Category: TamilNadu

Home TamilNadu
அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை? ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதம்..!
Post

அங்கன்வாடி மையத்தில் 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை? ஆசிரியருடன் பெற்றோர் வாக்குவாதம்..!

சென்னையில் அரசு சேவை இல்லத்தில், சிறுமிக்கு பாலியல் தொல்லை நேர்ந்தது போல,  நாமக்கல் மாவட்டம் பள்ளிப் பாளையம் அருகே 4 வயது குழந்தை அங்கன்வாடியில் வைத்து பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாக புகார் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம் பிள்ளையார் காட்டூர் குமரன் காலனி பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி(34) கூலி தொழிலாளி இவரது மனைவி வனிதா இந்த தம்பதியருக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை என இரண்டு...

pollachi case: தைரியமாக புகார் தெரிவித்த பெண்.. சாகும் வரை ஆயுள் தண்டனை: பொள்ளாச்சி வழக்கில் நடந்தவை என்ன?
Post

pollachi case: தைரியமாக புகார் தெரிவித்த பெண்.. சாகும் வரை ஆயுள் தண்டனை: பொள்ளாச்சி வழக்கில் நடந்தவை என்ன?

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் வெளியே தெரிய வந்தபோது ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியது. பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதன் பிறகு இந்த வழக்கை சி.பி.ஐ கையில் எடுத்தது. இதில் பொள்ளாச்சியை சேர்ந்தசபரிராஜன், திருநாவுக்கரசு, வசந்த குமார், சதீஷ், மணிவண்ணன், ஹேரன்பால், பாபு, அருளானந்தம், அருண்குமார் ஆகிய 9 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீது பாலியல் வன்கொடுமை, அத்துமீறல், ஆள் கடத்தல், அடைத்து வைத்து...

சீமானுக்கு கொலை மிரட்டல்.. 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகார்
Post

சீமானுக்கு கொலை மிரட்டல்.. 4 பேர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போலீஸில் புகார்

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் மற்றும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் இன்று சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதையடுத்து இடும்பவனம் கார்த்திக் செய்தியாளர்களை சந்தித்தார்.  நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சமூகவலைதளங்கள் வாயிலாக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தோஷ் என்பவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.   “கொலை மிரட்டல் விடுக்கும் விதத்தில், ‘சீமானின் தலை விரைவில்...

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்பு
Post

காஞ்சி சங்கர மடத்தின் இளைய மடாதிபதியாக ஸ்ரீ சத்திய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் பொறுப்பேற்பு

காஞ்சிபுரத்தை தலைமை இடமாக கொண்டு சங்கர மடம் இந்து மதத்தை பரப்பி கல்வி பணிகளில் ஈடுபட்டு வருகிறது. காஞ்சி சங்கர மடத்தின் 68-வது மடாதிபதியாக சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகளும், 69-வது மடாதிபதியாக ஜெயந்திர சரஸ்வதி சுவாமிகளும் இருந்து மரணம் அடைந்தனர். 70-வது மடாதிபதியாக விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருந்து வருகிறார். காஞ்சி சங்கர மட பக்தர்களின் வேண்டுதலின்படி 71- வது மடாதிபதியை காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தேர்வு செய்துள்ளார். ஆந்திர மாநிலம் அண்ணாவரம் பகுதியை...

இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்யுங்க.. தவெக கட்சித் தொண்டர்களுக்கு விஜய் அன்பு கட்டளை
Post

இனிமே ஸ்ட்ரிக்ட்டா ஃபாலோ செய்யுங்க.. தவெக கட்சித் தொண்டர்களுக்கு விஜய் அன்பு கட்டளை

TVK VIJAY: தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கோவை, நீலகிரி, திருப்பூர் உட்பட 7 மாவட்டங்களைச் சேர்ந்த தவெக கட்சியின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு கடந்த ஏப்ரல் 26 & 27 ஆகிய இரு நாட்கள் நடைப்பெற்றது. இரண்டு நாட்களும் விஜய் நிகழ்வுக்கு தலைமையேற்று உரையாற்றினார். விஜயை பார்க்க கட்சித் தொண்டர்கள் உட்பட ரசிகர்களும் திரளாக பங்கேற்றனர். சாலைகளில் விஜய் சென்ற காரினை பின் தொடர்ந்து பலரும் தங்களது வாகனங்களில் நிகழ்வு நடக்கும் இடத்தை நோக்கி வந்தனர். அப்போது...

விசாரணையின்றி நேரடியாக சிறை.. மருத்துவக் கழிவு கொட்டுதல் விவகாரம் முற்றுப் பெறுமா?
Post

விசாரணையின்றி நேரடியாக சிறை.. மருத்துவக் கழிவு கொட்டுதல் விவகாரம் முற்றுப் பெறுமா?

