தமிழ்நாடு அரசின் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தீபாவளி போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வருகிற அக்டோபர் 31ம் தேதி நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் அனைத்து அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் c மற்றும் d பிரிவு தொழிலாளர்களுக்கு 20 சதவீதம் வரை போனஸ் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மிகை ஊதியம் பெற தகுதியுள்ள நிரந்தரத் தொழிலாளர்கள் குறைந்த பட்சம் 8 ஆயிரத்து...
Author: Source Author
சென்னையில் பள்ளத்தால் பறிப்போன உயிர்- சிசிடிவி வெளியாகி அதிர்ச்சி
சென்னையில் மூடாபடாத பள்ளத்தில் தவறிவிழுந்ததில் மாநகர போக்குவரத்து ஓட்டுநர் மீது பேருந்து மோதியதில் பரிதாபமாக உயிரிழந்த சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி பிரதான சாலையில் மாநகர பேருந்து ஓட்டுநர் முருகேசன் (55), என்பவர் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த போது பீனிக்ஸ் மால் அருகே சாலையில் இருந்த பள்ளத்தில் சிக்காமல் இருக்க பிரேக் பிடித்தபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த இருசக்கர வாகனம் மோதி இருவரும் கீழே விழுந்தனர். இதில் வலது பக்கம்...
சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் கிரிக்கெட் விளையாடியது தவறில்லை- எச்.ராஜா
சிதம்பரம் கோவில் கருவறையில் தீட்சிதர்கள் விளையாடவில்லை. கோவில் வளாகத்தில் தான் விளையாடினார்கள். அதில் ஒன்றும் தவறில்லை என எச்.ராஜா கருத்து தெரிவித்துள்ளார். திருவாரூரில் பாஜக உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ அரியானாவில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக செயல்படவில்லை என கூறும் காங்கிரஸ், ஜம்மு காஷ்மீரில் ஏன் கூறவில்லை? என கேள்வி எழுப்பினார்.மேலும், சர்வ சிக்ஷா...
“தமிழக அரசே போராட விடு” – தொழிலாளர்களுக்கு பா.ரஞ்சித் ஆதரவு
தங்கள் உரிமை கேட்டுப் போராடும் தொழிலாளர்களை போராட விடு என சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பா.ரஞ்சித் கருத்து தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சங்கத்தினை துவங்கி அதனை அங்கீகரிக்க கோரி, தொழிலாளர்கள் சம்சங் நிறுவனத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தனர். ஆனால் கடிதம் அனுப்பியும் எவ்வித பதில் அளிக்காமல் நிர்வாகம் காலம் தாழ்த்தி வந்ததாக தொழிலாளர்கள் மத்தியில்...
சாம்சங் விவகாரத்தில் தொழிற்சங்கம் அமைக்க அனுமதிக்காதது அடக்குமுறை – திருமாவளவன்
சாம்சங் நிறுவனத்தை எதிர்க்கவில்லை, அதன் அடக்குமுறையை எதிர்க்கிறோம் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரம் பகுதியில் இயங்கி வரும் சாம்சங் தொழிற்சாலையில் பணிபுரியும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர தொழிலாளர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொழிற்சங்கத்தினை துவங்கி அதனை அங்கீகரிக்கக்கோரி, தொழிலாளர்கள் சம்சங் நிறுவனத்திற்கு ஒரு கடிதத்தை அனுப்பி வைத்தனர். மேலும் சம்பள உயர்வு ,போனஸ், எட்டு மணி நேரம் வேலை உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி மீண்டும் இரண்டாவது கடிதத்தை நிறுவனத்திற்கு சமர்ப்பித்தனர்....
TNPSC தேர்வர்களுக்கு ஹாப்பி நியூஸ்- தமிழக அரசு அதிரடி உத்தரவு
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கு கூடுதலாக 2208 பணியிடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அரசு துறைகளில் உள்ள கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 6,244 காலிப்பணியிடங்களுக்கு தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மூலம் குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வை 7,247 மையங்களில் சுமார் 15.88 லட்சம் பேர் எழுதினர். டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இருப்பினும்...
சாம்சங் தொழிலாளர்கள் தொடர்ந்து போராடத் தடை இல்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை திருப்பெரும்புதூரில் ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து 25 நாட்களுக்கும் மேலாக சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை நிறுத்தும்படி தமிழ்நாடு அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு எந்தத் தீர்வும் காணப்படவில்லை. போராட்டம் நடத்தி வருகிற சாம்சங் ஊழியர்களுடனான பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்பட்டுவிட்டதாகத் அரசுத் தரப்பில் இருந்து தகவல் வெளியான நிலையில் போராட்டக்குழுவினர் இதனை முழுமையாக மறுத்திருக்கின்றனர். இந்நிலையில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வரும் நிலையில்...
கொடைக்கானலுக்கு வரும் ஆபத்து- எச்சரிக்கை விடுத்த சிபிஎம் எம்.பி.,
கொடைக்கானலில் பிற்காலத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது என சிபிஎம் எம்.பி., சச்சிதானந்தம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் சிபிஎம் எம்.பி., சச்சிதானந்தம் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர், ” கொடைக்கானல் மேல் மலை பகுதியில் நிலப்பிளவு ஏற்பட்டது. அருகில் கேரளா மாநிலம் இருப்பதால் மூன்று துறை உடனடியாக அணுகி இதுகுறித்து ஆய்வு செய்ய வலியுறுத்தினோம். வயநாடு போல் ஏற்படக்கூடாது. இதன்படி மத்திய அரசு ஆய்வு செய்து தற்போது ஆய்வு அறிக்கை கொடுத்துள்ளனர்.தற்போது பயம் இல்லை. ஆனால் பிற்காலத்தில் நிலச்சரிவு ஏற்பட...
இபிஎஸ் ஆட்சியில் இது இல்லவே, இல்லை- அடித்து பேசிய ஆ.ராசா
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் தமிழகத்தில் புதிய தொழிற்சாலை, முதலீடுகள் இல்லை என நீலகிரி திமுக எம்.பி., ஆ.ராசா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியம் ஜடையம்பாளையம் ஊராட்சியில் ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கூடுதல் இரண்டு வகுப்பறை கட்டிடம் ரூபாய் 32.90 லட்சத்தில் கட்டப்பட்டது புதிய கட்டிட திறப்பு விழா ஜடையம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.கே. பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நீலகிரி திமுக எம்.பி.,...
விஜய் அரசியலுக்கு வந்தால், எங்களுக்கு பாதிப்பில்லை – திமுக எம்.பி., பதில்
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க சென்றபோது பொதுமக்கள் குறைவாக இருந்ததால், கோபத்தில் நிர்வாகி போட்ட துண்டை தூக்கி எறிந்த தங்க தமிழ்ச்செல்வனின் செயலால் பரபரப்பு ஏற்பட்டது. தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்.பி., சோழவந்தான் தொகுதிக்குட்பட்ட அலங்காநல்லூர் பாலமேடு பகுதிகளில் தனக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அலங்காநல்லூர் அருகே முடுவார்பட்டி பகுதியில் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் பேசும்போது, விலைவாசி உயர்வு , மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என...










