Author: Source Author

Home Source Author
கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
Post

கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா உள்ளிடோர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா  திரைப்படம் உலகெங்கிலும் நாளை மறுநாள் வெளியாக உள்ளது.  இந்த படத்தை சட்டவிரோதமாக 2365 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில்  வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான...

சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் -10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
Post

சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் -10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை

சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய  3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று மதியம் 1.30 மணி அளவில், அதே பகுதிகளில்  ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி...

எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவதும் தான் பணியா?- காவல்துறைக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
Post

எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவதும் தான் பணியா?- காவல்துறைக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி

தமிழக காவல்துறைக்கு என சில சிறப்புகளும், பெருமைகளும் உள்ளன. அவற்றை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மாநகர காவல்துறையின்  செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருக்கும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை  விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்காக தமிழ்நாடு மாநில கேடருக்கு ஒதுக்கப்பட்ட  பிற...

தமிழகத்தில் 329 நிவாரண மையங்கள் தயார்- துணை முதலமைச்சர் உதயநிதி
Post

தமிழகத்தில் 329 நிவாரண மையங்கள் தயார்- துணை முதலமைச்சர் உதயநிதி

தமிழகத்தில் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.  மேலும் மழை முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் துணை முதலமைச்சர்...

சென்னையில் பார் மீது பெட்ரோல் குண்டு  வீச்சு-வாசலில் படுத்து தூங்கியவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரம்
Post

சென்னையில் பார் மீது பெட்ரோல் குண்டு  வீச்சு-வாசலில் படுத்து தூங்கியவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரம்

சென்னையில் மதுபான பார் வாசலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரத்தில் பார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் எஸ்.ஆர். பார் என்ற பெயரில் மதுபோன விடுதி செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இங்கு மது அருந்த வந்த இளைஞர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பார் வாசலிலேயை படுத்து தூங்கியுள்ளார்.சிறிது நேரம் கழித்து வெளியே வந்த பார் ஊழியர் வாசலில் படுத்து தூங்கிய இளைஞரை...

சென்னையில் மதியம் வரை மழை-மக்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்
Post

சென்னையில் மதியம் வரை மழை-மக்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்

சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இன்று (நவ.12) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகர்வதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், தொடர் மழை...

அதிரடியாக ரூ.1080 குறைந்த தங்கம் விலை – மளமளவென விலை குறைந்தால் மக்கள் மகிழ்ச்சி
Post

அதிரடியாக ரூ.1080 குறைந்த தங்கம் விலை – மளமளவென விலை குறைந்தால் மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1080 குறைந்து விற்கப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 12 நாட்களில் ரூ.2,960 குறைந்துள்ளது.  சென்னையில் நேற்று (நவ.11ம் தேதி) சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1080 குறைந்து விற்கப்படுகிறது.சர்வதேச பொருளாதார சூழல்,...

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை- சாலைகள் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்
Post

சென்னையில் கொட்டித்தீர்த்த மழை- சாலைகள் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர்

சென்னையில் பரவலாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகர்வதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், தொடர்...

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு
Post

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் – தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த சத்யபிரதா சாகு கால்நடை பராமரிப்பு, மீன்வளத்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.  சுற்றுலாத்துறை ஆணையர் சமயமூர்த்தி மனித வள மேலாண்மைத்துறை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.துணை முதலமைச்சரின் துணை செயலாளராக காஞ்சிபுரம் ஆட்சியராக இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்ட ஆர்த்தி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  தேசிய ஊரக திட்ட இயக்குநர் ஷில்பா பிரபாகர் சுற்றுலாத்துறை இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது...

மதுரையில் விலையில்லா விருந்தகம் அகற்றம் – நெருக்கடி கொடுப்பதாக தவெகவினர் குற்றச்சாட்டு
Post

மதுரையில் விலையில்லா விருந்தகம் அகற்றம் – நெருக்கடி கொடுப்பதாக தவெகவினர் குற்றச்சாட்டு

மதுரையில் தவெகவினர் சார்பில் சுமார் 150 நாட்களாக செயல்பட்ட விலையில்லா விருந்தகம் மதுரை மாநகராட்சியால் அகற்றப்பட்டதற்கு தவெகவினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரையில் தவெக சார்பாக விலையில்லா விருந்தகம் மதுரை மத்திய தொகுதி நிர்வாகி சிராஜுதீன் தலைமையில் நாள் ஒன்றுக்கு சுமார் 250க்கும் மேற்பட்ட ஏழை,எளிய  மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.குறிப்பாக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தொடங்கி வைத்த விலையில்லா விருந்தகம் மூலம் பல மாவட்டங்களில் கட்சியின் சார்பாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், மதுரையில்...

× Free India Logo
Welcome! Free India