இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான். இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள். கடந்த ஒரிரு மாதங்களாகவே விண்ணை முட்டும் அளவிற்கு தங்கத்தின் விலை ஏறி வருகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் கிராமுக்கு ரூ.150 வரை தங்கத்தின் விலை ஏறியது. இன்றைய...
Category: TamilNadu
நீதிமன்றத்திற்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்.. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் போட்ட ஆர்டர்
போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனைத்...
சிலிண்டர் விலை ஏற்றம்.. தேர்தல் வந்தால் தான் கரிசனம் வருமா? விஜய் கேள்வி
சிலிண்டர் விலை ஏற்றம் தொடர்பாக தவெக சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தேர்தல் நேரத்தில் மட்டும்தான் மக்கள் மீது கரிசனம் வருமா?என மத்திய அரசையும், கேஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் கொடுப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்த தமிழக அரசையும் கடுமையாக விமர்சித்துள்ளார் தவெக தலைவர் விஜய். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பின் முழு விவரம் பின்வருமாறு- ”ஒன்றிய பாஜக அரசு அறிவித்துள்ள சமையல் எரிவாயு (Gas Cylinder) விலை உயர்வு, சாமானிய மக்கள் மீதான நேரடித் தாக்குதலாகும். மக்களின்...
TN Governor RN Ravi: ஆளுநரின் செயல்பாடுகளை கண்டித்த உச்சநீதிமன்றம்.. தீர்ப்பால் முதல்வர் ஹேப்பி
தமிழ்நாடு அரசுக்கும், ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நிலவி வரும் சூழ்நிலையில், சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்தார் ஆளுநர். அரசியலமைப்பு சட்டவிதிகளை ஆளுநர் மீறுவதாக கூறி உச்சநீதிமன்றத்தை நாடியது தமிழக அரசு. இதுத்தொடர்பான வழக்கில் இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் பர்திவாலா மற்றும் ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பளித்துள்ளது. ஆளுநரின் செயல் சட்டவிரோதம்: ”சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்...
அதிகாரியால் வந்த வினை..தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு எப்போது? விவசாயிகள் கோரிக்கை
தமிழ்நாடு முழுவதும் தர்பூசணி குறித்து பல்வேறு கருத்துகள் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்டுள்ளது என்னமோ பெரும்பாலும் தர்பூசணி விளைவித்த விவசாயிகள் தான். இந்நிலையில் தர்பூசணி விளைவித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டுமென தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் ஈசன் முருகசாமி கோரிக்கை விடுத்துள்ளார். இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு- ”தமிழ்நாடு அரசின் உணவு துறையின் உயர் அதிகாரி சதீஸ் என்பவர் தர்பூசணி பழங்களில் ஊசி போட்டு கலப்படம் செய்கிறார்கள் என்று தெரிவித்த...
தரமற்ற பட்டுப்புழு.. தீயிட்டு எரிக்கும் விவசாயிகள்: பல கோடி ரூபாய் நஷ்டம்!
திண்டுக்கல் மாவட்டம் பழனியை சுற்றிலும் ஏராளமான விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக பழனி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, கணக்கன்பட்டி, தொப்பம்பட்டி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பட்டுப்புழு வளர்ப்பில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கோவை, உடுமலை திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மத்திய மாநில அரசுகளுக்கு சொந்தமான இளம்புழு வளர்ப்பு மையத்தில் இருந்து, விஞ்ஞானிகளால் முட்டையின் தரம் ஆய்வு செய்யப்பட்டு, புழுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு புழுக்களாக வழங்கப்படுகிறது. 100 எண்ணிக்கை கொண்ட புழுக்கள், விவசாயிகளிடத்தில்...
காசு தரலனா ஜெயில் தான்.. ஆடிட்டரை மிரட்டி 1 கோடி சுருட்டிய காவல் ஆய்வாளர் கைது!
தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தை சேர்ந்த ஆடிட்டர் ரவிச்சந்திரன் என்பவர் அவருக்கு சொந்தமான குலசேகரநல்லூர் கிராமத்தில் உள்ள சுமார் 80 சென்ட் நிலத்தை அவருடைய மருமகன் வெங்கடேஷ் என்பவருக்கு 2020-ம் வருடம் விற்பனை செய்துள்ளார். இந்நிலையில் அந்த நிலத்தினை நீர்வளத்துறை (WRD), கொள்ளிடம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணிக்காக கையகப்படுத்தி அதற்கு இழப்பீடாக ரூ.54,00,000/- வழங்கியுள்ளது. சட்ட விரோதமாக தேக்கு மரத்தை வெட்டிய ஆடிட்டர்: பின்னர் ரவிச்சந்திரன், நீர்வளத்துறையால் கையகப்படுத்தப்பட்ட இடத்தில் இருந்த சுமார் 30 தேக்கு மரங்களை...
மோசடி வழக்கு: நிதி நிறுவன இயக்குநர் சொத்து விவரங்கள் தாக்கல்
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கும் மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குநர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர்...
வேங்கை வயல்: ஆதாரம் இல்லாமல் கைது பண்ணுவோமா? சிபிசிஐடி விளக்கம்
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின மக்கள் வசிக்கக்கூடிய பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவு கலந்த விவகாரம் கடந்த 2022-ஆம் ஆண்டு டிசம்பர் 26-ஆம் தேதி வெளியே வந்தது. இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் இரண்டு வருடங்களாக விசாரணை நடத்திய நிலையில், கடந்த ஜனவரி 20-ஆம் தேதி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்நிலையில் வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் குற்றவாளிகளாக கூறப்பட்டுள்ள வேங்கை வயலைச் சேர்ந்த...
சிறிய ரக செயற்கைக்கோள்கள் தயாரிப்பில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் – மயில்சாமி அண்ணாதுரை பேச்சு
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ஆண்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் இஸ்ரோ இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை கலந்து கொண்டு மாணவர்களிடம் சிறப்பு உரையாற்றிய அவர், தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குலசேகரப்பட்டினம் ஏவுதளம் சற்று வித்தியாசமாக இருக்கும் என்று எதிர்ப்பார்க்கிறேன். வரக்கூடிய நாட்களில் தனியாரின் பங்களிப்போடு சிறிய ரக சேர்க்கை கோள்கள் விமான போக்குவரத்தை போல் தினமும் அனுப்புவதற்கு எதிர்பார்க்கிறேன். சாலை வசதி, மின்சார வசதி, தகவல் பரிமாற்ற...










