திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு செவ்வாய்கிழமை ஒத்தி வைப்பு : மதுரை உயர்நீதிமன்றம்

Home TamilNadu திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு செவ்வாய்கிழமை ஒத்தி வைப்பு : மதுரை உயர்நீதிமன்றம்
திருப்பரங்குன்றம் தீபம் வழக்கு செவ்வாய்கிழமை ஒத்தி வைப்பு : மதுரை உயர்நீதிமன்றம்
Spread the love

கார்த்திகை தீபத்தையொட்டி திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்த நிலையில், இரு அமர்வு நீதிபதிகள் வழக்கை விசாரித்து தள்ளுபடி செய்தனர்.

நேற்று மீண்டும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், திருப்பரங்குன்ற மலையில் உள்ள தீபத்தூனில் தீபம் ஏற்றுவதோடு, இன்று காலை 10.30 மணிக்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு இருந்தார்.

ஆனால் திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றாமல் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கை வரும் திங்கட்கிழமை விசாரிப்பதாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று காலை மதுரை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மீதான அவதூறு வழக்கு விசாரணை வந்தது. அப்போது வழக்கை செவ்வாய்க்கிழமை ஒத்தி வைக்க வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொள்வதாக ஒத்தி வைத்துள்ளார். 


Spread the love

Leave a Reply

Your email address will not be published.

× Free India Logo
Welcome! Free India