பயணிகளே அலார்ட்: எழும்பூரில் புறநகர் ரயில்கள் இனி கிடையாது?

Home TamilNadu பயணிகளே அலார்ட்: எழும்பூரில் புறநகர் ரயில்கள் இனி கிடையாது?
பயணிகளே அலார்ட்: எழும்பூரில் புறநகர் ரயில்கள் இனி கிடையாது?
Spread the love

இதுகுறித்து தெற்கு ரயில்வே கூறியிருப்பதாவது: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறும் மறுசீரமைப்புப் பணிகளால், வழக்கமாக 10 மற்றும் 11 ஆகிய நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட்டு வரும் புறநகர் ரயில்கள் இயக்கப்படும். வரும் பிப். 20 நள்ளிரவு முதல் ஏப்ரல் 5 வரையில் 5 மற்றும் 6 ஆம் நடைமேடைகளில் இருந்து இயக்கப்பட உள்ளது.

அடுத்த 45 நாள்களுக்கு நடைமேடை மாற்றத்தினால், அதற்கேற்ப ரயில்களின் வருகை மற்றும் புறப்பாடு மாறுபடும் என்பதால் தற்காலிக ரயில் அட்டவணை வெளியிடப்படும் என தெற்கு ரயில்வே இன்று அறிவித்துள்ளது.

இந்த நிலையில், பிப். 20 முதல் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களிலிருந்து சென்னை கடற்கரை வரையில் செல்லும் புறநகர் ரயில்கள் எழும்பூர் ரயில் நிலையத்தின் 5 ஆம் நடைமேடையிலிருந்து அடுத்த 45 நாட்கள் இயக்கப்படவுள்ளன.

இத்துடன், சென்னை கடற்கரையில் இருந்து அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களுக்கு இயக்கப்படும் ரயில்களுக்கான நேர அட்டவணை தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், 45 நாள்களுக்கு சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய இடங்களுக்கு இடையிலான ரயில்களுக்கு ஞாயிற்றுக்கிழமைகளில் தனிநேர அட்டவணைகள் கிடையாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India