Category: TamilNadu

Home TamilNadu
சென்னையில் பார் மீது பெட்ரோல் குண்டு  வீச்சு-வாசலில் படுத்து தூங்கியவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரம்
Post

சென்னையில் பார் மீது பெட்ரோல் குண்டு  வீச்சு-வாசலில் படுத்து தூங்கியவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரம்

சென்னையில் மதுபான பார் வாசலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரத்தில் பார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் எஸ்.ஆர். பார் என்ற பெயரில் மதுபோன விடுதி செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இங்கு மது அருந்த வந்த இளைஞர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பார் வாசலிலேயை படுத்து தூங்கியுள்ளார்.சிறிது நேரம் கழித்து வெளியே வந்த பார் ஊழியர் வாசலில் படுத்து தூங்கிய இளைஞரை...

சென்னையில் மதியம் வரை மழை-மக்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்
Post

சென்னையில் மதியம் வரை மழை-மக்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்

சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இன்று (நவ.12) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகர்வதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், தொடர் மழை...

அதிரடியாக ரூ.1080 குறைந்த தங்கம் விலை – மளமளவென விலை குறைந்தால் மக்கள் மகிழ்ச்சி
Post

அதிரடியாக ரூ.1080 குறைந்த தங்கம் விலை – மளமளவென விலை குறைந்தால் மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1080 குறைந்து விற்கப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 12 நாட்களில் ரூ.2,960 குறைந்துள்ளது.  சென்னையில் நேற்று (நவ.11ம் தேதி) சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1080 குறைந்து விற்கப்படுகிறது.சர்வதேச பொருளாதார சூழல்,...

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை- சாலைகள் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
Post

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை- சாலைகள் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

சென்னையில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகர்வதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர்...

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு
Post

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாகு கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி மனித வள மேலாண்மைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.துணை முதலமைச்சரின் துணை செயலாளராக காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்ட ஆர்த்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  தேசிய ஊரக திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது...

மதுரையில் விலையில்லா விருந்தகம் அகற்றம் – நெருக்கடி கொடுப்பதாக தவெகவினர் குற்றச்சாட்டு
Post

மதுரையில் விலையில்லா விருந்தகம் அகற்றம் – நெருக்கடி கொடுப்பதாக தவெகவினர் குற்றச்சாட்டு

மதுரையில் தவெகவினர் சார்பில் சுமார் 150 நாட்களாக செயல்பட்ட விலையில்லா விருந்தகம் மதுரை மாநகராட்சியால் அகற்றப்பட்டதற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரையில் தவெக சார்பாக விலையில்லா விருந்தகம் மதுரை மத்திய தொகுதி நிர்வாகி சிராஜுதீன் தலைமையில் நாள் ஒன்றுக்கு சுமார் 250க்கும் மேற்பட்ட ஏழை,எளிய  மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடங்கி வைத்த விலையில்லா விருந்தகம் மூலம் பல மாவட்டங்களில் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரையில்...

மாணவர்கள் வாயில் பிளாஸ்திரி- அத்துமீறிய தலைமை ஆசிரியர் 
Post

மாணவர்கள் வாயில் பிளாஸ்திரி- அத்துமீறிய தலைமை ஆசிரியர் 

தஞ்சாவூர் அருகே அய்யம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் 5 மாணவர்கள் வாயில் (பிளாஸ்திரி) செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டி புகைப்படம் ஆதாரத்துடன் மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த கனிஷ் வர்மா,  நிதிஷ், கவின், ரோஷன், சஷ்மிதா ஆகியோர் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.இந்த பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா ஒரு மாணவி உட்பட...

விஜய் எங்களுக்காக வந்தாரு..தவெகவில் இணைந்த ஸ்னோலின் தாயார் உருக்கம்
Post

விஜய் எங்களுக்காக வந்தாரு..தவெகவில் இணைந்த ஸ்னோலின் தாயார் உருக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தனது மகள் ஸ்னோலின் உயிரிழந்த போது, விஜய் தங்களுக்குக்காக வந்து நின்றார்.எனவே தவெகவில் இணைகிறேன் என  ஸ்னோலின் தாயார் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அதைத்தொடர்ந்து கட்சியின் கொடி அறிமுகம் செய்து வைத்து பனையூரில் உள்ள அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றினார்.இதனைத்தொடர்ந்து அரசியல் பணிகளில் விஜய் தீவிரம் காட்ட ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தவெகவின் மாநில மாநாடு அக்.27ம் தேதி நடைபெற்றது....

பேருந்தில் நிலையத்தில் காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி – இளைஞரின் செயலால் பரபரப்பு
Post

பேருந்தில் நிலையத்தில் காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி – இளைஞரின் செயலால் பரபரப்பு

சென்னை புரசைவாக்கம் பகுதியில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அயனாவரம் செல்வதற்காக காத்திருந்த மைதிலி என்பவர் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் உருட்டுக்கட்டையோடு வந்து செல்போனை தந்து விட்டு ஓடி விடு என மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பயந்துபோன அந்த பெண் அருகில் இருந்த கூச்சலிட்டதால் அருகில் இருந்த போக்குவரத்து காவலர் வந்து விட்டார். அந்த இளைஞரிடம் உருட்டுக் கட்டையை கைப்பற்றி விட்டு சாலையோரமாக...

எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், இவர்கள் தான் பொறுப்பு -முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
Post

எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், இவர்கள் தான் பொறுப்பு -முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு

எங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் தான் பொறுப்பு ஆவார்கள் என மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மங்கல்ரேவு பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் வந்த அதிமுகவினர் மீது  சிலர் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் அதிமுக மாவட்ட நிர்வாகி தினேஷ்குமார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட எஸ்.பி-யிடம் முன்னாள் அமைச்சர்...

× Free India Logo
Welcome! Free India