Category: TamilNadu

Home TamilNadu
ஆய்வுக்கு சென்ற இடத்தில் முதலமைச்சர் போட்ட உத்தரவு – கலங்கி நிற்பவர்களுக்கு கைகொடுத்த அரசு
Post

ஆய்வுக்கு சென்ற இடத்தில் முதலமைச்சர் போட்ட உத்தரவு – கலங்கி நிற்பவர்களுக்கு கைகொடுத்த அரசு

பட்டாசு விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான படிப்பு செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 77.12 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 6 தளங்கள் கொண்ட புதிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் இருக்கையில் ஆட்சியர் ஜெயசீலனை அமர வைத்தும் கூட்ட அரங்கில் அமர்ந்து முதல் கூட்டத்தையும் தொடங்கி வைத்தார்.பின்னர்...

“எதற்காக இந்த திடீர் மேக்கப், யாரை ஏமாற்ற  முயல்கிறீர்கள்”- அரசு அதிகாரிகளை டோஸ் விட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்
Post

“எதற்காக இந்த திடீர் மேக்கப், யாரை ஏமாற்ற  முயல்கிறீர்கள்”- அரசு அதிகாரிகளை டோஸ் விட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்

நெல்லையில் ஆய்வுக்கு சென்ற இடத்தில் அதிகாரிகள் சொன்ன பதிலை கேட்டு சென்னை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், உங்கள் பதிலை கேட்டு கேட்டு புளித்துப் போய்விட்டதாக டோஸ் விட்டனர். தென் தமிழகத்தின் ஜீவாதார நதியான தாமிரபரணி நதியில் அதிக அளவிலான கழிவுகள் கலப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து பலமுறை அரசுக்கு கேள்வி எழுப்பியும் உரிய பதில் கிடைக்காததை எடுத்து கடந்த வாரம் நாங்கள்...

சேலத்தில் மக்கள் கொடுத்த மனுக்களை குப்பையில் வீசிய அதிகாரிகள் – அதிரடி காட்டிய கலெக்டர்
Post

சேலத்தில் மக்கள் கொடுத்த மனுக்களை குப்பையில் வீசிய அதிகாரிகள் – அதிரடி காட்டிய கலெக்டர்

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் வழங்கப்பட்ட மனுக்கள் குப்பையில் வீசப்பட்டது தொடர்பாக அலட்சியமாக செயல்பட்ட அதிகாரி மீது கலெக்டர் அதிரடி  நடவடிக்கை எடுத்துள்ளார். சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே அரசநத்தம் கிராமத்தை சேர்ந்த காந்திமதி, சடையம்மாள், மஞ்சினி பகுதியை சேர்ந்த  மருதாம்பாள், தென்னங்குடிபாளையத்தை சேர்ந்த, சுந்தரம் உள்ளிட்டோர் கடந்த 4ம் தேதி சேலம் மாவட்ட ஆட்சியர்  அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாமில் இலவச வீட்டுமனை பட்டா, கலைஞர் கனவு இல்லம், சாக்கடை அமைத்தல்...

சென்னையில் பிரபல நடிகை வீட்டில் கொள்ளை- போலீஸ் விசாரணை
Post

சென்னையில் பிரபல நடிகை வீட்டில் கொள்ளை- போலீஸ் விசாரணை

சென்னையில் சினிமா துணை நடிகையின் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் ரசாக்கார்டன் பகுதியை சேர்ந்தவர் தீபா பாஸ்கர். முன்னனி நட்சத்திரங்கள் பலரோடு இணைந்து துணை நடிகையாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று அவரது பிறந்தநாள் என்பதால் குடும்பத்தினரோடு வெளியே சென்று விட்டு இரவு வீடு திரும்பியுள்ளார்.அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த பொருட்கள் எல்லாம் சிதறி கிடந்துள்ளது. பீரோவும் உடைக்கப்பட்டு,  அதில் இருந்த பொருட்களும்...

