நடிகை கஸ்தூரி புழல் சிறையில் தூக்கமின்றி தவித்து வருவதால் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னையில் சமீபத்தில் நடந்த போராட்டத்தில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், தெலுங்கு பேசும் மக்கள் குறித்து இழிவாக பேசினார். இதற்கு தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடிகை கஸ்தூரிக்கு எதிராக கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது. மேலும் சென்னை காவல் ஆணையர் அலுவலகம், மதுரை ஆகிய...
Category: TamilNadu
“பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி…”- விஜய் வெளியிட்ட பரபரப்பு தகவல்
2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்பதே தவெகவின் குறிக்கோள் என விஜய் அதிரடியாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் கடந்த பிப்ரவரியில் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். அதைத்தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காக கொண்டு கட்சி கொடி அறிமுகம், நிர்வாகிகள் தேர்வு, தவெக பிரமாண்ட மாநாடு என தவெகவின் அரசியல் நகர்வுகள் அடுத்த கட்டங்களை நோக்கி நகர்ந்து வருகிறது.கடந்த அக்.27ம் தேதி விக்கிரவாண்டி வி.சாலையில் நடந்த தவெக பிரமாண்ட மாநாட்டில்...
சென்னையில் மீண்டும் தலைதூக்கும் மாஞ்சா நூல் கலாச்சாரம் – அடுத்தடுத்த சம்பவங்களால் குழந்தைக்கு நேர்ந்த சோகம்
சென்னை வியாசர்பாடி மேம்பாலத்தில் இரண்டரை வயது குழந்தையின் கழுத்தை மாஞ்சா நூல் அறுத்த சம்பவத்தில் கல்லூரி மாணவன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச்சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி கவுசல்யா. இவர்களுக்கு தர்சன் என்ற 5 வயது மகனும், இரண்டரை வயதில் புகழ் வேலன் என்ற ஆண் குழந்தை இருக்கிறது. பாலமுருகன் மெக்கானிக் வேலை செய்து வருகிறார். நேற்று பாலமுருகன்- கவுசல்யா தனது 2 குழந்தைகளையும் பைக்கில் அழைத்து கொண்டு...
ஆராய்ச்சி மாணவர்கள் புகார் விவகாரம்- பேராசியர்களுக்கு எச்சரிக்கை விடுத்த உயர்கல்வித்துறை
ஆய்வு மாணவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும் என பேராசிரியர்களுக்கு உயர்கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த மாதம் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் ஆராய்ச்சி மாணவர்கள் ஒருவர் மேடையில் ஆளுநரிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்திருந்தார். அதில் தனக்கு ஆய்வு நெறியாளராக உள்ள பேராசிரியர் துன்புறுத்துவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது.இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ஆராய்ச்சி மாணவர் பிரகாஷ், பாரதியார் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி மாணவர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் உள்ளது. பல இடங்களில் இது தொடர்பால முறையிட்டும்...
"தீரன்" பட பாணியில் சிக்கி கொண்ட சென்னை போலீஸ்-போராடி நகைத் திருடன் கைது
“தீரன்” பட பாணியில் இந்திய எல்லை கிராமத்தில் சிக்கி கொண்ட சென்னை தனிப்படை போலீஸ் போராடி நகைத் திருடனை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் அருண்குமார். சென்னை கீழ்ப்பாக்கம் ராஜரத்தினம் தெருவில் குடும்பத்துடன் தங்கி 15 ஆண்டுகளுக்கு மேலாக தங்க நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார்.இவரது நகை பட்டறையில் ராஜஸ்தான், மேற்கு வங்காளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 25 பேர் நகை செய்யும் வேலை செய்து வருகின்றனர்....
எலி மருந்தால் பறிபோன 2 குழந்தைகள் உயிர்- அதிரடி காட்டும் அதிகாரிகள்
எலி மருந்தால் 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணமான நிறுவனத்தில் 3 நாட்களாக வேளாண்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். சென்னையை அடுத்த குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கிரிதரன். குன்றத்தூரில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார்.இவரது மனைவி பவித்ரா இவர்களுக்கு விசாலினி, என்ற மகளும், சாய் சுதர்சன் என ஒரு வயதில் மகனும் உள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த இவரது வீட்டில் எலிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் தனியார் நிறுவனத்தை தொடர்பு...
“கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும்”- விக்னேஷ் சிவனுக்கு எதிராக கொந்தளித்த தயாரிப்பாளர்
என்னை மன உளைச்சல் ஆக்கியதற்காய் நிச்சயம் கடவுள் மன்றத்தில் பதில் சொல்ல நேரிடும் என இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு எதிராக தயாரிப்பாளர் எஸ்.எஸ்.குமரன் கொந்தளித்துள்ளார். Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்பட விவகாரத்தில் தனுஷுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை நடிகை நயன்தாரா முன் வைத்துள்ள நிலையில், அவரது கணவர் விக்னேஷ் சிவனும் தனுஷ் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.இந்த நிலையில் நடிகை நயன்தாராவின் பதிவை இன்ஸ்டாகிராமில் பல்வேறு நடிகைகள் லைக் செய்து தங்கள் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.இந்த...
இது ரொம்ப புதுசா இருக்கே!.. டீ விலை உயர்ந்ததால் போஸ்டர் ஒட்டிய புதுகை வாசிகள்
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம், ஆலங்குடி உள்ளிட்ட பல பகுதிகள் டீ, காபி, பலகாரம் மற்றும் டிபன் வகைகள் உள்ளிட்ட சில உணவு பொருட்களின் விலை தீடீர் என உயர்த்தப்பட்டுள்ள நிலையில், கீரமங்கலத்தில் டீக்கடைகளை கண்டித்து ஒட்டப்பட்ட போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் பகுதியில் டீக்கடை உரிமையாளர்களை கண்டித்து போஸ்டர் ஒன்று அச்சிட்டு ஒட்டப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில், ‘வன்மையாக கண்டிக்கிறோம்’ என்ற தலைப்பில் கீரமங்கலம் பகுதியில் உள்ள டீக்கடை உரிமையாளர்கள் திடீரென விலையேற்றி உள்ளனர். எந்த பொருட்களின்...
உணவில் கண்ணாடி துண்டு கிடந்தால் அதிர்ச்சி.. நல்வாய்ப்பாக தப்பிய சிறுவன்
திருவண்ணாமலை காந்தி நகர் பைபாஸ் சாலையில் இயங்கிவரும் பொன்ராயர் என்ற பிரபலமான சைவ உணவகம் செயல்பட்டு வருகிறது. இந்த உணவகத்தில் இன்று மதியம் வாடிக்கையாளர் தனது குடும்பத்துடன் உணவருந்த வந்துள்ளனர். அப்போது பெற்றோர்கள் இருவரும் தங்களுக்கு சாப்பாடு ஆர்டர் செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களது மகனுக்கு சாம்பார் சாதம் ஆடர் செய்துள்ளனர். அந்த சாம்பார் சாதத்தை சிறுவன் பாதி சாப்பிட்ட நிலையில் பெரிய கண்ணாடி துண்டு ஒன்று இருந்துள்ளது. அந்த கண்ணாடி துண்டு இருப்பதை கவனிக்காமல் சிறுவன் அந்த,...
சென்னைஉட்பட 12 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் மதியம் 1 மணி வரை 12 மாவட்டங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில், “சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், நெல்லை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்களில் பிற்பகல் 1 மணி வரை இடிமின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதேப்போல், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சி, தென்காசி,...










