சென்னை அருகே ரயில் விபத்து: விசாரணைக்கு உத்தரவிட்ட தெற்கு ரயில்வே! 

சென்னை அருகே ரயில் விபத்து: விசாரணைக்கு உத்தரவிட்ட தெற்கு ரயில்வே! 

Spread the love      மைசூரில் இருந்து சென்னை வழியே பீஹார் செல்லும் தர்பாங்கா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு பெரம்பூர் ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஏழு முப்பது மணி அளவில் புறப்பட்டு பிஹார் நோக்கி சென்று கொண்டிருந்தது. 22 பெட்டிகளைக் கொண்ட இந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு செய்யும் பெட்டிகளில் சுமார் 1300க்கும் மேற்பட்ட பயணிகளும், முன்பதிவு இல்லாத இரண்டு பெட்டிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட பயணிகள் என 1500க்கும் மேற்பட்ட பயணிகள் இந்த ரயிலில் பயணித்துள்ளனர். பொன்னேரி ரயில் நிலையத்தை கடந்து கவரைப்பேட்டை ரயில்...

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சாச்சனா என்ட்ரி – ரசிகர்கள் உற்சாகம் 

பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சாச்சனா என்ட்ரி – ரசிகர்கள் உற்சாகம் 

Spread the love      பிக்பாஸ் சீசன் 8 தொடங்கி விறுவிறுப்பாகப் போய்க் கொண்டிருக்கிறது. 7 சீசன்கள் வரையிலும் இதன் நெறியாளராக இருந்த கமல்ஹாசன் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகவே, அடுத்து விஜய் சேதுபதி நெறியாளராக கொண்டு வரப்பட்டுள்ளார். கமல்ஹாசன் அளவுக்கு இவரால் நெறியாள்கை செய்ய முடியுமா என்கிற கேள்விகளோடு முதல் எப்பிசோட் பார்த்தவர்களுக்கு இனிய அதிர்ச்சி கொடுத்தார் விஜய் சேதுபதி. இறங்கிய பால் எல்லாம் சிக்ஸர்களாக வெளுத்து வாங்கினார்.  விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்திருந்த சாச்சனாவும் ஒரு போட்டியாளராக...

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு.. வெண்ணிலா ஐஸ்கிரீம் விலை எவ்வளவு தெரியுமா?

ஆவின் ஐஸ்கிரீம் விலை உயர்வு.. வெண்ணிலா ஐஸ்கிரீம் விலை எவ்வளவு தெரியுமா?

Spread the love      ஆவின் நிறுவனத்தின் மூலம் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையிலான ஐஸ்கிரீம்களின் விலை 3 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது . ஐஸ்கிரீம் பிடிக்காத மனிதர்கள் யாரேனும் இருக்கிறார்களா என்பது ஆச்சர்யமே. அதுவும் தமிழ்நாட்டில் வெயிலாக இருந்தாலும் சரி, குளிராக இருந்தாலும் சரி. பலரும் விரும்பிச் சாப்பிடுபது ஐஸ்கிரீமைத்தான். அதுவும் தமிழ்நாட்டு மக்களில் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் தரத்திலும், விலையிலும் நம்பி ஐஸ்கிரீமை வாங்குமிடம் என்றால் அது ஆவினில் தான். ஆவின் ஐஸ்கிரீம்களின் சுவையும் தனித்துவமானதே. அப்படி அனைவரும்...

கோயில் நில மோசடி… காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனுக்கு காப்பு!

கோயில் நில மோசடி… காரைக்கால் துணை ஆட்சியர் ஜான்சனுக்கு காப்பு!

Spread the love      புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் கோவில்பத்து வருவாய் கிராமத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபார்வதீஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.  கோயில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான நிலத்தை  பொலிவுறு நகர திட்டத்திற்காக சுற்றுலாத் துறைக்கும், இந்திய எரிவாயு ஆணையத்திற்கும் வழங்குவது ஒரு போலியான அரசாணை சமூக வலை தளங்களில் பரவியது.  அந்த போலி அரசாணையில் தனது கையெழுத்தை மோசடியாகப் பயன்படுத்தி இருப்பதாகக் கூறி காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன், நகர காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்தச்சூழலில், நில மோசடியில் அரசு அதிகாரிகள் முதல் அரசியல்வாதிகள்...

ரீல்ஸ் பார்த்தபடி ட்ரைவிங்… அசால்ட்டாக டியூட்டி பார்த்த ஓட்டுநர்… ரியல் ஆக்ஷனில் இறங்கிய அரசு

ரீல்ஸ் பார்த்தபடி ட்ரைவிங்… அசால்ட்டாக டியூட்டி பார்த்த ஓட்டுநர்… ரியல் ஆக்ஷனில் இறங்கிய அரசு

Spread the love      ரீல்ஸ் பார்த்துக்கொண்டே அரசு பேருந்தை ஓட்டிய பேருந்து ஓட்டுநர் மீது நடவடிக்கை பாய்ந்துள்ளது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை உள்பட தொடர் விடுமுறை தினத்தை முன்னிட்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டன. போதுமான ஓட்டுநர்கள் இல்லாத நிலையில் தற்காலிக ஓட்டுநர்களைப் பயன்படுத்தி இந்த பேருந்துகள் இயக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி கூடுதலாக விடப்பட்ட அரசு விரைவுப் பேருந்து ஒன்று திருப்பதியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை மாதவரத்தை நோக்கி வந்துள்ளது. பேருந்தில் அதிக...

