டாஸ்மாக் கடைகளில் நாளை முதல் டிஜிட்டல் முறையில் மது விற்பனை தொடங்க உள்ளது.இதனால் இனி டாஸ்மாக் கடைகளில் மதுவாங்குபவர்களுக்கு ரசீது கொடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் முறைகேடாக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுக்கவும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட மற்ற நேரங்களில் கள்ளத்தனமாக மது விற்பனை செய்வதை தடுக்கவும், மதுபான விற்பனையை டிஜிட்டல் மூலமாக டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக ரூ.294 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக்...
Author: Source Author
சென்னையில் தொழிலாளர்கள் தான் குறி-கேரள இளைஞர் கஞ்சாவுடன் கைது
கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் குறிவைத்து கஞ்சா விற்பனை செய்த கேரளா இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை வடபழனி, சூளைமேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கட்டுமான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களை குறிவைத்து போதைப் பொருள் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக சென்னை தெற்கு மண்டல போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கிடைத்த ரகசிய தகவல்களை அடிப்படையில் அசோக் நகர் பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்பொழுது சந்தேகத்தின் பேரில் ஒருவர் கருப்பு கலர் டிராவல் பேக்...
போதைப்பொருளுடன் நடிகை சிக்கிய விவகாரம்-டீலர்கள் கைது
சென்னையில் போதைப்பொருளுடன் நடிகை மீனா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் டீலர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் அண்ணாசாலையில் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த சினிமா துணை நடிகை மீனா சமீபத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் நடிகை மீனாவுக்கு சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். மருத்துவப் பரிசோதனை முடிந்த பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்ட நடிகை மீனா போலீஸ் விசாரணையில் முக்கிய வாக்குமூலம் அளித்துள்ளார்....
இன்ஸ்டாகிராமில் எல்லை மீறிய பழக்கம்-இளம்பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி
இன்ஸ்டாகிராமில் பழகி ஆபாச வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய வழக்கில் மகன் மற்றும் தந்தையை போலீசார் கைது செய்தனர். மும்பையில் வசித்து வரும் 23 வயது பெண் ஒருவர், கல்லூரி விடுமுறை நாட்களில் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது உறவினர் வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றுள்ளார். இந்நிலையில் மேற்படி பெண், R-9 வளசரவாக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான சுஜித்...
கேட்டும் கொடுக்காததால் விரக்தி- ஆணின் உதட்டை கடித்த நபர் கைது
பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் உறவினரின் உதட்டை கடித்து காயப்படுத்தியவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். நம் அன்றாட வாழ்க்கையில் பல்வேறு பிரச்னைகள் காரணமாக மோதல் ஏற்படுவதை பார்த்திருக்கிறோம். கணவன்-மனைவி பிரச்னை, குடும்ப சண்டைகள், முன்விரோத பகை, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை பார்க்கிறோம். சில பிரச்னைகள் பேச்சுவாத்தையின் மூலம் முடிகிறது. பல பிரச்னைகள் காவல் நிலையம் வரை சென்று முடிகிறது. அந்த வகையில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் உதட்டை...
தேர்தலுக்கு அவகாசம்: எதிர்க்கட்சிகள் குறித்து பேச வேண்டிய அவசியமில்லை- உதயநிதி ஸ்டாலின்
2026 சட்டமன்றத் தேர்தலுக்கான கால அவகாசம் இருக்கிறது.அதற்குள் எதிர்க்கட்சிகள் குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் இல்லை என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டார்ட்டப் நிறுவனங்கள் தொடங்கும் பட்டியலின நபர்களின் உதவிக்காக 50 கோடியாக உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக துணைதுணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.ஸ்டார்ட்டப் நிறுவனங்களுக்கு உதவும் Co working space center பல மாவட்டத்தில் உருவாக்கவும், தமிழக அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என துணை முதல்வர் தெரிவித்தார். குறு,...
தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரி- யார் இந்த அர்ச்சனா பட்நாயக்?
தமிழகத்தின் முதல் பெண் தலைமை தேர்தல் அதிகாரியாக அர்ச்சனா பட்நாயக் இன்று (நவ.12)பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழக அரசின் சிறு, குறு தொழிலாளர் துறையின் செயலாளர் இருந்து வந்த அர்ச்சனா பட்நாயக் சமீபத்தில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக பணியிடமாற்றம் செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து சென்னை தலைமைச் செயலகத்தில் அவரது அறையில் பொறுப்பேற்றுக்கொண்டு பணிகளை தொடங்கினார். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்து வந்த சத்யபிரதா சாகு தற்போது தமிழக அரசின் கால்நடைத் துறைச்...
கங்குவா திரைப்படத்தை வெளியிட தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்கு தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா உள்ளிடோர் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் உலகெங்கிலும் நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்த படத்தை சட்டவிரோதமாக 2365 இணையதளங்கள் மற்றும் கேபிள் டிவிகள் ஆகியவற்றில் வெளியிடப்படுவதை தடுக்க வேண்டுமென அரசு மற்றும் தனியார் இணைய தள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவிடக் கோரி பட தயாரிப்பு நிறுவனமான...
சென்னைக்கு ஆரஞ்ச் அலர்ட் -10 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை
சென்னை , திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 3 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிப்பேட்டை, கடலூர், மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக, நேற்று மதியம் 1.30 மணி அளவில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி...
எதிர்க்கட்சிகள் மீது பொய்வழக்கு புனைவதும் தான் பணியா?- காவல்துறைக்கு அன்புமணி ராமதாஸ் கேள்வி
தமிழக காவல்துறைக்கு என சில சிறப்புகளும், பெருமைகளும் உள்ளன. அவற்றை பாதுகாக்கும் வகையில் நடந்து கொள்ள வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சென்னை மாநகர காவல்துறையின் செயல்பாடுகளை கடுமையாக கண்டித்திருக்கும் உச்சநீதிமன்றம், அந்த வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக்குழுவை அமைக்கப் போவதாக அறிவித்திருக்கிறது. அதற்காக தமிழ்நாடு மாநில கேடருக்கு ஒதுக்கப்பட்ட பிற...










