பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் உறவினரின் உதட்டை கடித்து காயப்படுத்தியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் காரணமாக மோதல் ஏற்படுவதை பார்த்திருக்கிறோம். கணவன்-மனைவி பிரச்னை, குடும்ப சண்டைகள், முன்விரோத பகை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பார்க்கிறோம். சில பிரச்னைகள் பேச்சுவாத்தையின் மூலம் முடிகிறது. பல பிரச்னைகள் காவல் நிலையம் வரை சென்று முடிகிறது. அந்த வகையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் உதட்டை...
Author: Source Author
தேர்தலுக்கு அவகாசம்: எதிர்க்கட்சிகள் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை- உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கால அவகாசம் இருக்கிறது.அதற்குள் எதிர்க்கட்சிகள் குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தொடங்கும் பட்டியலின நபர்களின் உதவிக்காக 50 கோடியாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக துணைதுணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவும் Co working space center பல மாவட்டத்தில் உருவாக்கவும், தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என துணை முதல்வர் தெரிவித்தார். குறு,...
தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி- யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் இன்று (நவ.12)பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசின் சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளர் இருந்து வந்த அர்ச்சனா பட்நாயக் சமீபத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளை தொடங்கினார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வந்த சத்யபிரதா சாகு தற்போது தமிழக அரசின் கால்நடைத் துறைச்...
கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா உள்ளிடோர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் உலகெங்கிலும் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்த படத்தை சட்டவிரோதமாக 2365 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான...
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் -10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று மதியம் 1.30 மணி அளவில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி...
எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவதும் தான் பணியா?- காவல்துறைக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழக காவல்துறைக்கு என சில சிறப்புகளும், பெருமைகளும் உள்ளன. அவற்றை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மாநகர காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருக்கும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்காக தமிழ்நாடு மாநில கேடருக்கு ஒதுக்கப்பட்ட பிற...
தமிழகத்தில் 329 நிவாரண மையங்கள் தயார்- துணை முதலமைச்சர் உதயநிதி
தமிழகத்தில் 329 நிவாரண மையங்கள் தயார் நிலையில் உள்ளதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவான நிலையில், சென்னையில் நேற்று இரவு முதல் தற்போது வரை நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையத்தினை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் மழை முன்னெச்சரிக்கை மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளையும் துணை முதலமைச்சர்...
சென்னையில் பார் மீது பெட்ரோல் குண்டு வீச்சு-வாசலில் படுத்து தூங்கியவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரம்
சென்னையில் மதுபான பார் வாசலில் படுத்து தூங்கிக்கொண்டிருந்தவரை தட்டி எழுப்பியதால் ஆத்திரத்தில் பார் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அரும்பாக்கம் 100 அடி சாலையில் எஸ்.ஆர். பார் என்ற பெயரில் மதுபோன விடுதி செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு இங்கு மது அருந்த வந்த இளைஞர் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு பார் வாசலிலேயை படுத்து தூங்கியுள்ளார்.சிறிது நேரம் கழித்து வெளியே வந்த பார் ஊழியர் வாசலில் படுத்து தூங்கிய இளைஞரை...
சென்னையில் மதியம் வரை மழை-மக்களுக்கு அலர்ட் விடுத்த வானிலை மையம்
சென்னை உட்பட 6 மாவட்டங்களில் இன்று (நவ.12) மதியம் 1 வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக சென்னையில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தமிழகம் நோக்கி நகர்வதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில், தொடர் மழை...
அதிரடியாக ரூ.1080 குறைந்த தங்கம் விலை – மளமளவென விலை குறைந்தால் மக்கள் மகிழ்ச்சி
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.1080 குறைந்து விற்கப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.1080 குறைந்து ரூ.56,680க்கும், கிராமுக்கு ரூ.135 குறைந்து ரூ.7,085க்கும் விற்பனை செய்யப்படுகிறது.சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2 குறைந்து ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த 12 நாட்களில் ரூ.2,960 குறைந்துள்ளது. சென்னையில் நேற்று (நவ.11ம் தேதி) சவரனுக்கு ரூ.440 குறைந்து விற்கப்பட்ட நிலையில், இன்று ரூ.1080 குறைந்து விற்கப்படுகிறது.சர்வதேச பொருளாதார சூழல்,...










