Spread the love சென்னை மெரினா கடற்கரையில் மெய்சிலிர்க்கும் வகையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை லட்சக் கணக்கான மக்கள் கண்டு களித்தனர். இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள், அரசு...

டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பேரன்… பின்னணி என்ன?
Spread the love 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், ”கடந்த 2004 ல் தனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 2005 ஆம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி...

”அதே திரைக்கதை… அதே வசனம்… கேட்டால், போலி விவரம்” – ராமதாஸ் காட்டம்!
Spread the love இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் இன்னொருவருக்கு வழங்கப்பட்ட அரைகுறையான, மோசடியான விவரங்களை வழங்கி திமுக அரசு ஏமாற்றியிருக்கிறது. ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாமலேயே வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுவிட்டது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்றது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. திமுக அரசின் சமூக நீதி மோசடி...

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை – திருத்தணி சோகம்
Spread the love திருத்தணியில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி சித்தூர் சாலையில் கமலா திரையரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், இவருக்கு மனைவி 4 மகள்கள், 1 மகன் உள்ளனர். மூத்த மகள் கலைசெல்விக்கு 18 வயதாகிறது. அவர் திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை, மணிகண்டன் அவரது மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகன் என...

மத நல்லிணக்கம்: தர்காவில் ஆடுகளை பலியிட்டு விருந்து படைத்த இந்துக்கள்
Spread the love சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே சீவலாதி கிராமத்தில் அமைந்துள்ளது கண்டுமேக்கியார் தர்கா. இந்த தர்கா 500 ஆண்டுகள் பழமையானது. இப்பகுதியில் உள்ள இந்துக்களும் இசுலாமியர்களும் மத நல்லிணக்கத்தோடு தோழமை உறவுடன் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கண்டுமேக்கியார் தர்காவில் இசுலாமியர்களும் இந்துக்களும் ஒன்றிணைந்து 100க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு தர்காவில் மல்லிகைப்பூ,பொறி ஆகிய பூஜைப் பொருட்களைக் கொண்டு உலக ஒற்றுமைக்காக வழிபட்டனர். வழிபாடு முடிந்த பின்னர் தர்காவின் வாசலில் சுடச் சுட சமையல் செய்து பட்டை ஓலையில் கறிசோறு வைத்து வழிபட்டனர்....

கீழடி 10 கட்ட அகழாய்வு : சுடுமண் தொட்டி கண்டெடுப்பு
Spread the love சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி தொல்லியல் களம் வரலாற்றுப் பொக்கிஷமாகப் பார்க்கப்படுகிறது. நகர நாகரிகம் தமிழகத்தில் தோன்றவில்லை என்கிற கருத்துக்கு மாறாக,சுமார் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய வைகைக் கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கீழடி அகழாய்வில் கிடைத்துள்ளன. கீழடியில் தோண்டத் தோண்ட பழங்கால பொருட்கள் நிறைய கண்டெடுக்கப்பட்டுள்ளன. தற்போது தமிழகத் தொல்லியல் துறை மூலம் கீழடியில் 10ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஜூன் 18ம் தேதி முதல் துவங்கிய பணியில் தொல்லியல் துறை...

வள்ளலார் பிறந்தநாள்: ‘காருண்யா’ தினமாக கொண்டாடப்படும் – அமைச்சர் சேகர்பாபு!
Spread the love வள்ளலாரின் 201 ஆவ்து பிறந்தநாளை இன்று கொண்டாடப்படுகிறது. அதை ஒட்டி வள்ளலார் தெய்வ நிலையத்தில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு, வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கலந்து கொண்டனர். அப்போது சன்மார்க்க கொடியேற்றி அகவல் பாராயணம் குறித்து நூல்கள் வெளியிடப்பட்டன. பின்பு செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு, ”வள்ளலார் பிறந்த தினத்தை காருண்ய தினமாக முதல்வர் அறிவித்துள்ளார். வாழும் வள்ளலாராக உள்ள தமிழக முதல்வர், வள்ளலாரின்...

மீண்டும் கூடும் திமுக ஒருங்கிணைப்புக் குழு!
Spread the love திமுகவின் ஒருங்கிணைப்பு குழு ஆலோசனைக் கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலத்தில் இன்று காலை 10.30 மணியளவில் நடைபெறுகிறது. திமுகவில் அமைப்பு ரீதியாக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து துணைத் முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு எ.வ.வேலு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, ஆகிய ஐவர் அடங்கிய குழு திமுகவில் உள்ள பல்வேறு அணிகளுடன் ஆலோசனை நடத்தி வந்தது. இந்நிலையில் இன்று மேலும் பல்வேறு அணிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. நேற்று முன்தினம், திமுகவில் உள்ள...

கார் பந்தயம் நடத்திய திமுக அரசால் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாதா? – எடப்பாடி கண்டனம்
Spread the love தமிழ்நாடு பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வரும் அதிகாரிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள் என 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு செப்டம்பர் மாதத்துக்கான சம்பளம் இன்னும் வழங்கப்படாமல் காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசு நிதி ஒதுக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் (சமக்ரா சிக்ஷா) கீழ் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு மத்திய அரசு சார்பில் நிதி வழங்கப்பட வேண்டும். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறைக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய 573 கோடி ரூபாய் நிதி...

10 ரூபாய் பிரியாணி.. புரட்டாசி விரதத்தை தூக்கி எறிந்த மக்கள்…!
Spread the love புரட்டாசி மாதத்தை முன்னிட்டு பெருமாளுக்கு விரதம் இருப்பது வழக்கமான ஒன்றாக இருந்துவருகிறது. இந்த மாதம் முழுவதும் பெருமாளுக்காக அசைவம் எதுவும் எடுத்துக் கொள்ளாமல், சைவ உணவுகளை மட்டும் உட்கொள்வர். இந்தாண்டு புரட்டாசி மாதம் தொடங்குவதற்கு முன்பே லட்டு பிரச்னை உருவாகி பக்தர்களை அதிர்ச்சியடைய செய்தது. அதனை மீறியும் புரட்டாசி விரதம் இருந்துவருகின்றனர். இந்நிலையில் காலை திறப்பு விழா முடிந்த பின்பு, 10 ரூபாய் பிரியாணி வாங்குவதற்காக பொதுமக்கள் காலையிலிருந்து அருகில் காத்துக் கொண்டிருந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் மணிகூண்டு அருகே...

