தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? டிக்கெட் புக்கிங்கில் முந்திக்கோங்க!

Home TamilNadu தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? டிக்கெட் புக்கிங்கில் முந்திக்கோங்க!
தீபாவளிக்கு ஊருக்கு போறீங்களா? டிக்கெட் புக்கிங்கில் முந்திக்கோங்க!
Spread the love

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், சொந்த ஊர்களுக்குத் திரும்பும் பயணிகளுக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு வருகிற 6-ஆம் தேதி காலை 8 மணிக்குத் தொடங்க உள்ளது.

ரயில்களில் 60 நாட்களுக்கு முன்பாக டிக்கெட் முன்பதிவு செய்யும் நடைமுறையின்படி, நவம்பர் 5-ஆம் தேதி சொந்த ஊர்களுக்குச் செல்ல விரும்புவோர் வருகிற 6-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்.

மேலும், தீபாவளி பண்டிகை முடிந்து நகரங்களுக்குத் திரும்ப விரும்புவோர் பெரும்பாலும் வருகிற 7 மற்றும் 8-ஆம் தேதிகளில் அதிகளவில் முன்பதிவு செய்வார்கள். எனவே, தீபாவளி பயணத்துக்கான முன்பதிவில் பயணிகள் முன்கூட்டியே தயாராக இருக்குமாறு ரயில்வே அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

அதேபோல், தீபாவளி முடிந்து சொந்த ஊர்களில் இருந்து சென்னை, கோவை, பெங்களூரு போன்ற பெருநகரங்களுக்குத் திரும்ப விரும்புவோர் வருகிற 9-ஆம் தேதி முதல் முன்பதிவு செய்ய வேண்டும். தீபாவளி முடிந்த மறுநாளே பணிக்குச் செல்ல வேண்டியவர்கள், தீபாவளி தினமான நவம்பர் 8-ஆம் தேதியே பயணிக்க வேண்டியிருக்கும். அதற்கான முன்பதிவை வருகிற 9-ஆம் தேதி மேற்கொள்ள வேண்டும்.

தீபாவளி பண்டிகையை ஒட்டி கடந்த இரண்டு ஆண்டுகளாக, மறுநாள் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. அதன்படி, நவம்பர் 9-ஆம் தேதி (திங்கள்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டால், அன்று மாலையில் பலர் பெருநகரங்களுக்குப் புறப்பட்டுச் செல்வார்கள். அதன்படி, நவம்பர் 9-ஆம் தேதி சொந்த ஊர்களில் இருந்து புறப்பட்டுச் செல்ல விரும்புவோர் வருகிற 10-ஆம் தேதி முன்பதிவு செய்ய வேண்டும்.

தீபாவளியை முன்னிட்டு பொதுமக்கள் அதிகளவில் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்வார்கள் என்பதால், முக்கிய ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே இருக்கைகள் நிரம்ப வாய்ப்புள்ளது. எனவே, பயணிகள் முன்கூட்டியே திட்டமிட்டு டிக்கெட் முன்பதிவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India