Author: Source Author

Home Source Author
அரிசி மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்… வடலூரில் பரபரப்பு!
Post

அரிசி மூட்டையில் கட்டுக்கட்டாக பணம்… வடலூரில் பரபரப்பு!

வடலூர் ராகவேந்திரா சிட்டியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் சண்முகம்  நெய்வேலி மெயின் ரோட்டில் சண்முகா ட்ரேடர்ஸ் அரிசி மண்டி நடத்தி வருகிறார்.  இந்நிலையில் நேற்று முன்தினம் இவருடைய மனைவியின் தம்பி சீனிவாசன் கடையில் இருந்த போது நெய்வேலி அருகே மேல்பாதி கிராமம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பூபாலன் என்பவர் காலை 10 மணி அளவில் அரிசி வாங்க வந்தார். அப்போது கடையில் இருந்த சீனிவாசனிடம் 16 கிலோ பிரியாணி அரிசி வேண்டும் என கேட்டுள்ளார். அதற்கு...

”இபிஎஸ் கனவு உலகத்தில் வாழ்கிறாரா?” – முதலமைச்சர் கொடுத்த பதிலடி
Post

”இபிஎஸ் கனவு உலகத்தில் வாழ்கிறாரா?” – முதலமைச்சர் கொடுத்த பதிலடி

எதிர் கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி கனவு உலகில் இருக்கிறா எனத் தெரியவில்லை  என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். நாமக்கல் மாவட்டத்தில் 810 கோடி ரூபாயில் முடிவுற்ற திட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து, பொம்மை குட்டைமேட்டில் பொதுமக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர், கடந்த சில நாட்களாக, மூன்றாண்டுகளாக தமது ஆட்சியில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள், நடைபெற்று வரும் பணிகள் குறித்து துறைவாரியாக ஆய்வுக் கூட்டங்களை...

”மிகக் குறைந்த விலையில் பட்டாசு”..நீங்களும் இந்த ஆன்லைன் விளம்பரத்த பார்த்தீங்களா? அப்போ உஷாரா இருங்க!
Post

”மிகக் குறைந்த விலையில் பட்டாசு”..நீங்களும் இந்த ஆன்லைன் விளம்பரத்த பார்த்தீங்களா? அப்போ உஷாரா இருங்க!

இன்ஸ்டாகிராம், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வெளியாகும் விளம்பரங்கள் போன்றே, இப்போது தீபாவளிக்காக ஆன்லைனில் மிகக் குறைந்த விலையில் பட்டாசுகள் விற்பதாக விளம்பரங்கள் அணிவகுக்கின்றன. ஆனால் இந்த விளம்பரங்கள் எல்லாம் ஆசைத் தூண்டில் போட்டு உங்கள் பணத்தை அபகரிக்கின்றன என அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளது  தமிழ்நாடு காவல்துறையின் சைபர் க்ரைம் பிரிவு. கடந்த செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் மட்டும் தேசிய சைபர்கிரைம் ரிப்போர்ட்டிங் போர்ட்டலில் இந்த பட்டாக விற்பனை மோசடி தொடர்பாக 17 புகார்கள் பதிவு...

முதல் முறையாக பிரான்ஸ் செல்லும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.. கல்வி சுற்றுலா கூட்டிச்செல்லும் அரசு!
Post

முதல் முறையாக பிரான்ஸ் செல்லும் அரசு பள்ளி ஆசிரியர்கள்.. கல்வி சுற்றுலா கூட்டிச்செல்லும் அரசு!

முதல் முறையாக 54 அரசு பள்ளி ஆசிரியர்கள் பிரான்ஸ் செல்கின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் அதிகாரிகள் உட்பட 60 பேர் பயணம். 16 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்ற கனவு ஆசிரியர் போட்டித் தேர்வுகளில், இறுதியாக 90 விழுக்காட்டிற்கும் அதிகமாக மதிப்பெண்கள் பெற்ற 54 ஆசிரியர்கள் பிரான்ஸ் நாட்டிற்கு கல்வி சுற்றுலா செல்ல தேர்வு செய்யப்பட்டு இருக்கின்றனர். அமைச்சர் அன்பில் மகேஷ் நேற்று பிரான்ஸ் சென்ற நிலையில், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் என 60 பேர் நாளை...

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு!
Post

சாம்சங் தொழிலாளர்கள் போராட்டத்தால் 100 மில்லியன் டாலர் இழப்பு!

