ராசிபுரம் அருகே நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் முன்னிலையில் கட்சி நிர்வாகிகள் தகாத வார்த்தைகளில் வசைப்பாடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட கூனாவேலம்பட்டி, குறுக்குபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தார் சாலை அமைப்பதற்காக பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.அரசு நிகழ்ச்சியில் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கலந்து கொண்டார்.அப்போது குறுக்குபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்வின்போது, குறுக்குபுரம் ஊராட்சி மன்ற...
Category: TamilNadu
இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
இந்தி திணிப்புக்கான பரப்புரைக் கருவியாக LIC இணையதளம் மாற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். எல்ஐசி நிறுவனத்தின் இணையதள முகப்பு பக்கம் இன்று காலை முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மேலும் மொழி என்பதை குறிக்கும் பாஷா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.எல்ஐசி நிறுவனத்தின்...
LIC இணையதளத்தில் இந்தி திணிப்பு- இபிஎஸ் கண்டனம்
LIC இணையதளத்தில் இந்தி திணிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். LIC நிறுவனத்தின் இணையதள முகப்பு பக்கம் இன்று காலை முழுமையாக இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது. மேலும் மொழி என்பதை குறிக்கும் பாஷா என்ற ஆப்ஷனை கிளிக் செய்து அதில் ஆங்கிலத்தை தேர்வு செய்தால் மட்டுமே ஆங்கில பக்கத்திற்கு செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தி மொழிக்கு மாற்றப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தற்போது மீண்டும் ஆங்கிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.எல்ஐசி நிறுவனத்தின் இணையதள பக்கம்...
எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் விருது வழங்க தடை -நீதிமன்றம் உத்தரவு
2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி விருதை எம்.எஸ்.சுப்புலட்சுமி பெயரில் பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என தடை விதித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம் அவரது பெயரை பயன்படுத்தாமல் விருது வழங்கலாம் என தெரிவித்துள்ளது. மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ்.சுப்புலக்ஷ்மியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள சிவில் வழக்கில்,கடந்த 2004ல் தனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 2005ஆம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம்.எஸ்....
ஜாபர் சாதிக் ஜாமின் கோரி மனு – அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு
சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனுவிற்கு பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு சென்னை சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக முன்னாள் நிர்வாகியும், திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்து, கடந்த ஜூன் 26ம் தேதி கைது செய்தது. பின்னர் அவரது சகோதரர்...
ஈ.சி.ஆரில் 200 ஏக்கரில் ஆன்மீக சுற்றுலா மையம் -அமைச்சர் கொடுத்த குட் நியூஸ்
ஈ.சி.ஆர் பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் ஆன்மீக சுற்றுலா மையம் அமையவுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு சுற்றுலா விருதுகள் வழங்கும் விழா சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 2024 ஆம் ஆண்டுக்கான சுற்றுலா விருதுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு,...
அறப்போர் இயக்கத்திற்கு எதிராக வழக்கு -சென்னை உயர்நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்
நெடுஞ்சாலைத்துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக கருத்து தெரிவிக்க அறப்போர் இயக்கத்துக்கு தடை கோரி தாக்கல் செய்த வழக்கில் சாட்சியம் அளிப்பதற்காக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாஸ்டர் நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த 2016-21ம் ஆண்டுகளில், அதிமுக ஆட்சியில் தஞ்சாவூர், சிவகங்கை, கோவை மாவட்டங்களின் நெடுஞ்சாலை டெண்டர் ஒதுக்கீட்டில், அரசுக்கு 692 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி முறைகேடு செய்துள்ளதாக நெடுஞ்சாலைத் துறையை கட்டுப்பாட்டில் வைத்திருந்த முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு...
விஜய்யை உற்றுநோக்கும் உளவுத்துறை-தவெக மாநாட்டிற்கு சென்றவர்கள் குறித்து தகவல் சேகரிப்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டிற்கு சென்றவர்கள் யார்- யார்? பட்டியலை சேகரிக்கும் பணியில் உளவுத்துறை போலீசார் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த மாதம் நடந்தது. நடிகரும், அதன் கட்சியின் தலைவருமான விஜய் மாநாட்டில் பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. விஜய் அரசியல் மாநாட்டால் அரசியல் அரங்கில்லபல்வேறு சலசலப்புகளும் ஏற்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக விஜய் அரசியல் நகர்வுகளை அதிரடியாக எடுத்து வைக்க...
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா வீட்டில் சோதனை- போலீஸ் குவிப்பு
என்கவுன்டர் செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜா தொடர்புடைய 14 இடங்களில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் இணைந்து சோதனை நடத்தி வருகின்றனர். நில மோசடி வழக்கு தொடர்பாக என்கவுன்டர் செய்யப்பட்ட சீசிங் ராஜா வீடு உட்பட 14 இடங்களில் பள்ளிகரனை துணை ஆணையர் தலைமையில் போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மொடக் உத்தரவின் பேரில் பள்ளிக்கரணை துணை ஆணையாளர் கார்திகேயன் தலைமையிலான உதவி ஆணையாளர்கள், 14 ஆய்வாளர்கள் உள்ளிட்ட 200க்கும்...
சிக்கன் ரைஸ் தான் காரணமா?-பரிதாபமாக உயிரிழந்த வீராங்கனை
ரயிலில் சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் கூடைப்பந்து வீராங்கனை உயிரிழந்தாரா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராபின் டென்னிஸ். இவரது மகள் எலினா லாரெட் (15). கோவையில் உள்ள பெப்பூல் சிபிஎஸ்சி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். பள்ளிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி மத்திய பிரதேசம் மாநிலம் குவாலியரில் நவம 8ம் தேதி முதல் 15ம் தேதி வரை நடந்தது. இந்த போட்டியில் எலினா லாரெட் கலந்து கொண்டார்....