தமிழ் சினிமாவிலும் போதைப் பொருள் புழக்கம்? – காட்டிக் கொடுத்த துணை நடிகை  
Post

தமிழ் சினிமாவிலும் போதைப் பொருள் புழக்கம்? – காட்டிக் கொடுத்த துணை நடிகை  

சினிமா நட்சத்திரங்கள் பங்குக்கொண்ட பார்ட்டி மற்றும் பப்பிற்கு செல்லும் போது போதை பொருள் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதாக கைது செய்யப்பட்ட துணை நடிகை மீனா தெரிவித்துள்ளார். சென்னையில் அண்ணாசாலையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த துணை நடிகை மீனா போலீசாரால் நேற்று கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நடிகை மீனாவுக்கு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர்.மருத்துவப்பரிசோதனை முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த அழைத்துச் சென்றனர். இந்த நிலையில் நேற்று கைது செய்யப்பட்ட...

Delhi Ganesh: பட்டின பிரவேசம் முதல் இந்தியன் 2 வரை…நடிகர் டெல்லி கணேஷின் திரைப்பயணம்
Post

Delhi Ganesh: பட்டின பிரவேசம் முதல் இந்தியன் 2 வரை…நடிகர் டெல்லி கணேஷின் திரைப்பயணம்

நடிகர் டெல்லி கணேஷ் இன்று காலை காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு திரைப்பிரபலங்கள் இரங்கலும், நேரில் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.  தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) வயது மூப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில்  காலமானார். அவரது மறைவுக்கு  திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். நடிகர் டெல்லி கணேஷ் நடிகர்கள் கமல், ரஜினிகாந்த், சூர்யா, விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் பல படங்களில்...

திடீரென வழிமறித்த போலீஸ்- பிரேக் போட்டத்தால் கார் மோதி விபத்து
Post

திடீரென வழிமறித்த போலீஸ்- பிரேக் போட்டத்தால் கார் மோதி விபத்து

போக்குவரத்து போலீசார் சாலையில் செல்லும் காரை திடீரென வழிமறித்ததால் பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து போலீசார் பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றச்செயல்களை குறைக்கும் பொருட்டும், வாகன விபத்துக்களை தடுக்கும் நோக்கிலும் வாகன தணிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இருப்பினும் சில நேரங்களில் மக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், வாகன...

15 வயது சிறுமி கொலை வழக்கு – தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை
Post

15 வயது சிறுமி கொலை வழக்கு – தாய் மற்றும் உறவினர்களிடம் விசாரணை

அமைந்த கரையில் வீட்டில் பணிபுரிந்த 15 வயது சிறுமியை வீட்டின் உரிமையாளர் முகமது நிஷாத் மற்றும் அவரது உறவினர்கள் இணைந்து அடித்து கொலை செய்தனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக அமைந்தகரை போலீசார் முகமது நிஷாத் அவரது மனைவி நாசியா நண்பர்கள் ஆன லோகேஷ் மற்றும் அவரது மனைவி ஜெயசக்தி, வேலைக்கார பெண் மகேஸ்வரி முகமது நிஷாத்தின் சகோதரி சீமா பேகம் ஆகிய ஆறு பேரை போலீசார் கைது செய்தனர். சிறுமியை கடந்த மூன்று மாதங்களாக சூடு...

போலீசாரிடம் ஆபாச பேச்சு- மெரினா ஜோடியின் ஜாமின் மனு தள்ளுபடி
Post

போலீசாரிடம் ஆபாச பேச்சு- மெரினா ஜோடியின் ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை மெரினாவில் காவல்துறையிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட சந்திர மோகன் மற்றும் தனலட்சுமி ஆகியோரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மெரினா லூப் சாலையில் நின்று கொண்டிருந்த நான்கு சக்கர வாகனத்தை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் எடுக்குமாறு கூறியபோது, சந்திர மோகனும் அவரது தோழி தனலெட்சுமியும் காவல் துறையினரை ஆபாசமாக திட்டினர். இதையடுத்து, மயிலாப்பூர் காவல்துறையினர் அளித்த புகாரின் அடிப்படையில், சந்திரமோகன் மற்றும் அவரது தோழி...

விஜய் நாளை அவசர ஆலோசனை -சுற்றுப்பயணம் குறித்து முடிவு?
Post

விஜய் நாளை அவசர ஆலோசனை -சுற்றுப்பயணம் குறித்து முடிவு?

தவெக தலைவர் விஜய் கட்சி நிர்வாகிகளுடன் நாளை அவசர ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் அக்.27ம் தேதி மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான தவெக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் விஜய்யின் பேச்சு தமிழக அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மாநாட்டை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள விஜய் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  மேலும்...

× Free India Logo
Welcome! Free India