கடந்த பிப்ரவரி மாதம் திருநெல்வேலியின் புறநகர் பகுதிகளான முக்கூடல் மற்றும் சுத்தமல்லி பகுதிகளில் கேரளாவிலிருந்து கொண்டு வரப்பட்ட மருத்துவக்கழிவுகள் கொட்டப்பட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதனைத் தொடர்ந்து அண்டை மாநிலங்களில் இருந்து நமது மாநிலத்தில் உயிரி மருத்துவக் கழிவுகள் கொட்டுவது தொடர்பாக புகார்கள் அடிக்கடி பெறப்பட்டு வருகின்றன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், உயிரி மருத்துவக் கழிவுகளை https://cpd.tu.edu.iq/ கொட்டினால் சிறை தண்டனை விதிக்கும் சட்டத்திருத்தத்திற்கான சட்ட முன்வடிவை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார் சட்டத்துறை...

நிலத்தடி நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்: NLC நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற அன்புமணி கோரிக்கை
Post

நிலத்தடி நீரில் 115 மடங்கு அதிக பாதரசம்: NLC நிறுவனத்தை உடனடியாக வெளியேற்ற அன்புமணி கோரிக்கை

”கடலூர் மாவட்டத்தில் என்.எல்.சி நிறுவனத்தின் நிலக்கரி சுரங்கங்கள் மற்றும் மின் நிலையங்கள் அமைந்துள்ள பகுதிகளில் நிலத்தடி நீர் மற்றும் நீர் நிலைகளில் உள்ள தண்ணீரில் இயல்பை விட 115 மடங்கு கூடுதலாக பாதரசம் கலந்திருப்பது  தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு  வாரியம் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. என்.எல்.சி நிறுவனத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளால் அப்பகுதியில் மனிதர்கள் வாழ முடியாத நிலை உருவாகியுள்ள சூழலில், மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை  எடுக்காததது கவலையளிக்கிறது. என்எல்சியின் சுரங்கங்கள் மற்றும்...

நெல்லையப்பர் ரகத்தை மீட்டதில் மகிழ்ச்சி- உழத்தி லட்சுமிதேவி.. சிறப்பு நேர்காணல்
Post

நெல்லையப்பர் ரகத்தை மீட்டதில் மகிழ்ச்சி- உழத்தி லட்சுமிதேவி.. சிறப்பு நேர்காணல்

படித்து பட்டதாரியாகி, நல்லதொரு உயரிய பதவி வகித்த லட்சுமிதேவி, இன்றைக்கு விவசாயத்தில் கோலோச்சி வருகிறார். குறிப்பாக, நம் முன்னோரால் பயிரிடப்பட்டு வந்த மருத்துவகுணம் நிறைந்த பாரம்பரிய நெல்ரகங்களை மீட்டெடுக்கும் பணியைச் செய்துவருகிறார். 65 வயது பெண்ணான இவர், இயற்கை விவசாயத்தில் பல சாதனைகள் படைத்துவருகிறார். அவரது செயல்பாடுகள் குறித்து உழத்தி லட்சுமிதேவியிடம் பேசினோம். ‘‘எனக்கு சொந்த ஊர் திருநெல்வேலி மாவட்டம் அரியநாயகிபுரம். சேரன்மாதேவிக்கும் முக்கூடலுக்கும் நடுவுல எங்க ஊர் இருக்கு. அப்பா வாத்தியார் மட்டுமல்ல; முக்கூடல்ல உள்ள...

சொத்து குவிப்பு வழக்கு- சிக்கலில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
Post

சொத்து குவிப்பு வழக்கு- சிக்கலில் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

கடந்த 2006-2011 ஆம் ஆண்டுகளில் அமைச்சராக பதவி வகித்த எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், வருமானத்துக்கு அதிகமாக 3 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்தது. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவரது மனைவி மற்றும் மகன் மீதான இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவு பிறப்பித்தது.  இந்த உத்தரவை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு...

மேட்டூர் அணை திறப்பு- விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் துரைமுருகன்
Post

மேட்டூர் அணை திறப்பு- விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன அமைச்சர் துரைமுருகன்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நேரமில்லா நேரத்தின் போது கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய அதிமுக உறுப்பினர் காமராஜ், ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முதல் மே மாதத்திற்குள்ளாக தூர்வாரும் பணிகளை முடிக்க வேண்டியது கட்டாயம் எனவும், நடப்பு ஆண்டில் கால்வாய்கள், வடிகால்கள் என 822 தூர்வாரும் பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில் அதற்காக ஒதுக்கப்பட்ட நிதி போதாது எனவும் கூறினார். அதற்கு பதிலளித்து பேசிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த...

× Free India Logo
Welcome! Free India