பிப் 14 காதலர் தினம்: சூடு பிடிக்கும் ரோஜா பூக்கள் விற்பனை, விவசாயிகள் மகிழ்ச்சி 

Home TamilNadu பிப் 14 காதலர் தினம்: சூடு பிடிக்கும் ரோஜா பூக்கள் விற்பனை, விவசாயிகள் மகிழ்ச்சி 
பிப் 14 காதலர் தினம்: சூடு பிடிக்கும் ரோஜா பூக்கள் விற்பனை, விவசாயிகள் மகிழ்ச்சி 
Spread the love

14-ம் தேதி காதலர் தினக்கொண்டாட்டத்துக்காக ஓசூர் பகுதி ரோஜாவுக்கான உள்நாட்டுவர்த்தகம் களைகட்டியுள்ளது. குறிப்பாக, ஜெய்ப்பூர், டெல்லி, மும்பை மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பல நகரங்களுக்கு ஆன்லைன் வர்த்தகம் மூலம் ஆர்டர் அதிகரித்துள்ளதால், ஓசூர் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தினசரி 10 லட்சம் மலர்களை அனுப்பி வைத்துஉள்ளனர்.

ஓசூர், பெங்களூரு, சென்னை போன்ற பகுதிகளிலிருந்து தாஜ்மஹால் ரோஜா, பட்டர் ரோஜா, சிவப்பு, மஞ்சள், வெள்ளை, டபுள் ஷேடு ரோஜாக்கள் என பல வண்ணங்கள் ரோஜாப் பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளன. 

20, 30 ரூபாய்க்கு விற்பனையான ஒரு ரோஜா பூ தற்போது 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவும் ஒரு ரோஜா கிப்டாக பேக் செய்து விற்பனை செய்தால் 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கட்டு ரோஜா பூ 800 முதல் 1000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

காதலர் தினத்தையொட்டி கோயம்பேடு பூ மார்க்கெட்டுக்கு ஓசூர், பெங்களூரு, ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிகப்பு, மஞ்சள், இளஞ்சிவப்பு, வெள்ளை உள்ளிட்ட பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் விதவிதமாக அதிக அளவில் விற்பனைக்கு குவிந்து உள்ளது. 

இதில் 20 எண்ணிக்கை கொண்ட (ஒரு பஞ்ச்) சிவப்பு ரோஜா- ரூ.450-க்கும், பேபி பிங்க், ஜூமாலியா, வெள்ளை, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிற ரோஜாக்கள் வகைகள் ஒரு பஞ்ச்-ரூ.350-க்கும் விற்பனை ஆகிறது. வெளி மார்க்கெட் மற்றும் வணிக வளாகங்களில் உள்ள கடைகளில் இதன் விலை 2 மடங்கு வரை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India