தமிழக சட்டமன்றத்தில் 2026–27ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றிய நிதியமைச்சர் என். மரிய வில்சன், தவெக அரசின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றான ‘தாய்மாமன் சீர் திட்டம்’ குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, இத்திட்டம் வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது.
தமிழக பாரம்பரிய மரபை போற்றும் வகையில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய்மாமனின் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தை செயல்படுத்த ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அரசு மருத்துவமனைகளில் பிரசவத்தை ஊக்குவிப்பதோடு, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களின் தாய்மையின் மகிழ்ச்சியை கௌரவிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் கொண்டு வரப்படுவதாகவும் நிதியமைச்சர் தெரிவித்தார்.
மேலும், ‘அண்ணனின் சீர் திட்டம்’ கீழ் பெண்களின் திருமண நாளில் 8 கிராம் தங்க நாணயம் மற்றும் ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும் என்றும், அதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.





Leave a Reply