கிடுகிடுவென உயரும் தங்கம் விலை.. எட்டிபிடிக்க முடியாமல் தவிக்கும் நடுத்தர மக்கள்!

கிடுகிடுவென உயரும் தங்கம் விலை.. எட்டிபிடிக்க முடியாமல் தவிக்கும் நடுத்தர மக்கள்!

Spread the love      தங்கத்தின் விலை தினசரியும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒருசவரன் தங்கத்தின் விலையானது இன்று (அக்டோபர் 11) ரூ. 56,760 ஆக உயர்ந்துள்ளது. விரைவில் ஒரு சவரன் தங்கம் 60,000 ரூபாயை எட்ட உள்ளதால் நகை வாங்குவோர் கலக்கமடைந்துள்ளனர். தங்கத்தின் விலை உயர்வுக்கு காரணம் என்ன என்று பொருளாதார நிபுணர்கள் சொல்வதை பார்க்கலாம்.  இந்த ஆண்டு மார்ச் மாதம் தங்கம் விலை உச்சத்தை தொட்டது. இதனால் நடுத்தர மக்களால் ஒரு குண்டுமணி தங்கம் கூட வாங்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த ஜூலை...

ஷூ காலால் மிதித்து இளைஞர் கொலை… உடற்கூறாய்வு முடிவில் பகீர்.. சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் 2 பேர் கைது

ஷூ காலால் மிதித்து இளைஞர் கொலை… உடற்கூறாய்வு முடிவில் பகீர்.. சி.ஐ.எஸ்.எப் வீரர்கள் 2 பேர் கைது

Spread the love      கஷ்டப்பட்டு சடலத்தை தூக்கிச் செல்லும் சி.ஐ.எஸ்.எப் வீரர்களான இவர்கள் தான், அந்த நபரையே கொலை செய்ததாக 4 மாதங்களுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். கடலூர் மாவட்டம் நெய்வேலி என்.எல்.சி சுரங்கம் ஒன்று, மண்மேட்டில் கடந்த நான்கு மாதம் முன்பு இளைஞர் ஒருவரின் சடலம் கிடப்பதாகக் கூறி அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் இருவர் அதனை அப்புறப்படுத்தி, சாலையில் எடுத்துவந்து போட்டனர். நெய்வேலி தெர்மல் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் சடலமாகக் கிடந்தவர் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த சிவசங்கரன்...

தொடர் விடுமுறை – சொந்த ஊர்களுக்குப் படையெடுத்த மக்கள்

தொடர் விடுமுறை – சொந்த ஊர்களுக்குப் படையெடுத்த மக்கள்

Spread the love      தொடர் விடுமுறையை ஒட்டி சென்னையில் இருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்குப்  படையெடுத்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி பண்டிகை மற்றும் வார விடுமுறை என 3 நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குப் படையெடுத்துள்ளனர். சென்னை போரூர் சுங்கச்சாவடி அருகே மதுரவாயல் – தாம்பரம் சாலையில் போக்குவரத்து நெரிசல் காரணமாக ஏராளமான வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன. அத்துடன் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்குவதற்கும் பொதுமக்கள் சென்றதால் மதுரவாயல்,...

"தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளா்களுக்கும் வாழ்த்துகள்" ஆயுத பூஜைக்கு தலைவர்களின் வாழ்த்து

"தொழில் நிறுவனங்களுக்கும், தொழிலாளா்களுக்கும் வாழ்த்துகள்" ஆயுத பூஜைக்கு தலைவர்களின் வாழ்த்து

Spread the love      ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவா்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், நவராத்திரி விழாவின் இறுதியில், ஒன்பதாவது நாளான ஆயுத பூஜை மற்றும் பத்தாவது நாளான விஜயதசமி திருநாளை பக்தியுடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் உளங்கனிந்த நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளார். மக்கள் அனைவரும் கல்வியிலும், செல்வத்திலும், துணிவிலும் சிறந்து விளங்கவும், அன்னை பராசக்தியைப் போற்றி வணங்குகிறேன் என கூறியுள்ளார்.  முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீா்செல்வம் வெளியிட்டுள்ள...

முரசொலி செல்வம் மறைவு: கண்ணீர் விட்டு அழுத முதல்வர்- நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் 

முரசொலி செல்வம் மறைவு: கண்ணீர் விட்டு அழுத முதல்வர்- நேரில் அஞ்சலி செலுத்திய பிரபலங்கள் 

Spread the love      மறைந்த முரசொலி செல்வத்தின் உடலை பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.  முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மருமகன் முரசொலி செல்வம்(84)இன்று காலமானார். பெங்களூரு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் சென்னை கோபாலபுரத்திற்கு முரசொலி செல்வத்தின் உடல் கொண்டுவரப்பட்டு அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள முரசொலி செல்வத்தின் உடலைப் பார்த்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதைத்தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அஞ்சலி...

× Free India Logo
Welcome! Free India