Spread the love சென்னையில் விதிகளை மீறி பட்டாசு வெடித்ததாக 345 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர காவல்துறை தகவல். தமிழ்நாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், புதுமண தம்பதிகள் தங்கள் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வந்தனர் தீபாவளியான நேற்று சென்னையில், காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை...

சாலை விபத்தில் உயிரிழந்த நடிகரின் மகன்.. தீபாவளியில் நடந்த துயரம்
Spread the love வேளச்சேரி -தரமணி சாலை அருகே கார் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதிய விபத்தில் இளைஞர் ஒருவர் பலி. இருவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி. சென்னை ஆர்.ஏ புரம் ஸ்ரீ காலனி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கார்த்திக்.இவரது மகன் நித்தீஷ் ஆதித்யா (21) இன்று அதிகாலை 2 மணியளவில் தனது நண்பர்கள் ஜெயகிருஷ்ணண் மற்றும் வெங்கட் ஆகியோருடன் தீபாவளி கொண்டாட்டம் முடித்து விட்டு காரில் வேளச்சேரி – தரமணி சாலை வழியாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்....

டன் கணக்கில் குவிந்த பட்டாசு குப்பைகள்…அகற்ற தூய்மைப் பணியாளர்கள் தீவிரம்
Spread the love சென்னையில் டன் கணக்கில் குவிந்த பட்டாசு குப்பைகளை அப்புறப்படுத்தும் பணியில் தூய்மைப் பணியாளர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தமிழ்நாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை புத்தாடை அணிந்து, கோவில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி, இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும், தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். மேலும், புதுமண தம்பதிகள் தங்கள் தலை தீபாவளியை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளியான நேற்று சென்னையில், காலை 6 மணியில் இருந்து 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை...

”இனி எல்லாமே இப்படித்தான்”..இன்று முதல் மின்சார வாரியம் முழுவதுமாக டிஜிட்டலுக்கு மாற்றம்
Spread the love தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று முதல் முழுவதுமாக டிஜிட்டல் முறைக்கு மாறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்தின் கீழ் மின் பகிர்மான கழகம், மின் உற்பத்தி கழகம், பசுமை எரிசக்தி கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. மின்சார வாரியத்திற்கு மின் சாதன கொள்முதல் உள்ளிட்ட பணிகளுக்காக மதிப்பீடு தயாரிப்பது, ஒப்புதல் பெறுவது, அனுமதி அளிப்பது போன்றவற்றுக்கு, காகித கோப்புகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. காகித கோப்புகள் தயாரிப்பு செலவு, தாமதம் மற்றும் தொலைந்து போவது உள்ளிட்ட காரணங்களால்...

அஜித்… அடுத்து சிவகார்த்திகேயன்… விஜய்யை வீழ்த்த பாச வலை வீசுகிறதா திமுக?
Spread the love நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி இருக்கும், அமரன் திரைப்படம் பரபரப்பு பட்டாசைப் பற்ற வைத்திருக்கிறது. இதற்கு காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், துணை முதலமைச்சர் உதயநிதியும் ஒன்று சேர்ந்து சிறப்புத் திரையிடலில் அமரன் படத்தைப் பார்வையிட்டதுதான். நண்பர் கலைஞானி கமல்ஹாசன் அழைப்பின் பேரில் இந்த திரைப்படத்தை பார்வையிட்டதாகவும், தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வீரத்தையும் அர்ப்பணிப்பையும் இயக்குநர் ராஜ்குமார் உணர்வுப்பூர்வமாகப் படமாக்கி இருப்பதாகவும் திரைப்படம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார்....

”திமுகவை ஒழித்த பிறகு தான் தீபாவளி….” – எல்.முருகன்!
Spread the love நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தனது இல்லத்தில் பட்டாசு வெடித்து மக்களுக்கும் தூய்மை பணியாளர்களுக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி பண்டிகை கொண்டாடினார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “உலகம் முழுவதும் இருக்கும் தமிழக மக்கள், சகோதர சகோதரிகள் என அனைவருக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள். இந்த தீபாவளி இரட்டிப்பு...

”உங்கள் முடிவை உடனே கைவிட வேண்டும்…” – மாநகராட்சி அன்புமணி வேண்டுகோள்!
Spread the love இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் சைதாப்பேட்டை, வியாசர்பாடி , திரு.வி.க நகர் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான செயற்கை புல்தரை கால்பந்து விளையாட்டுத் திடல்களை தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அமைப்புகளின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு மாநகராட்சி திரும்பப் பெற்றிருக்கிறது. பட்ட பிறகாவது சென்னை மாநகராட்சி அதன் முடிவை திரும்பப் பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது. ஆனாலும், மாநகராட்சியின் முடிவு முழுமையானதாக இல்லை. கால்பந்து திடல்கள் மட்டும் தனியாரிடம் ஒப்படைக்கப்படுவது தவிர்க்கப்பட்டால் மட்டும் போதாது....

”பெருந்திரளாக ஒன்றுக் கூடுவோம்..” – சீமான் அறிக்கை!
Spread the love இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஐம்பதாயிரம் ஆண்டுகள் பழமையான உலகின் முதல் மொழியான தமிழ்மொழியை தாய்மொழியாக கொண்ட தொல்குடியான நம் தமிழினத்தின் தாயக நிலப்பரப்பு, தமிழ்நாடு என்கிற வரையறுக்கப்பட்ட நிலப்பரப்பாக மட்டும் இல்லாமல், தமிழர்கள் என்ற தனித்த தேசிய இனம் நிலைத்து வாழும் நிலப்பகுதியாகவும் இருந்து வருகிறது. தனக்கென தனித்த இலக்கண செறிவுமிக்க இலக்கியம், தொன்றுதொட்ட வரலாறு, கலை, பண்பாடு என வாழ்வியல் விழுமியங்கள் அத்தனையும் கொண்டு தமிழர் என்கின்ற தேசிய இனம் வரலாற்றுத் தொடர்ச்சியோடு இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து மற்ற...

உச்சம் தொட்ட தங்கம் விலை.. இப்போ என்ன விலை தெரியுமா?
Spread the love தங்கம் விலை மீண்டும் ராக்கெட் வேகத்தில் ஏறத்தொடங்கியுள்ளது. இன்று தீபாவளி என்பதால், தங்கம் வாங்க நிறைய பேர் ஆர்வம் காட்டி வரும் நிலையில், சவரன் 60 ஆயிரம் ரூபாய்த்தை நெருங்கி நகைப்பிரியர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த சில தினங்களாகவே தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. சர்வதேச பொருளாதார நிலையற்ற தன்மை, பணவீக்கம், புவிசார் பதட்டங்கள் ஆகியவை தங்கம் விலை உயர்வுக்கு காரணம் என்று நிபுணர்கள் கூறு வருகின்றனர். இந்த நிலையில், இன்று தங்கம் விலை சவரனுக்கு 120 ரூபாய் உயர்ந்து,...

தமிழ்நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கொண்டாட்டம்.. புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
Spread the love தீபாவளி பண்டிகை இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் காலை முதலே புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர். கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. தஞ்சையில் தீபாவளி பண்டிகை களைகட்டி உள்ளது. மக்கள் அதிகாலையில் குளித்து புத்தாடை உடுத்தி வீட்டின் வாசல் முன்பு பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர். ஈரோடு வ.உ.சி பூங்கா மைதானத்தில் செயல்பட்டு வரும் நேதாஜி தினசரி காய்கறி சந்தை வியாபாரிகள் தீபாவளி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 50க்கும் மேற்பட வியாபாரிகள்...

