கனமழை காரணமாக கால்டாக்சி உள்ளிட்ட வாகனங்கள் கிடைக்காமல் விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் மாநகர பேருந்து மூலம் அழைத்து செல்லப்பட்டனர். வடகிழக்கு பருவழை தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ஓலா, உபர், ரேபிடோ உள்ளிட்ட தனியார் வாடகை வாகனங்கள் கிடைக்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதையடுத்து விமான நிலையம் வழியாக செல்லும் பேருந்துகள் விமானங்களின் வருகை நேரத்திற்கு ஏற்றவாறு விமான நிலையத்திற்கு உள்ளே...
Category: TamilNadu
இன்றும், நாளையும் இலவச உணவு… முதலமைச்சர் கொடுத்த அசத்தல் அறிவிப்பு!
அம்மா உணவகங்களில் இன்றும், நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார் . சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் பெரும்பாலான இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவகங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் உணவுக்காக அலையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்நிலையில், அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும்...
கொள்ளளவை எட்டிய குதிரையாறு அணை… அபாய எச்சரிக்கை விடுத்த பொதுப்பணித்துறை!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கிய நிலையில், தொடர் மலை காரணமாக திண்டுக்கல் மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டி உள்ள பழனி அருகே உள்ள வரதமா நதி, பாலாறு பொருந்தலாறு அணை , குதிரையாறு அணைகள் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனிடையே, நேற்று முன்தினம் 66 அடி கொள்ளளவு கொண்ட வரதமா நதி அணை நிரம்பியது. இந்நிலையில் பாலாறு அணைக்கும், குதிரையாறு அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. குதிரையாறு அணை தனது முழு கொள்ளளவை எட்டி உள்ளதால்...
விடுமுறைக் கொடுக்காத கலெக்டர்… அவதிக்குள்ளான மாணவர்கள்.. கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இன்று காலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுமா என பெற்றோர் எதிர்பார்த்தனர். ஆனால் மாவட்ட கலெக்டர் மாவட்ட கல்வித்துறையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கவில்லை . இதனால் பள்ளி மாணவ மாணவிகள் நனைந்தபடி இன்று பள்ளிகளுக்கு சென்றனர். இந்த நிலையில் இன்று மதியம் 2 மணி 7 நிமிட அளவில் மாவட்ட கலெக்டர் கூறியதாக மக்கள் தொடர் அலுவலர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் கனமழை பெய்து வருவதால்...
சினிமா ஃபைனான்சியர் வழக்கு – நடிகர் தனுஷின் தந்தைக்கு சம்மன் அனுப்ப உத்தரவு
ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி சினிமா ஃபைனான்சியர் ககன் போத்ரா தொடர்ந்த வழக்கில், நடிகர் தனுஷின் தந்தையும், இயக்குநருமான கஸ்தூரி ராஜா நேரில் ஆஜராகும்படி, சம்மன் அனுப்ப சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குநர் கஸ்தூரி ராஜா தன்னிடம் 65 லட்சம் பெற்று மோசடி செய்ததாக, சினிமா ஃபைனான்சியர் முகுந்த் சந்த் போத்ரா வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த கீழமை நீதிமன்றம், கஸ்தூரி ராஜாவை வழக்கில் இருந்து விடுவித்தது.இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட...
இதையெல்லாம் கொச்சைப்படுத்துவீங்களா? – இபிஎஸ்க்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம்
தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை கொச்சைப்படுத்துவதா? என இபிஎஸ்க்கு அமைச்சர் கே.என்.நேரு கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அமைச்சர் கே.என்.நேரு வெளியிட்டுள்ள அறிக்கையில், “மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார் முதலமைச்சர் என வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என உளறி அறிக்கை விட்டிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. உயிரிழப்புகளைத் தடுக்க வேண்டும் என முதலமைச்சர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். இதெல்லாம் செய்தி ஊடகங்களில் வெளியானது,...
வந்தே பாரத் ரயிலில் உணவு தரம் இல்லை- நடிகர் பார்த்திபன் குற்றச்சாட்டு
வந்தே பாரத் ரயிலில் உணவு தரமாக இல்லை படுமோசம் என நடிகர் பார்த்திபன் குற்றம்சாட்டியுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2022ம் ஆண்டு தனது சொந்த மாநிலமான குஜராத் தலைநகர் காந்தி நகரில் இருந்து மகாராஷ்டிராவின் மும்பையை இணைக்கும் வகையில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவை தொடங்கி வைத்தார்.இதைத்தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. இதேபோல் தமிழகத்தில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகிறது. வந்தே பாரத் ரயிலில் சைவம்...
கனமழை எச்சரிக்கை: 3 நாட்களுக்கு கூடுதலாக மெட்ரோ ரயில்கள் இயக்கம்
சென்னையில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் தரைவழிபோக்குவரத்தை சமாளிக்க 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் தொடர் கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வெளி மாவட்டங்களில் இருந்து நீர் அகற்றும் பம்புகள் மற்றும் மரம் வெட்டும் கருவிகள் உள்ளிட்டவை சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.மேலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்துள்ள தீயணைப்புப்படை வீரர்கள், ரப்பர் படகுகள் உள்ளிட்ட பொருட்களை தயார் நிலையில் வைத்துள்ளனர்....
சென்னை காவல் ஆணையருக்கு பறந்த உத்தரவு- மனித உரிமை ஆணையம் அதிரடி
சென்னை காவல் ஆணையர் அருண் வருகிற 21ஆம் தேதி நேரில் ஆஜராக மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகு சென்னை மாநகர காவல் ஆணையராக பொறுப்பேற்ற அருண், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, ரவுடிகளுக்கு புரியும் மொழியில் இனி பேசுவோம் என கூறியது, காவல்துறை மரணங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் அமைப்புகள் இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து மூன்று ரவுடிகள் அடுத்தடுத்து என்கவுன்டர் செய்யப்பட்டனர்....
கனமழை எச்சரிக்கை: மீட்பு படை வீரர்கள் சென்னைக்கு வரவழைப்பு
தாழ்வான பகுதிகளை கண்டறிந்து மீட்பு படகுகளை முன்கூட்டியே நிறுத்தி வைத்துள்ளதாக தீயணைப்பு துறை வடசென்னை மாவட்ட அதிகாரி லோகநாதன் தெரிவித்துள்ளார். பருவ மழையை எதிர்கொள்வதற்காக தமிழக அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதேபோல வெள்ள பாதிப்புகள் இருந்தால் பொதுமக்களை மீட்கவும், பொது மக்களுக்கு பல்வேறு உதவிகளை செய்யவும் தமிழக தீயணைப்பு துறை தயார் நிலையில் இருக்கிறது. அதற்காக சென்னைக்கு வெளி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டு உள்ளனர். கனமழை எச்சரிக்கையை ஒட்டி...










