Spread the love ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையை சென்னை காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. சுமார் 5 ஆயிரம் பக்கம் கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில், 30 பேரின் பெயர்கள் முக்கிய நபர்களாக இடம்பெற்றுள்ளன. அதில் முதல் குற்றவாளியாக ரவுடி நாகேந்திரனும், 2-வது குற்றவாளியாக சம்போ செந்திலும் சேர்க்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். முன் பகையே ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு முக்கிய காரணம் என்று குற்றப்பத்திரிகையில் போலீசார் தெரிவித்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலுக்கும் கொல்லப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கிற்கும் என்ன பகை என்பதனை போலீசார் தெரிவித்துள்ளனர். ...

திடீரென ரத்தான 10 விமானங்கள்… சென்னை விமான நிலையத்தில் நடந்தது என்ன?
Spread the love சென்னையில் இருந்து இன்று காலை 7.45 மணிக்கு அந்தமான் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், காலை 11.20 மணிக்கு இலங்கை செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.20 மணிக்கு, பெங்களூர் செல்லும் ஏர் இந்தியா விமானம், பகல் 1.40 மணிக்கு பெங்களூர் செல்லும் ஆகாஷா ஏர்லைன்ஸ் விமானம், மாலை 3.25 மணிக்கு, மும்பை செல்லும் ஏர் இந்தியா பயணிகள் விமானம், ஆகிய 5 புறப்பாடு விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. அதைப்போல் இன்று காலை 7.05 மணிக்கு, சென்னைக்கு...

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான 4 முக்கிய காரணங்கள்… தாக்கலான குற்றப்பத்திரிக்கை.. !
Spread the love கடந்த ஜூலை மாதம் 5 ஆம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இக்கொலைக்கு பின்னால் யார் இருக்கிறார்கள் என்று விசாரணை தீவிரமாக தொடங்கிய நிலையில்,. முதலில் மறைந்த ஆற்காடு சுரேஷின் கொலைக்கு பழியாக நடந்ததாகவும், அதன் பின்னர் ஆருத்ரா கோல்ட் மோசடி விவகாரம் என தொடர்ச்சியாக பல்வேறு தகவல்கள் வெளியாகின. சென்னை தனிப்படையினர் ஆர்ம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக வழக்கு பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து முக்கிய ரவுடிகளான நாகேந்திரன்,...

நரிக்குறவ இன பெண் மீது சரமாரி தாக்குதல் – சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சி
Spread the love வீட்டு வாசலில் அமர்ந்து பானி பூரி சாப்பிட்ட நரிக்குறவ இன பெண் மீது ஒருவர் அரிசி மூட்டையை மேலே போட்டு கட்டையால் சரமாரியாக தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அருகே போரூர் அடுத்த மதனந்தபுரம் மாதா நகர் மெயின்ரோடு பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த ஊசி பாசி விற்கும் பெண்கள் கடையில் பானி பூரி வாங்கி அங்கு இருந்த ஒரு வீட்டின் வாசலில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர...

மதுக்கடைகளை மூடுவதில் என்ன பிரச்னை? – சீமான் கேள்வி
Spread the love ம.பொ.சிவஞானம் அவர்களின் 29ஆவது நினைவு நாளை முன்னிட்டு சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மது ஒழிப்பு மாநாடு குறித்தும் மது ஒப்புக்கான ஆளும் அரசின் நடவடிக்கை குறித்தும் கேள்விகள் முன் வைக்கப்பட்டன. அதற்கு பதிலளித்த சீமான், “மாநிலங்களின் நிதி தான் மத்திய அரசின் நிதி. இந்தியாவின் நிதி வருவாயில்...

