Spread the love The story so far: On April 11, a nearly 10-year-old Socio-Economic and Educational Survey (popularly called the Caste Census) prepared by the Karnataka State Commission for Backward Classes was dusted off and accepted by the Chief Minister Siddaramaiah-led Cabinet. Two days prior, the listing of the Caste Census in the Cabinet’s agenda for discussion had surprised many....

இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர்- மத்திய அரசுக்கு தமிழக விவசாயிகள் முக்கிய கோரிக்கை
Spread the love இந்தியா – அமெரிக்கா இடையே விரிவடைந்த வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கான பேச்சு வார்த்தைக்கு இந்தியாவிற்கு அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வேன்ஸ் 4 நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். இந்நிலையில் இந்தியா – அமெரிக்காவுடன் ஏற்படுத்த உள்ள வர்த்தக ஒப்பந்தத்தில் வேளாண்மை துறை சேர்க்கப்படாது என்பதை இந்தியா உறுதியுடன் தெரிவிக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம் பின்வருமாறு- “வெளிநாடுகளுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களிலும், இரு தரப்பு ஒப்பந்தங்களிலும்...

தமிழக அரசின் சிறந்த திருநங்கை விருது.. நடப்பாண்டு வென்றவர்கள் யார்?
Spread the love தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (15.4.2025) தலைமைச் செயலகத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் 2025-ஆம் ஆண்டிற்கான “சிறந்த திருநங்கை விருதினை” நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை ரேவதி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பொன்னி ஆகியோருக்கு திருநங்கைகளின் நலனுக்காக அவர்கள் ஆற்றிய சிறந்த சேவையைப் பாராட்டி வழங்கினார். தமிழ்நாடு அரசு திருநங்கைகளின் வாழ்வாதார மேம்பாட்டிற்காக பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில் அவற்றில் குறிப்பிடத்தக்க முன்முயற்சியாகவும். அவர்களை சமூகத்தின் முக்கிய பங்களிப்பாளர்களாக அங்கீகரித்து...

கர்நாடக மாநிலத்தில் லாரி ஸ்ட்ரைக்: காய்கறி விலை உயரும் அபாயம்!
Spread the love தமிழகத்திலிருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களுக்கு ஆடைகள், வெல்லம், ஜவ்வரிசி, மஞ்சள், முட்டை உள்ளிட்ட பொருள்கள் கொண்டு செல்லப்படுகிறது. அதேப்போல வடமாநிலங்களில் இருந்து கர்நாடக மாநிலம் வழியாக தமிழ்நாட்டுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான லாரிகளில் மக்காசோளம், பருப்பு, பூண்டு,வெங்காயம், எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் கொண்டு வரப்படுகிறது. லாரி வேலை நிறுத்ததால் இந்த பொருள்களின் வரத்து பாதிக்கப்படும் என கூறப்படுகிறது. அதே போல கர்நாடக மாநிலத்தின் பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சென்னை உள்ளிட்ட...

என்ன மனுசன்யா..மறைந்த பெற்றோர்,மனைவிக்கு கோயில் கட்டிய மதுரை முத்து!
Spread the love மதுரையை பூர்விகமாக கொண்ட சின்னத்திரை நகைச்சுவை கலைஞரும், நகைச்சுவை பட்டிமன்ற நடுவருமான மதுரை முத்து அடிக்கும் ஜோக்குகளுக்கென தனி ரசிகர் பட்டாளம் தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ளனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அரசபட்டி கிராமத்தில் மதுரை முத்து, மறைந்த தனது தாய், தந்தை மற்றும் மனைவி அவர்களுக்கு மார்பளவு உருவ சிலை அமைத்து கோவில் ஒன்றை பிரதிஷ்டை செய்திருக்கிறார். அதிகாலையில் வழக்கம் போல யாகங்கள் வளர்க்கப்பட்டன. மதுரை முத்துவுடன் இணைந்து சின்னத்திரையில் அசத்தி வரும் பல்வேறு நகைச்சுவை...

ரீல்ஸ் எடுப்பதில் தான் ரயில்வே அமைச்சரின் கவனம் இருக்கு.. மாணிக்கம் தாகூர் எம்.பி பேட்டி
Spread the love திருநகரிலுள்ள கட்சி அலுவலகத்தில் விருதநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை இன்று சந்தித்தார். அவர் கூறியதாவது, “சமீபத்தில் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு மிக வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது. அதில் ”நியாயப்பாதை” என்ற தலைப்பில் பல்வெறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் குறிப்பாக தனியார் கல்வி நிலையங்களில் அரசியல் சாசனம் 15 (5) வது பிரிவுகளின் கீழ் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் மாணவர்களுக்கு உரிய இடம் கொடுக்க மோடி தலைமையிலான அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தெலுங்கானாவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு...

வீடற்ற பெண்ணின் கோரிக்கை: 6 மாதத்தில் தீர்வு கண்ட அமைச்சர் தங்கம் தென்னரசு
Spread the love விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியத்தில் அமைந்துள்ள வேலாயுதபுரம் கிராமத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தமிழ்நாடு நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கலந்து கொண்டார். அப்போது, அப்பகுதியில் வசித்துவரும் ராணி என்பவர் தான் வசித்து வரும் வீடு மிகவும் சேதமடைந்து உள்ளதால் தனக்கு உதவும்படி அமைச்சரிடம் கோரிக்கை வைத்தார். இதையடுத்து, அவரது வீட்டிற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மேற்கூரையில் போடப்பட்டுள்ள ஓடுகள் இறங்கியிருப்பதால் மழைக்காலங்களில் தண்ணீர்...

Gold price today: தலை சுற்ற வைக்கும் தங்கம் விலை.. ரூ.70 ஆயிரத்தை தாண்டியது!
Spread the love கடந்த ஓரிரு மாதமாகவே தங்கத்தின் விலையானது இதுவரை இல்லாத அளவில் கிடுகிடுவென உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இதனிடையே கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு அதாவது ஏப்ரல் 8 ஆம் தேதி கிராமுக்கு ரூ.8,225 ஆக இருந்த தங்கவிலை சட்டென்று உயர்ந்து ரூ.8770-ஐ இன்று நெருங்கியுள்ளது. இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான். இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில்...

எகிறும் தங்கம் விலை.. மஞ்சள் கொம்பில் தாலி செய்து அசத்திய பொற் கொல்லர்!
Spread the love இந்திய பங்குச் சந்தைகள் எல்லாம் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியினை சந்தித்து வரும் நிலையில், முதலீட்டாளருக்கு வருமானத்தையும், நிம்மதியையும் தரும் ஒரே விஷயமாக இருப்பது தங்கம் தான். இந்தியாவில் குறிப்பாக தென் இந்தியாவில் தங்கத்தில் முதலீடு செய்யும் பழக்கம் பெண்களிடத்தில் அதிகமாக உள்ளது என்கிறது புள்ளி விவரங்கள். கடந்த ஒரிரு மாதங்களாகவே விண்ணை முட்டும் அளவிற்கு தங்கத்தின் விலை ஏறி வருகிறது. இன்று காலை வர்த்தகம் தொடங்கியவுடன் கிராமுக்கு ரூ.150 வரை தங்கத்தின் விலை ஏறியது. இன்றைய தினம் ஒரு கிராம்...

நீதிமன்றத்திற்கு வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர்.. அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் போட்ட ஆர்டர்
Spread the love போக்குவரத்து துறையில் அரசு வேலை வாங்கி தருவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி பண மோசடியில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் அவருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கின் அடிப்படையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆண்டு அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கில்...
