தஞ்சாவூர் அருகே அய்யம்பட்டியில் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் 5 மாணவர்கள் வாயில் (பிளாஸ்திரி) செல்லோ டேப் ஒட்டி கொடுமைப்படுத்தியதாக குற்றம்சாட்டி புகைப்படம் ஆதாரத்துடன் மாணவர்களின் பெற்றோர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். தஞ்சை மாவட்டம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அய்யம்பட்டி அரசு தொடக்கப் பள்ளியில் அதே பகுதியைச் சேர்ந்த கனிஷ் வர்மா, நிதிஷ், கவின், ரோஷன், சஷ்மிதா ஆகியோர் நான்காம் வகுப்பு படித்து வருகின்றனர்.இந்த பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா ஒரு மாணவி உட்பட...
Author: Source Author
விஜய் எங்களுக்காக வந்தாரு..தவெகவில் இணைந்த ஸ்னோலின் தாயார் உருக்கம்
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் தனது மகள் ஸ்னோலின் உயிரிழந்த போது, விஜய் தங்களுக்குக்காக வந்து நின்றார்.எனவே தவெகவில் இணைகிறேன் என ஸ்னோலின் தாயார் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தை நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கினார். அதைத்தொடர்ந்து கட்சியின் கொடி அறிமுகம் செய்து வைத்து பனையூரில் உள்ள அலுவலகத்தில் கட்சி கொடியை ஏற்றினார்.இதனைத்தொடர்ந்து அரசியல் பணிகளில் விஜய் தீவிரம் காட்ட ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலையில் தவெகவின் மாநில மாநாடு அக்.27ம் தேதி நடைபெற்றது....
பேருந்தில் நிலையத்தில் காத்திருந்த பெண்ணுக்கு நேர்ந்த அதிர்ச்சி – இளைஞரின் செயலால் பரபரப்பு
சென்னை புரசைவாக்கம் பகுதியில் பேருந்து நிலையத்தில் காத்திருந்த பெண்ணை உருட்டுக்கட்டையால் தாக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அயனாவரம் செல்வதற்காக காத்திருந்த மைதிலி என்பவர் போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் உருட்டுக்கட்டையோடு வந்து செல்போனை தந்து விட்டு ஓடி விடு என மிரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. பயந்துபோன அந்த பெண் அருகில் இருந்த கூச்சலிட்டதால் அருகில் இருந்த போக்குவரத்து காவலர் வந்து விட்டார். அந்த இளைஞரிடம் உருட்டுக் கட்டையை கைப்பற்றி விட்டு சாலையோரமாக...
எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், இவர்கள் தான் பொறுப்பு -முன்னாள் அமைச்சர் பரபரப்பு குற்றச்சாட்டு
எங்கள் உயிருக்கோ, உடைமைக்கோ அச்சுறுத்தல் ஏற்பட்டால், எங்கள் மீது தாக்குதல் நடத்திய அமமுகவினர் தான் பொறுப்பு ஆவார்கள் என மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம், மங்கல்ரேவு பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருடன் வந்த அதிமுகவினர் மீது சிலர் தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் அதிமுக மாவட்ட நிர்வாகி தினேஷ்குமார் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மதுரை மாவட்ட எஸ்.பி-யிடம் முன்னாள் அமைச்சர்...
முன்னாள் அமைச்சரை தாக்க முயற்சி: ஒருவர் படுகாயம்- மதுரையில் பரபரப்பு
உசிலம்பட்டி அருகே முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை தாக்க முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே அத்திபட்டியில் நேற்று மாலை அதிமுக செயல் வீரர்கள் கூட்டம் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.இந்த ஆலோசனை கூட்டத்தை முடித்துவிட்டு திருமங்கலம் நோக்கி சென்ற முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரை மங்கல்ரேவு பகுதியில் இடைமறித்த அமமுக நிர்வாகிகள் டி.டி.வி தினகரன் குறித்து அவதூறாக பேசியதாகவும், ஆர்.பி.உதயகுமாருக்கு எதிராகவும் கோசங்கள் எழுப்பி ஆர்.பி.உதயகுமாருடன் வந்த கார்களையும் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் உசிலம்பட்டியைச்...
