Spread the love திமுக அரசை கண்டித்து வருகிற ஒன்பதாம் தேதி மதுரையில் அதிமுக ஜெயலலிதா பேரவை சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. டி.குண்ணத்தூர் அம்மா கோவிலில் இளைஞர்களுக்கு பயிற்சி முகாம் 4 வது நாளாக நடைபெற்றது. இதில் சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைதலைவர் ஆர்.பி. உதயகுமார் பங்கேற்றார். பயிற்சி முகாமில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது, “கடந்த 40 மாதம் திமுக ஆட்சியில் ஆட்சி என்ற பெயரில் அலங்கோலம் தான் நடைபெற்று வருகிறது. ”100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தை கூட மக்களுக்கு வழங்க முடியாத...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – தவெக இடையே மோதல்..நாகையில் உச்சக்கட்ட பரபரப்பு..
Spread the love நாகை அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக வெற்றி கழகம் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பெருகடம்பனூர், கீழ்வேளூர், ஓர்குடி உள்ளிட்ட மாவட்டத்தின் சுற்றுவட்டார கிராமங்களில் இன்று கொடியேற்ற நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் பெருங்கடம்பனூர் ஊராட்சியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் அருகே கொடியேற்றுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிய வருகிறது. இதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனால் இரு தரப்பினர் இடையே...

போராட்டத்தில் குதித்த ஊழியர்கள்..பேச்சுவார்த்தைக்கு இறங்கிய அமைச்சர்
Spread the love சாம்சங் நிறுவன ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அந்த நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா பேச்சுவார்த்தை நடத்தினார். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், அதிக சம்பளம், பணிநேரம் குறைப்பு மற்றும் ஆலையில் சங்கத்திற்கான அங்கீகாரம் ஆகியவற்றை வலியுறுத்தி கடந்த 9ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சாம்சங் நிறுவன அதிகாரிகளுடன் அமைச்சர் டி.ஆர்.பி ராஜா, பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில், சாம்சங்...

சென்னையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு
Spread the love சென்னையில் எழும்பூர் ரமடா ஓட்டலில் இருந்து ராஜரத்தினம் மைதானம் வரை நடைபெற்ற அணிவகுப்பில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கடந்த 23ஆம் தேதி வழக்கு விசாரணை வந்தபோது அரசு தரப்பில் அணி வகுப்புக்கு அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் அளித்த மனுக்களை, பரிசீலித்து வருவதாகவும், செப்டம்பர் 29ஆம் தேதிக்குள் முடிவெடுத்து தெரிவிக்கப்படும் என்றார்....

வான் சாகச நிகழ்ச்சி – முதியவர் உயிரிழப்பு
Spread the love சென்னையில் வான் சாகச நிகழ்ச்சியை பார்க்க வந்த முதியவர் ஒருவர் வெயில் தாக்கம் காரணமாக உயிரிழப்பு இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் லட்சக் கணக்கான...

வான் சாகத்தை காண மெரினாவில் குவிந்த மக்கள்… கடல் அலையை மிஞ்சிய மக்கள் அலை
Spread the love சென்னை மெரினா கடற்கரையில் விமானப்படையின் வான் சாகத்தை காண லட்சக் கணக்கான மக்கள் குவிந்ததால் கமராஜர் சாலை, அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது...

இந்திய விமானப்படை சார்பில் மெரினாவில் நடந்த சாகச நிகழ்ச்சியின் ஹைலைட்ஸ்!
Spread the love சென்னை மெரினா கடற்கரையில் மெய்சிலிர்க்கும் வகையில் இந்திய விமானப்படையின் சாகச நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை லட்சக் கணக்கான மக்கள் கண்டு களித்தனர். இந்திய விமானப்படை தொடங்கப்பட்டு 92 ஆண்டுகள் நிறைவடைந்து 93 ஆம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதைக் கொண்டாடும் வகையில், சென்னையில் இன்று மிகப் பிரமாண்ட விமான வான் சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது. மெரினா கடற்கரையில் காலை 11 மணிக்கு தொடங்கியது. இந்நிகழ்ச்சியை காண முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள், அரசு...

டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எம்.எஸ்.சுப்புலட்சுமி பேரன்… பின்னணி என்ன?
Spread the love 2024ம் ஆண்டுக்கான சங்கீத கலாநிதி எம்எஸ் சுப்புலட்சுமி விருதை பாடகர் டி.எம்.கிருஷ்ணாவுக்கு வழங்க கூடாது என கர்நாடக இசைப் பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் பேரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மறைந்த கர்நாடக இசை பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமியின் பேரன் சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள சிவில் வழக்கில், ”கடந்த 2004 ல் தனது பாட்டியின் மறைவுக்குப் பிறகு மியூசிக் அகாடமி, ஆங்கில நாளிதழுடன் இணைந்து, 2005 ஆம் ஆண்டு முதல் அவரது நினைவை போற்றும் வகையில் சங்கீத கலாநிதி எம்.எஸ்.சுப்புலட்சுமி...

”அதே திரைக்கதை… அதே வசனம்… கேட்டால், போலி விவரம்” – ராமதாஸ் காட்டம்!
Spread the love இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் ஒவ்வொரு சமூகத்திற்கும் எவ்வளவு பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டிருக்கிறது என்று தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரப்பட்ட விவரங்களுக்கு, இரு மாதங்களுக்கு முன் இன்னொருவருக்கு வழங்கப்பட்ட அரைகுறையான, மோசடியான விவரங்களை வழங்கி திமுக அரசு ஏமாற்றியிருக்கிறது. ஆதாரப்பூர்வமான புள்ளிவிவரங்கள் எதுவும் இல்லாமலேயே வன்னியர்களுக்கு 10.50%க்கும் கூடுதலான பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டுவிட்டது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்த திமுக அரசு முயன்றது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. திமுக அரசின் சமூக நீதி மோசடி...

கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை – திருத்தணி சோகம்
Spread the love திருத்தணியில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருத்தணி சித்தூர் சாலையில் கமலா திரையரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன், இவருக்கு மனைவி 4 மகள்கள், 1 மகன் உள்ளனர். மூத்த மகள் கலைசெல்விக்கு 18 வயதாகிறது. அவர் திருவள்ளூரில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று காலை, மணிகண்டன் அவரது மனைவி, மூன்று மகள்கள், ஒரு மகன் என...

