பயணம் முக்கியமா?’ உதயநிதிக்கு இபிஎஸ் கேள்வி!
‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதலில் தர்மபுரி நகராட்சி அலுவலகம் அருகில் கூடியிருந்த பெருந்திரளான மக்களிடையே எழுச்சியுரை நிகழ்த்தினார்.
‘தேசியக் கட்டமைப்பில் ஒரு நூற்றாண்டு.. ஆர்.எஸ்.எஸ்., உடன் என் அனுபவங்கள்’ மனம் திறக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி!
‘‘இந்த விஜயதசமித் திருநாளில், தேசியக் கட்டமைப்பை நோக்கிய தனது பயணத்தில் நூறாண்டுகளை நிறைவு செய்கிறது ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம். தனி நபர்களின் ஒழுக்க மேம்பாட்டின் வழியான தேசியக் கட்டமைப்பு இது. தேசிய வாழ்வின் இருளடர்ந்த நாட்களை நம் நாடு கடந்துகொண்டிருந்த காலகட்டத்தில், 1925ஆம் ஆண்டு, இதே நாளில், ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்தைத் தொலைநோக்குக் கொண்ட தீர்க்கதரிசி டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் தொடங்கினார். காலனித்துவ ஆட்சியாளர்களும் அவர்களின் இறையியல் கூட்டாளிகளுமான அயலகக் கிறித்துவ போதகர்களும் இணைந்து,...
ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது.. எக்ஸ் தளத்தில் கடும் கண்டனம் தெரிவித்த எடப்பாடி பழனிசாமி!
கரூர் நெரிசலில் 41 பேர் மரணம் அடைந்தது தொடர்பாக, விஷம கருத்துக்களை சமூக வலைதளத்தில் பதிவு செய்ததாக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களை தமிழக போலீஸ் கைது செய்து வருகிறது. அந்த வரிசையில், பிரபல ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரது கைதுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்து, தன்னுடைய எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அவருடைய பதிவு:
‘புரட்சி தான் ஒரே வழி..’ கரூர் சம்பவம் குறித்து ஆதவ் அர்ஜூனா சர்சை கருத்து.. எதிர்ப்பால் ‘டெலிட்’
தவெக தலைவர் விஜய் கரூரில் நடத்திய பிரசார பேரணியில், நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் போலீஸ் விசாரணையும் நடந்து வருகிறது. இந்நிலையில், கரூர் சம்பவம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் விஷம கருத்துக்கள் பரப்பியதாக, தவெக, பாஜக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
‘முதல்வரே.. போட்டோஷூட்டால் மக்களை மேலும் துன்புறுத்தாதீர்கள்’ எடப்பாடி பழனிசாமி காட்டம்!
‘‘தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர் வெளியிட்டுள்ள போட்டோஷூட் வீடியோவே சாட்சி! நேற்று, நான் கரூர் சென்று உயிரிழந்தோருக்கு அஞ்சலி செலுத்தி, சிகிச்சை பெறுவோருக்கு ஆறுதல் தெரிவித்து செய்தியாளர்களை சந்தித்த போது, எந்த வித அரசியலுக்கும் இடமின்றி, மக்களின் உணர்வாக எனது கருத்துகளைத் தெரிவித்து, அதே சமயம், மக்களின் சந்தேகங்களையும் பதிவு செய்தேன்.