சென்னை பள்ளியில் வாயு கசிவு சம்பவம்- மாணவர்கள் செய்த செயலா? போலீசார் விசாரணை
சென்னை திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளியில் வாயு கசிவு சம்பத்தில் புதிய திரும்பமாக பள்ளியை சுற்றி வாயு கசிவு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இல்லை என விசாரணையில் தெரியவந்துள்ளது. சென்னை திருவெற்றியூரில் வாயு கசிவு ஏற்பட்ட தனியார் பள்ளி மறு உத்தரவு வரும் வரை பள்ளிகள் செயல்படாது என ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு ஆய்வு நிறைவடைந்தது. இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 25ஆம் தேதி திடீரென பள்ளியில் வாயு கசிவு ஏற்பட்டதாக மாணவிகள்...
நடிகர் டெல்லி கணேஷ் மறைவு – பிரதமர் மோடி இரங்கல்
நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு பிரதமர் மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80)வயது மூப்பு மற்றும் உடல் நிலை சரியில்லாத காரணத்தால் சென்னை ராமாபுரத்தில் உள்ள இல்லத்தில் நேற்று இரவு 11 மணியளவில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, நடிகர் டெல்லி கணேஷ் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்....
ஜனநாயக தேர்தலை அறிமுகப்படுத்தியவர் ராஜராஜ சோழன் – அமைச்சர் கோவி. செழியன் புகழாரம்
உலகில் முதல் முதலாக 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஜனநாயக முறையில் தேர்தலை அறிமுகப்படுத்தியவர் மாமன்னன் ராஜராஜ சோழன் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர், கும்பகோணம் அருகே பம்பப்படையூரில் ராஜராஜ சோழன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் நடைபெற்ற ராஜராஜ சோழன் சதய விழா நிகழ்ச்சி சோழர்களின் தலைநகரம் பழையயாறை அருகே பம்பை படையூரில் ராஜராஜ சோழனின் 1039வது சதய விழா ராஜராஜன் வரலாற்று ஆய்வு மற்றும் பண்பாட்டு மையம் சார்பில் இன்று...
ஆய்வுக்கு சென்ற இடத்தில் முதலமைச்சர் போட்ட உத்தரவு – கலங்கி நிற்பவர்களுக்கு கைகொடுத்த அரசு
பட்டாசு விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான படிப்பு செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுநகர் மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 77.12 கோடி மதிப்பீட்டில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய 6 தளங்கள் கொண்ட புதிய விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை திறந்து வைத்து மாவட்ட ஆட்சியர் இருக்கையில் ஆட்சியர் ஜெயசீலனை அமர வைத்தும் கூட்ட அரங்கில் அமர்ந்து முதல் கூட்டத்தையும் தொடங்கி வைத்தார்.பின்னர்...
“எதற்காக இந்த திடீர் மேக்கப், யாரை ஏமாற்ற முயல்கிறீர்கள்”- அரசு அதிகாரிகளை டோஸ் விட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகள்
நெல்லையில் ஆய்வுக்கு சென்ற இடத்தில் அதிகாரிகள் சொன்ன பதிலை கேட்டு சென்னை கேட்டு அதிர்ச்சி அடைந்த நீதிபதிகள், உங்கள் பதிலை கேட்டு கேட்டு புளித்துப் போய்விட்டதாக டோஸ் விட்டனர். தென் தமிழகத்தின் ஜீவாதார நதியான தாமிரபரணி நதியில் அதிக அளவிலான கழிவுகள் கலப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இது குறித்து பலமுறை அரசுக்கு கேள்வி எழுப்பியும் உரிய பதில் கிடைக்காததை எடுத்து கடந்த வாரம் நாங்கள்...