தொழிலாளர்கள் போராட்டத்தால் நூறு மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் சாம்சங் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்கள், சிஐடியு தொழிற்சங்க இணைப்பு பெற்ற சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கம் என்ற பெயரில், தொழிற்சங்கத்தை துவங்கி, அதை பதிவு செய்யக் கோரி தொழிற்சங்கங்கள் பதிவாளருக்கும், தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கும் விண்ணப்பித்திருந்தனர். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் தங்கள் தொழில் சங்கத்தை பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என...

அடியாட்களோடு வந்து தேவா மகள் மிரட்டுகிறார்… வைரலாகும் வீடியோவால் பகீர்!
Post

அடியாட்களோடு வந்து தேவா மகள் மிரட்டுகிறார்… வைரலாகும் வீடியோவால் பகீர்!

சென்னை வடபழனியில் இசையமைப்பாளர் தேவாவின் மகள் ஜெயபிரதாவுக்கு சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த வீட்டை தீபிகா மற்றும் ஜெயக்குமாருக்கு வாடகை விட்டதாக கூறப்படுகிறது.  இந்த நிலையில், வாடகைக்கு குடியிருந்துவரும், தீபிகா திடீரென கதறிக்கொண்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.  அந்த வீடியோவில் தீபிகா தனது வீட்டில் கத்தியுடன் புகுந்த 7 நபர்கள் தன்னை மிரட்டி விட்டு வீட்டிலிருந்த அனைத்து பொருட்களையும் அடித்து உடைத்துவிட்டு தப்பி சென்றதாகவும், உயிர் பிழைத்ததே பெரிது...

தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை – நீதிமன்றம் போட்ட உத்தரவு
Post

தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை – நீதிமன்றம் போட்ட உத்தரவு

தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்டோர்  நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.  புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும் வைணவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படம் திரையரங்குகளில் வெளியான  நிலையில் விரைவில்...

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் – அவசரமாக விடுதியை காலி செய்ததால் பரபரப்பு
Post

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் – அவசரமாக விடுதியை காலி செய்ததால் பரபரப்பு

நெல்லையில் செயல்பட்டு வந்த ஜெல் நீட் அகாடமியின் ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கும் விடுதியை அவசர அவசரமாக காலி செய்யப்பட்டது. நெல்லையில் இயங்கி வந்த ஜல் நீட அகாடமியில் மாணவ மாணவிகள் கடுமையாக தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து சமூக நலத்துறை தரப்பில் விசாரணை மேற்கொண்டதில்அங்கு செயல்பட்டு வந்த ஆண் பெண் இருபாலருக்கான விடுதிகள் எந்தவிதமான ஒப்புதலும் இன்றியும் போதிய உட்கட்டமைப்புகள் வசதிகள் இன்றியும் இயங்கி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ...

கோவையில்  தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக புகைப்படம் – பாய்ந்தது வழக்கு
Post

கோவையில்  தீவிரவாத அமைப்புக்கு ஆதரவாக புகைப்படம் – பாய்ந்தது வழக்கு

கோவையில் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆதரவு படத்தை வாட்ஸ்அப் புரோஃபைலில் வைத்திருந்த நபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, குனியமுத்தூர் முத்துசாமி சேர்வை தெருவைச் சேர்ந்த ஷேக் சபியுல்லா (41) என்பவர் மீது ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான படத்தை வாட்ஸ்அப் புரோஃபைலில் வைத்து இருந்ததற்காக போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.கோவை நகர போலீஸின் உளவுப் பிரிவு அதிகாரிகள் சமூக வலைதளங்களை கண்காணித்து வந்த நிலையில், சபியுல்லாவின் வாட்ஸ்அப் புரோஃபைல் படம் தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ் க்கு ஆதரவாக...

எதிர்திசையில் வந்தவருக்கு வழி விட்டதால் வந்த வினை-மாணவிக்கு சேர்ந்த சோகம்
Post

எதிர்திசையில் வந்தவருக்கு வழி விட்டதால் வந்த வினை-மாணவிக்கு சேர்ந்த சோகம்

ஈசிஆர் அருகே போக்குவரத்து விதிமுறையை மீறி எதிர் திசையில் வந்த வாகனத்திற்கு வழி விட்டதால் கழிவுநீர் லாரியில் சிக்கி மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செம்மஞ்சேரியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்த கேத்தரின் சென்ற மாணவியும், அவரது ஆண் நண்பரும் இருசக்கர வாகனத்தில் ஈசிஆர் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.பக்கிங்காம் கால்வாய் மேம்பாலம் மீது சென்றபோது எதிர் திசையில் வந்த இருசக்கர வாகனத்திற்கு வழி விடுவதற்காக வலது பக்கத்தில் சிறிது நகர்ந்தபோது பின்னால்...

× Free India Logo
Welcome! Free India