கார் பந்தயத்திற்கு இருக்கிறது; ஆசிரியர்களுக்கு இல்லையா?- திமுகவுக்கு இபிஎஸ் கேள்வி
Spread the love கார் பந்தயத்திற்கு கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்த திமுக அரசு, மத்திய அரசு நிதி வரவில்லை என்ற காரணம் கூறி ஆசிரியர்களுக்கு சென்ற மாதத்திற்கான சம்பளம் வழங்காதது கண்டனத்திற்குரியது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளப்பக்கத்தில், “ஒருங்கிணைந்த கல்வி திட்டத்திற்கான மத்திய அரசின் நிதி பள்ளிக் கல்வித்துறைக்கு வரவில்லை என்ற காரணம் கூறி நிரந்தர ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் பகுதிநேர ஆசிரியர்கள் என்று...

மதுரை துணை மேயர் மீது வழக்குப்பதிவு- மூதாட்டி கொடுத்த புகாரில் நடவடிக்கை
Spread the love மூதாட்டியை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரில் மதுரை துணை மேயர் மற்றும் அவரது சகோதரர் உள்ளிட்ட 5 பேர் மீது ஆறு பிரிவுகளின் கீழ் ஜெய்ஹிந்த்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரம் 2வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த வசந்தா. இவருக்கு ஒரு ஆண் மற்றும் 5 பெண் பிள்ளைகள் என ஆறு பிள்ளைகளுடன் இருந்து வருகிறார். இவரது மகன் முருகானந்தம் அதே பகுதியில் வீட்டின் அருகிலயே சலூன் கடை வைத்து நடத்தி வருகிறார்.இந்நிலையில் வசந்தா கடந்த...

ரூ.10 கோடியில் மாறப்போகும் அய்யப்பன் தாங்கல் பஸ் ஸ்டாண்ட்- திடீர் விசிட் அடித்த அமைச்சர்கள்
Spread the love ரூ.10 கோடி மதிப்பீட்டில் அய்யப்பன்தாங்கல் பேருந்து நிலையம் அமைப்பது குறித்து அமைச்சர் திடீர் ஆய்வு மேற்கொண்டார். சென்னையின் முக்கிய நுழைவாயிலாக இருந்து வருவது அய்யப்பன்தாங்கல். இந்த பகுதியில் அரசு போக்குவரத்து பணிமனை செயல்பட்டு வரும் நிலையில், தினம்தோறும் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு அரசு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது. இங்கு போதிய வசதிகள் இல்லாத காரணத்தால் சி.எம்.டி.ஏ. நிதியின் கீழ் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 12 பேருந்துகள் நிறுத்தும் அளவிற்கு பெரிய அளவிற்கு பேருந்து நிலையம் அமைப்பது குறித்து இந்து...

நீதிமன்ற உத்தரவை மதிப்பதில்லை- சென்னை மாநகராட்சி செயலுக்கு வலுக்கும் எதிர்ப்பு
Spread the love உயர்நீதிமன்ற உத்தரவை மீறி மனிதர்களை சாக்கடை நிறைந்த கால்வாயில் இறக்கி, எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தி வரும் சென்னை மாநகராட்சி அதிகாரிகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் சென்னை மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சென்னை மாநகராட்சி 15-வது மண்டலத்துக்குட்பட்ட சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் செல்லும் செம்மொழி பிரதான சாலையில் உள்ள தனியார் கல்லூரி எதிரே கால்வாயில் சுத்தம் செய்யும் பணி...

‘ரஜினிகாந்த் நலம் பெற வேண்டும்’- மனமுருகி வேண்டிய மகள் செளந்தர்யா
Spread the love சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு கடந்த 10 நாட்களுக்கு மேலாக உடல்நல பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு சிறுநீர் கழிப்பதில் பிரச்னை இருந்து வந்ததாகவும், ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இதைத்தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அறுவை சிகிச்சை இன்றி ரத்த நாளத்தில் ஸ்டென்ட் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதையடுத்து, மருத்துவக்குழுவின் தீவிர மருத்துவ கண்காணிப்பில் ரஜினிகாந்த் உள்ளார். மேலும்...

